உணவுக்கடைக்காரர்களுக்கு வாடகை தள்ளுபடி, மானியம்

உணவுக்கடைக்காரர்களுக்கு வாடகை தள்ளுபடி, மானியம்

2 mins read

கொவிட்-19 தொற்று அதி­க­ரித்­ததை அடுத்து விதிக்­கப்­பட்­டுள்ள கட்­டுப்­பா­டு­க­ளால் பாதிப்பை எதிர்­கொண்­டு­வ­ரும் உண­வங்­காடி நிலையக் கடைக்­கா­ரர்­கள், வாட­கைத் தள்­ளு­படி, மானி­யங்­கள் ஆகிய வழி­களில் சற்று நிவா­ர­ணம் பெறு­வர்.

அந்த வகை­யில், மொத்­தம் $9 மில்­லி­யன் உதவி வழங்­கப்­ப­ட­ இருக்­கிறது.

மே, ஜூன் மாதங்­க­ளுக்­கான வாட­கை­யில் பாதித் தொகையை தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் தள்­ளு­படி செய்­யும் என்று நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற மூத்த துணை அமைச்­சர் ஏமி கோர் நேற்று தெரி­வித்­தார்.

இதன்­மூ­லம், சுற்­றுப்­புற வாரி­யம் அல்­லது அத­னால் நிய­மிக்­கப்­பட்ட நடத்­து­நர்­க­ளால் நிர்­வ­கிக்­கப்­படும் உண­வங்­காடி நிலை­யங்­களில் செயல்­படும் கிட்­டத்­தட்ட 6,000 உண­வுக்கடைக்­கா­ரர்­கள் பலன் அடை­வர்.

வாட­கைத் தள்­ளு­படி வகை­யில் கிட்­டத்­தட்ட $5.5 மில்­லி­யன் உதவி வழங்­கப்­படும்.

ஜூன் 1ஆம் தேதி முதல் குத்­த­கைக்­கா­லம் தொடங்­கும் புதிய உண­வுக் கடைக்­கா­ரர்­க­ளுக்­கும் அரை மாத வாடகை தள்­ளு­படி செய்­யப்­படும்.

"அண்­மை­யில் கடு­மை­யாக்­கப்­பட்ட கட்­டுப்­பா­டு­க­ளால் உண­வங்­காடி நிலைய உண­வுக்கடைக்­காரர்­க­ளின் தொழில் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. உணவு, பான நிலை­யங்­களில் அமர்ந்து உண்ண முடி­யாது. அதி­க­மா­னோர் வீட்­டி­லி­ருந்த­படி வேலை செய்­வ­தா­லும் பள்ளி மாண­வர்­கள் வீட்­டி­லி­ருந்து கற்று வரு­வதா­லும் வாடிக்­கை­யா­ளர் வருகை குறைந்­தி­ருக்­கும்," என்று போக்கு­வரத்து மூத்த துணை அமைச்­சரு­மான டாக்­டர் கோர் கூறினார்.

அத்­து­டன், உண­வங்­காடி நிலை­யங்­களில் அமர்ந்து உண்ண முடி­யாத இந்­தக் கால­கட்­டத்­தின்­போது மேசை துடைத்­தல், மையப்­ப­டுத்­தப்­பட்ட பாத்­தி­ரம் கழு­வும் சேவை போன்­ற­வற்­றுக்­கான கட்­ட­ணத்­திற்கு வாரி­யம் 100% மானி­யம் வழங்­கும் என்­றும் டாக்­டர் கோர் தெரி­வித்­தார். இந்த வகை­யில், ஏறத்­தாழ $3.3 மில்­லி­யன் மானி­யம் வழங்­கப்­படும்.

"பாது­காப்­பா­க­வும் சுவை­யா­க­வும் கட்­டுப்­ப­டி­யா­கும் விலை­யி­லும் தொடர்ந்து உணவு வழங்­கும் வகை­யில், தங்­க­ளது கடை­க­ளைத் தூய்­மை­யா­க­வும் திறந்­தும் வைத்­தி­ருக்க கடு­மை­யாக உழைத்து வரும் உண­வுக்­கடை நாய­கர்­களுக்கு நன்றி தெரி­விக்க விரும்பு­கி­றேன்," என்று டாக்­டர் கோர் சொன்­னார்.

அத்­து­டன், உணவு வாங்­கச் செல்­லும்­போது மறு­முறை பயன்­படுத்­தக்­கூ­டிய கலன்­களை எடுத்­துச் செல்­லும்­படி பொது­மக்­களை அவர் வலி­யு­றுத்தி இருக்­கி­றார்.

இந்­தச் சிர­ம­மான கால­கட்­டத்­தைச் சமா­ளிக்க வாட­கைத் தள்ளு­படி உண­வுக்கடைக்­கா­ரர்­க­ளுக்­குக் கைகொ­டுக்­கும் என்­றார் பூன் லே உண­வங்­காடி நிலையக் கடைக்­காரர்­கள் சங்­கத்­தின் தலை­வர் ஆன்டனி லோ.

"உண­வங்­காடி நிலை­யங்­களில் அமர்ந்து உண்ண விதிக்­கப்­பட்டு இருக்­கும் தடை ஏற்­ப­டுத்­தி­யுள்ள தாக்­கத்தை வாரி­யம் அறிந்­துள்­ளது மகிழ்ச்சி அளிக்­கிறது.

"உணவுக்கடைக்காரர்களின் கவ­லை­கள் சில­வற்­றைப் போக்­கும் வகை­யில் விரைந்­தும் சரி­யான நேரத்­தி­லும் வாரி­யம் நட­வ­டிக்கை எடுத்­தி­ருப்­பதை உண­வுக்­க­டைக்­கா­ரர்­கள் பாராட்­டு­கின்­ற­னர். நாங்­களும் எதிர்­கால, எதிர்­பா­ராத சூழல்­க­ளுக்கு ஆயத்­த­மா­கும் வகை­யில் மீட்­சித்­தி­றன் கொண்­ட­வர்­க­ளா­க­வும் சூழ­லுக்கு ஏற்ப மாறிக்­கொள்­ப­வர்­க­ளா­க­வும் இருக்க வேண்­டி­யது அவ­சி­யம்," என்று வணி­கர் சங்­கக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான திரு லோ தெரி­வித்­தார்.