அமைச்சர்: சிங்கப்பூரில் கொவிட்-19 விதிமுறைகளை மேலும் கடுமையாக்குவதற்கான தேவை அனேகமாக இல்லை

சமூகத்தில் கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நடப்பில் உள்ள நடைமுறைகள் இதுவரை பலன் தந்திருப்பதாக நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் இன்று (மே 28) தெரிவித்துள்ளார்.

“எனவே, கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்குவதற்கான தேவை இருப்பதாக எங்களுக்குத் தோன்றவில்லை,” என்று அவர் கூறினார்.

எனினும், சிங்கப்பூரர்கள் தொடர்ந்து விழிப்புடன் இருந்து, தங்களது வீடுகளுக்கு வெளியில் நடவடிக்கைகளையும் நடமாட்டத்தையும் குறைத்துக்கொள்வதன் மூலம் தங்களது பங்கையாற்ற வேண்டும் என்று திரு வோங் அறிவுறுத்தினார்.

இதுதொடர்பான முழு விவரங்கள், கொவிட்-19க்கு எதிரான அமைச்சுகள்நிலைப் பணிக்குழு வரும் திங்கட்கிழமை நடத்தும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்படும் என்று அவர் சொன்னார்.

ஏற்கெனவே கடுமையாக்கப்பட்ட கொவிட்-19 கட்டுப்பாடுகளின் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் வர்த்தகங்களுக்கான மேம்பட்ட ஆதரவுத் திட்டங்களை அறிவிக்க இன்று மெய்நிகர் வழியாக செய்தியாளர்களைச் சந்தித்தபோது திரு வோங் இதனைத் தெரிவித்தார்.

கொவிட்-19க்கு எதிரான அமைச்சுகள்நிலைப் பணிக்குழுவின் இணைத் தலைவரான திரு வோங், சமூக அளவில் கிருமித்தொற்று எண்ணிக்கை நிலைப்பட்டிருப்பதாகச் சொன்னார்.

“சொல்லப் போனால், சமூகத்தொற்று எண்ணிக்கை சற்று குறைந்திருக்கிறது,” என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!