மலேசியாவில் ஒரே நாளில் 9,020 பேருக்குத் தொற்று; இதுவரை இல்லாத புதிய உச்சம்

மலேசியாவில் ஒரே நாளில் 9,020 பேருக்குத் தொற்று; இதுவரை இல்லாத புதிய உச்சம்

1 mins read

மலே­சி­யா­வில் கிரு­மித் தொற்­று­சம்­ப­வங்­கள் நாள்ேதா­றும் அதி­க­ரித்து வரு­கின்­றன. வெள்­ளிக் கிழமை அன்று மட்­டும் 8,290 புதிய தொற்­றுச் சம்­ப­வங்­கள் ஏற்­பட்­டன.

இந்த நிலை­யில் மறு­நா­ளான நேற்று இது­வரை இல்­லாத புதிய உச்­ச­மாக ஒரே நாளில் 9,020 தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யுள்­ளன.

கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­வோ­ரின் எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­ரித்து வரு­வ­தால் பிர­த­மர் முகை­தீன் யாசின் நாடு தழு­விய முழு முடக்­கத்தை அறி­வித்­துள்­ளார்.

ஜூன் 1ஆம் தேதி­யி­லி­ருந்து 14ஆம் தேதி வரை அத்­தி­யா­வ­சிய சேவை­க­ளைத் தவிர அனைத்து நட­வ­டிக்­கை­களும் முடக்­கப்­படும் என்று அவர் கூறி­யுள்­ளார்.

இத­னால் மலே­சியா மீண்­டும் முடக்­க­நி­லைக்­குத் தயா­ராகி வரு­கிறது.

இந்த நிலை­யில் மலே­சிய வர்த்­தக நிறு­வ­னங்­கள், முழு முடக்கம் பற்றி அதிக விவ­ரங்­க­ளைக் கேட்­டுள்­ளன.

மலே­சிய சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளின் சங்­கத் தலை­வர் மைக்­கல் காங், முடக்­கக் கால­கட்­டத்­தில் வர்த்­த­கங்­கள் உயிர்­பி­ழைப்­ப­தற்­கான தீர்­வு­கள் இருக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

"எங்­க­ளு­டைய ஆய்­வுப்­படி முழு முடக்­கத்­தால் 40 விழுக்­காடு சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளின் செயல்­பா­டு­கள் முற்­றி­லும் பாதிக்­கப்­படும். இத­னால் அர­சாங்­கம், நிறு­வ­னங்­கள் ஆகிய இரு தரப்­புக்கும் நன்­மை­ய­ளிக்­கும் தீர்­வு­களை வழங்க வேண்­டும்," என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மலே­சி­யா­வில் கடந்த ஐந்து நாட்­க­ளா­கவே தொடர்ந்து தொற்றுச்­ சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­துள்ள நிலை­யில் மொத்­தம் பாதிக்­கப்பட்­டோ­ரின் எண்­ணிக்கை 558,534க்குக் கூடி­­ உள்ளது.

(சிங்கப்பூருக்கு பொருள் விநியோகம் பாதிக்காமல் இருக்க மலேசியாவுடன் அணுக்கமாகச் செயல்படும் என்று சிங்கப்பூர் கூறியுள்ளது. பக்கம்: 2)