விமான நிலைய ஊழியர்களின் வேலையிடம் பிரிப்பு

விமான நிலைய ஊழியர்களின் வேலையிடம் பிரிப்பு

3 mins read
60098d61-2cc8-4cec-a3df-5653843b2b63
கிருமித்தொற்று அபாயம் அதிகமுள்ள நாடுகளுக்குப் பயணம் செய்வோர் முனையம் 3ல் உள்ள 'ஸோன் 1' பகுதிக்கு முழு பாதுகாப்பு உடையில் வாகனம் ஒன்றில் நேற்று அழைத்துச் செல்லப்பட்டனர்.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

விமான நிலைய ஊழி­யர்­கள் 14,000 பேரை மூன்று தனிப் பிரி­வு­க­ளா­கப் பிரித்து, அதிக அபா­ய­மு­டைய பகு­தி­யில் பணி­பு­ரி­யும் 4,400 ஊழி­யர்­க­ளுக்கு கொரோனா கிரு­மித்­தொற்று பாதிப்பு ஏற்

படா­மல் பாது­காப்­ப­து­டன் அவர்­களை மற்ற ஊழி­யர்­கள், பொது­மக்­கள் ஆகி­யோ­ரி­ட­மி­ருந்து தனி­மைப்­ப­டுத்த உள்­ளது சாங்கி விமான நிலை­யக் குழு­மம்.

கிரு­மித்­தொற்று பர­வும் அபா­யத்­தைக் குறைக்­கும் நோக்­கில், அதிக அபா­ய­முள்ள பகு­தி­யில் இருக்­கும் ஊழி­யர்­க­ளுக்கு ஏழு நாள்­க­ளுக்கு ஒரு முறை பிசி­ஆர் பரி­சோ­தனை மற்­றும் மூன்­றா­வது நாளில் ரேப்­பிட் ஆண்­டி­ஜென் பரி­சோ­தனை செய்­வது, இளம், ஏற்­கெ­னவே தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட ஊழி­யர்­களை மட்­டும் அந்­தப் பகு­தி­யில் பணி­யில் அமர்த்­து­வது, உரிய தனி­ந­பர் பாது­காப்பு சாத­னங்­களை அவர்­கள் எல்லா நேரங்­க­ளி­லும் அணிந்­தி­ருப்­பதை உறு­திப்­ப­டுத்­து­வது போன்ற கூடு­தல் நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­பட உள்­ளன.

அதிக அபா­ய­முள்ள நாடு­க­ளி­லி­ருந்து வரும் பய­ணி­கள் முனை­யங்­கள் 1, 3 வழி­யா­கச் செல்­லா­மல், முனை­யம் 2ல் தூர­மாக உள்ள வாயில்­க­ளுக்கு பாது­காப்­புத் துணை­யு­டன் அழைத்­துச் செல்­லப்­ப­டு­வர். அங்­கி­ருந்து பய­ணி­கள் அவர்­க­ளது தனி­மைப்

படுத்­தல் இடங்­க­ளுக்கு பேருந்து மூலம் அழைத்­துச் செல்­லப்­ப­டு­வர் என நேற்று சாங்கி விமான நிலை­யக் குழு­மம் தெரி­வித்­தது.

இரண்­டாம் முனை­யத்­தில் தற்­போது மறு­சீ­ர­மைப்­புப் பணி­கள் நடை­பெ­று­வ­தால் அங்கு பய­ணி­க­ளுக்கு குடி­நு­ழைவு அனு­மதி தொடர்­பான பணி­கள் நடை­

பெ­று­வ­தில்லை.

இந்த நட­வ­டிக்­கை­கள் படிப்

படி­யாக அறி­மு­க­பப்­டுத்­தப்­பட்டு, கூடு­தல் கட்­டுப்­பா­டு­கள் ஜூன் 13ல் முடி­வ­டைந்து பொது­மக்­கள் பயன்­பாட்­டுக்­கா­கத் திறந்து

விடப்­ப­டும்­போது சாங்கி 1, 3 முனை­யங்­க­ளி­லும் ஜுவல் சாங்­கி­யி­லும் முழு­மை­யாக செயல்­பாட்­டுக்கு கொண்­டு­வ­ரப்­படும்.

