கடைகள், உணவகங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டும் திறந்திருக்கலாம் மலேசியாவில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு

கடைகள், உணவகங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டும் திறந்திருக்கலாம் மலேசியாவில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு

2 mins read

கொவிட்-19 தொற்­றைக் கட்­டுப்­படுத்­தும் உத்­தி­களில் ஒன்­றாக 80% அர­சாங்க ஊழி­யர்­களும் 40% தனி­யார் துறை ஊழி­யர்­களும் வீட்­டி­லி­ருந்­த­படி வேலை செய்ய வேண்­டும் என்று மலே­சிய அர­சாங்­கம் அறி­வித்­துள்­ளது.

அர­சாங்­கப் பணி­யா­ளர்­கள் 750,000 பேரும் தனி­யார் துறை ஊழி­யர்­கள் கிட்­டத்­தட்ட 6.1 மில்­லி­யன் பேரும் இதில் அடங்­கு­வர் என்று மூத்த அமைச்­சர் இஸ்­மாயில் சப்ரி யாக்­கோப் தெரி­வித்து இருக்­கி­றார்.

"பேருந்து, இலகு ரயில் போன்ற பொதுப் போக்­கு­வ­ரத்து சேவை­களில் பய­ணி­கள் கொள்­ள­ளவு 50 விழுக்­கா­டா­கக் குறைக்­கப்­படும்," என்­றும் அவர் கூறி­னார்.

மலே­சி­யா­வில் இப்­போது நடப்­பி­லி­ருக்­கும் நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு ஆணை மேலும் கடு­மை­யாக்­கப்­படும் என்று நேற்று முன்­தி­னம் பிர­த­மர் முகை­தீன் யாசின் தெரி­வித்­தி­ருந்த நிலை­யில், அது­கு­றித்த விவ­ரங்­களை நேற்­றைய செய்­தி­யா­ளர் சந்­திப்­பின்­போது அமைச்­சர் சப்ரி வெளி­யிட்­டார்.

புதிய கட்­டுப்­பா­டு­க­ளின்­படி, கடைத்­தொ­கு­தி­கள், உண­வ­கங்­கள், மளி­கைக் கடை­கள் உள்­ளிட்­டவை காலை 8 மணி முதல் இரவு 8 மணி­வரை மட்­டுமே திறந்­தி­ருக்க வேண்­டும்.

அம­லாக்க நட­வ­டிக்­கை­களும் சாலைத் தடுப்­பு­களும் அதி­கப்­படுத்­தப்­படும்.

மக்­கள் நட­மாட்­டத்­தைக் குறைக்­கும் நோக்­கி­லேயே இந்த நட­வ­டிக்­கை­கள் அனைத்­தும் எடுக்­கப்­ப­டு­வ­தா­க அமைச்சர் சப்ரி குறிப்­பிட்­டார்.

நாளை மறு­நாள் 25ஆம் தேதி முதல் இந்­தப் புதிய கட்­டுப்­பா­டு­கள் நடப்­புக்கு வரும்.

மலேசியாவில் மூன்றாம் முறையாக நாடு முழுமைக்குமான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கடந்த 12ஆம் தேதி அறிவிக்கப் பட்டது. ஆனாலும், கொரோனா பரவல் தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கிறது.

அண்­மைய நாள்­க­ளாக, மலே­சி­யா­வில் அன்­றா­டம் 6,000க்கும் மேற்­பட்ட புதிய கொரோனா பாதிப்பு­கள் பதி­வாகி வரு­கின்­றன. நேற்று அங்கு புதிதாக 6,320 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது; 50 பேர் இறந்து விட்டனர்.

நிரம்பி வழியும் மருத்துவமனைகள்

இத­னி­டையே, கோலா­லம்­பூர் உட்­பட கிள்­ளான் பள்­ளத்­தாக்­குப் பகு­தி­யில் உள்ள பொது மருத்­து­வ­ம­னை­கள் 113% கொள்­ள­ள­வு­டன் செயல்­பட்டு வரு­வ­தாக சுகா­தா­ரத் துறை தலைமை இயக்­கு­நர் டாக்­டர் நூர் ஹிஷாம் அப்­துல்லா தெரி­வித்­துள்­ளார்.

"அதி­க­மான நோயா­ளி­கள் மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தால் அதைச் சமா­ளிக்க, படுக்கை மற்­றும் சில கரு­வி­க­ளு­டன் பொதுப் பிரி­வு­களும் தற்­கா­லி­க­மாக தீவிர சிகிச்­சைப் பிரி­வுகளாக மாற்­றப்­பட வேண்­டி­யுள்­ளது. இருந்­தா­லும், கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டாத மற்ற நோயா­ளி­க­ளுக்கு, தேவை­யான முக்­கிய மருத்­து­வப் பரா­ம­ரிப்பு கிடைக்­கும் வாய்ப்பை இது குறைக்­கிறது," என்று ஃபேஸ்புக் வழி­யாக டாக்­டர் நூர் ஹிஷாம் கூறி­யி­ருக்­கி­றார்.

மலேசியாவில் அடுத்த மாதம் 7ஆம் தேதி வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருக்கும்.