மலேசியா: புதிய உச்சமாக 7,478 பேருக்குத் தொற்று

மலேசியா: புதிய உச்சமாக 7,478 பேருக்குத் தொற்று

2 mins read

மலே­சி­யா­வில் இதற்­கு­முன்­னி­ராத வகை­யில் நேற்று ஒரே நாளில் 7,478 பேருக்கு கொவிட்-19 தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது.

இப்­ப­டித் தொடர்ந்து நாளுக்கு நாள் புதிய உச்­ச­மாக கொரோனா தொற்று பதி­வாகி வரும் நிலை­யில், இன்­னும் மோச­மான நிலை ஏற்­ப­ட­லாம் என்­ப­தால் அடுத்த இரு வாரங்­கள் மிக முக்­கி­ய­மான கால­கட்­டம் என்று அந்­நாட்­டின் சுகா­தார தலைமை இயக்­கு­நர் நூர் ஹிஷாம் அப்­துல்லா எச்­ச­ரித்து இருக்­கி­றார்.

புதிய பாதிப்­பு­கள் அதி­க­ரிப்பை அடுத்து, மோச­மான நிலையை எதிர்­கொள்ள மலே­சி­யர்­கள் தங்­களைத் தயார்ப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டி­யது அவ­சி­யம் என்று டாக்­டர் ஹிஷாம் கூறி­யி­ருக்­கி­றார்.

"உல­க­ள­வில் நில­வும் கிரு­மித்­தொற்­றுச் சூழலை அடுத்து மூன்­றா­வது நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு ஆணை பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. புதிய உரு­மா­றிய கிரு­மி­கள் அதி­கம் பரவி, அதி­க­மான இறப்­பு­களை ஏற்­ப­டுத்­த­வல்­லவை. ஆகை­யால், மக்­கள் 'சுய­மு­டக்­கத்­தைப்' பின்­பற்று­மா­றும் முடிந்­த­வரை அடுத்த இரு வாரங்­க­ளுக்கு வீடு­க­ளி­லேயே முடங்­கி­யி­ருக்­கு­மா­றும் அறி­வு­றுத்­தப்­ப­டு­கின்­ற­னர். மலே­சி­யா­வில் கொரோனா தொற்­றுச் சங்­கி­லியை உடைக்க, நாம் இதைச் செய்தாக வேண்டியுள்ளது," என்றார் டாக்டர் ஹிஷாம்.

கிருமிப் பரவல் குறைவதற்கான அறிகுறிகள் தென்படாத நிலையில், நாடு தழுவிய தடுப்பூசி நடவடிக்கை உடனடியாக முடுக்கிவிடப்பட வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

"சிலாங்­கூ­ரில் தங்­கள் ஊழி­யர்­க­ளுக்­காக முத­லா­ளி­கள் தடுப்­பூசி வாங்க முடி­யும். அதேபோல, தனி­யார் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு நிலை­யங்­களும் தடுப்­பூசி வாங்க அர­சாங்­கம் அனு­ம­திக்க வேண்­டும். இல்­லை­யேல், இப்­போ­தைய வேகத்­தி­லேயே சென்­றால், மக்­கள்­தொகை­யில் குறைந்­தது 80 விழுக்­காட்­டி­ன­ருக்­குத் தடுப்­பூசி போட வேண்­டும் எனும் இலக்கை நம்­மால் எட்­டவே இய­லாது," என்­றார் மலே­சிய மருத்­து­வச் சங்­கத் தலை­வர் எம்.சுப்­பி­ர­மணி­யம்.

இந்நிலையில், அறி­குறி இல்­லா­தோர் பொது­வாக கொரோனா பரி­சோ­த­னைக்­குச் செல்­ல­மாட்­டார்­கள் என்­ப­தால் சமூ­கத்­தில் உண்­மை­யான பாதிப்பு இன்­னும் அதி­க­மாக இருக்­கும் என்று பொதுச் சுகா­தார மருத்­து­வர்­கள் சங்­கத்­தின் தலை­வர் ஸைனல் அரி­ஃபின் ஓமர் தெரி­வித்துள்­ளார்.

'பிரசாரனா' தலைவரிடம் போலிஸ் விசாரணை

இதற்­கி­டையே, இலகு ரயில்­கள் மோதல் தொடர்­பாக செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் பங்­கேற்­ற­போது, பொதுப் போக்­கு­வ­ரத்து சேவை நிறு­வ­ன­மான 'பிர­சா­ரனா'வின் தலை­வர் தஜு­தீன் அப்­துல் ரஹ்­மான் முகக்­க­வ­சம் அணிந்­தி­ரா­ததை அடுத்து, போலிஸ் அவரை விசா­ரித்து வரு­கிறது.

முகக்­க­வ­சத்­திற்­குப் பதி­லாக முகம் முழு­வ­தை­யும் மறைக்­கும் வித­மாக திரு தஜூ­தீன் முகக்­காப்பு அணிந்­தி­ருந்­தார். கொவிட்-19 நிலை­யான வழி­காட்டி நெறி­மு­றை­களுக்கு இணங்கி நடக்க முகக் ­காப்பு அணி­வதே போது­மா­னது என்று தாம் நினைத்­தி­ருந்­த­தாக அவர் சொன்­னார்.