சிங்கப்பூரில் புதிதாக 25 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 19 பேர் சமூக அளவில் பாதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
சமூக அளவில் பாதிக்கப்பட்ட சம்பவங்களில் ஆறு , தொடர்பில்லாதவை.எஞ்சிய 13 சம்பவங்கள் முன்னைய சம்பவங்களுடன் தொடர்புடையவை. 11 பேர் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஆறு பேர் வெளிநாட்டில் கிருமித்தொற்று ஏற்பட்டு இங்கு வந்தவர்கள். இந்தப் புதிய சம்பவங்களுடன் சிங்கப்பூரில் இதுவரை கிருமி தொற்றியோரின் எண்ணிக்கை 62,028க்கு உயர்ந்துள்ளது. மேல் விவரங்கள் இன்றிரவு அறிவிக்கப்படும்.

