இந்தியாவில் கிருமி பாதிப்பு குறைகிறது

இந்தியாவில் கிருமி பாதிப்பு குறைகிறது

2 mins read

கொவிட்-19 கிரு­மி­யால் மிக­வும் மோச­மாக பாதிக்­கப்­பட்ட நாடு ­க­ளில் அமெ­ரிக்­கா­வுக்கு அடுத்­த­தாக இந்தியா 2வது இடத்­தில் இருந்து வருகிறது. இருந்தாலும் இந்தியாவில் தற்போது நிலைமை சற்று மேம்பட்டு வருகிறது.

மத்­திய, மாநில அர­சு­களின் தீவிர முயற்சிகளால் கடந்த சில நாட்­க­ளாக தொற்­றுச் சம்­ப­வங்­கள் குறைந்து வரு­கின்­றன. ஆனால் இந்த நிலை தொடர்ந்து நீடிக்­குமா என்­பது தெரி­ய­வில்லை.

கடந்த ஆறு வாரங்­களில் முதல் முறை­யாக நேற்று குறை­வான எண்­ணிக்­கை­யில் 1.73 லட்­சம் (173,000) புதிய சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யுள்­ளன. அதா­வது கடந்த 24 மணி நேரத்­தில் ஒரு லட்­சம் தொற்­றுச்­சம்­ப­வங்­கள் குறைந்­துள்­ளன.

கடந்த 45 நாட்­களில் நேற்று சிறிய அள­வில் பாதிப்பு அதி­க­ரித்­துள்­ள­தும் இதுவே முதல் முறை.

இதற்கு முன்பு ஏப்­ரல் 12ஆம் தேதி அன்­று­தான் ஆகக் குறை­வான எண்­ணிக்­கை­யில் 1.61 லட்­சம் தொற்­று­கள் பதி­வா­கி­யுள்­ளன.

கடந்த 24 மணி நேரத்­தில் 3,617 பேர் தொற்­றுக்­குப் பலி­யாகிவிட்­ட­னர்.

இத­னால் மொத்­தம் உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 322,512ஐத் தொட்­டுள்­ளது. அதே சம­யத்­தில் கடந்த 24 மணி நேரத்­தில் 284,601 பேர் குண மடைந்­துள்­ள­னர்.

இது­வரை 20.89 கோடி பேருக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது. கடந்த 24 மணி நேரத்­தில் மட்­டும் 3,062,747 முறை தடுப்­பூ­சி­கள் போடப்­பட்­டுள்­ளன.

சென்ற 24 மணி நேரத்­தில் ஆக அதிக எண்­ணிக்­கை­யில் தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வான மாநி­லங்­களில் தமி­ழ­கம் முத­லி­டத்­தில் உள்­ளது. மொத்­தம் 31,079 பேர் புதி­தா­கப் பாதிக்­கப்­பட்­ட­னர்.

இதற்கு அடுத்­த­தாக கர்­நா­டகா, கேரளா, மகா­ராஷ்­டிரா, ஆந்­திரா ஆகிய மாநி­லங்­கள் உள்­ளன.

ஆனால் டெல்­லி­யில் தொற்று குறைந்து வரு­கிறது.

இதற்­கி­டையே கிரு­மிப் பர­வல் 2வது அலை­யில் நாடு முழு­வ­தும் 550 மருத்­து­வர்­கள் கொரோனாவுக்­குப் பலி­யா­கி­விட்­ட­தாக நேற்று இந்­திய மருத்­துவ சங்­கம் தெரி­வித்­தது. உண்­மை­யான எண்­ணிக்கை இதை­விட அதிகமாக இருக்­க­லாம் என்று சங்­கம் கூறி­யது.

டெல்லி (104), பீஹார் (96), உத்­த­ரப்­ பி­ர­தே­சம்(53) ஆகிய மாநி­லங்­களில் அதிக மருத்து வர்­கள் கிரு­மித்தொற்­றுக்கு உயி­ரி­ழந்­துள்­ள­னர்.