விமான நிலை­யத்­தின் நடை­மு­றைச் செயல்­பா­டு­க­ளின் அடிப்­படை மறு­வ­டி­வ­மைப்பு இது என சாங்கி விமான நிலை­யக் குழு­மத்­தின் தலைமை நிர்­வாகி லீ சியோ ஹியாங் செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் தெரி­வித்­தார்.

வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வரும் பய­ணி­க­ளு­டன் ஏற்­படும் குறு­கி­ய­கா­லத் தொடர்­பும் அபா­ய­க­ர­மா­னது எனும் அனு­மா­னத்­தின் அடிப்­ப­டை­யில் தற்­போது இந்த நடை­மு­றை­கள் எடுக்­கப்­ப­டு­கிறது என­அ­வர் குறிப்­பிட்­டார்.

சாங்கி விமான நிலைய கிரு­மித்­தொற்று குழு­மத்­தில் இந்த மாதம் 100க்கும் அதி­க­மா­னோ­ருக்­குத் தொற்று ஏற்­பட்­டுள்­ள­தா­லும் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் பலர் வெகு­வா­கப் பர­வும் B1617 உரு­மா­றிய கொரோனா கிரு­மித்­தொற்­றுக்கு ஆளாகி இருப்­ப­தா­லும் இந்த நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

நீண்டநேர நட­வ­டிக்­கை­கள் முன்பு அபா­ய­க­ர­மா­ன­வை­யா­கக் கரு­தப்­பட்­டா­லும் தற்­போது பய­ணி­க­ளு­ட­னான ஊழி­யர்­க­ளின் எந்­தத் தொடர்­பும் அபா­ய­க­ர­மா­ன­தா­கக் கரு­தப்­ப­டு­கிறது.

விமா­ன­நி­லைய கிரு­மித்­தொற்­றுக் குழு­மம் தொடர்­பில் விசா­ரா­ணை­யும் பகுப்­பாய்­வும் மேற்­கொண்­டதை அடுத்து சாங்கி விமான நிலை­யக் குழு­மம் இந்த நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளது. விமான நிலை­யத்­தில் பொது­மக்­கள் கூடும் பகு­தி­கள் குறைந்த அபா­ய­மு­டைய 'ஸோன் 3' பகுதி எனக் கரு­தப்­படும்.

புறப்­பாடு குடி­நு­ழை­வுப் பகுதி, மத்­திய இடை­மாற்­றுப் பகுதி போன்­றவை அடுத்த கூடு­தல் அபா­ய­முள்ள 'ஸோன் 2' பகு­தி­யாக வகைப்­ப­டுத்­தப்­படும்.

பய­ணி­கள் புறப்­பாடு, வருகை வாயில்­கள், வருகை குடி­நு­ழைவு கூடம், பய­ணப் பெட்­டி­க­ளைப் பெற்­றுக்­கொள்­ளும் கூடங்­கள் போன்­றவை ஆக அதிக அபா­ய­முள்ள 'ஸோன் 1' பகு­தி­யாக இருக்­கும். அதில் பணி­பு­ரி­யும் ஊழி­யர்­கள், அவர்­க­ளது வேலை நேரத்­தில் மற்ற பகு­தி­க­ளுக்­குச் செல்­லவோ, அங்கு ஊழி­யர்­க­ளு­டன் கலந்­து­ற­வா­டவோ முடி­யாது. அவர்­கள் முகக்­க­வ­சம், கையு­றை­கள், அறுவை சிகிச்சை உடை போன்­ற­வற்றை எப்­போ­தும் அணிந்­தி­ருப்­பர். மற்ற பகுதி ஊழி­யர்­க­ளுக்கு 14 நாள்­க­ளுக்கு ஒரு­முறை பிசி­ஆர் பரி­சோ­த­னை­யும் ஏழா­வது நாளில் ரேப்­பிட் ஆன்­டி­ஜன் பரி­சோ­த­னை­யும் செய்­யப்­படும். கொரோனா தொற்று இருக்­கும் வரை புதிய நடை­மு­றை­கள் செயல்­பாட்­டில் இருக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.