தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

26 நிறுவனங்களுக்கு வேலை நிறுத்த ஆணை

2 mins read

இம்­மா­தம் 16ஆம் தேதி கட்­டுப்­

பா­டு­கள் கடு­மை­யாக்­கப்­பட்ட பின்­னர் பாது­காப்பு நிர்­வாக விதி­மு­றை­களை 65 கட்­டு­மான நிறு­வ­னங்­கள் மீறி­ய­தா­கக் கண்­ட­றி­யப்­பட்டு உள்­ளது. அவற்­றில் 26 நிறு­வ­னங்­கள் மூன்று நாட்­க­ளுக்கு வேலைகளை நிறுத்த உத்­த­ர­வி­டப்­பட்­டன.

வேலைத்­த­ளத்­தில் சேஃப்என்ட்ரி பதிவு செய்­து­கொள்­ளா­மல் ஊழி­யர்­களை அல்­லது வரு­கை­யா­ளர்­களை நுழைய அந்த 26 கட்­டு­மான நிறு­வ­னங்­களும் அனு­ம­தித்­த­தா­கக் கண்­ட­றி­யப்­பட்­டது. இரு வேலைத்­

த­ளங்­கள் கொவிட்-19 கிருமி தொற்­றிய ஊழி­யர்­களை அனு­ம­தித்­த­தன. இதன் மூலம் ஊழி­ய­ர­ணி­யில் கொவிட்-19 கிரு­மிப் பர­வும் அபா­யம் எழுந்­த­தாக கட்­டட, கட்­டு­மான ஆணை­யம் கூறி­யது.

விதி­க­ளைப் பின்­பற்­றத் தவ­றிய கார­ணத்­துக்­காக இந்த 26 நிறு­வ­னங்­களும் அனைத்­து­வி­த­மாக நட­வ­டிக்­கை­க­ளை­யும் வேலைத்­

த­ளத்­தில் உட­ன­டி­யாக நிறுத்த மூன்று நாள் தடை உத்­த­ரவை ஆணை­யம் பிறப்­பித்து உள்­ளது.

இந்த நிறு­வ­னங்­கள் தங்­க­ளது பாது­காப்பு நிர்­வா­கத் திட்­டங்­களை மறு­ஆய்வு செய்து, இணக்­க­மற்ற அம்­சங்­க­ளைக் களைந்து ஆணை­யத்­துக்கு விதி­க­ளுக்கு உட்­பட்டு நடப்­ப­தாக அறிக்கை அளித்த பின்­னர் வேலை நிறுத்த ஆணை விலக்­கிக்­கொள்­ளப்­படும்.

கொவிட்-19 கிரு­மி தொற்­றிய சம்­ப­வங்­கள் கண்­ட­றி­யப்­படும் வேலைத்­த­ளங்­கள் முழு­மை­யாக கிருமி நீக்க நட­வ­டிக்­கை­க­ளைச் செய்த பின்­னர் மீண்­டும் வேலை­

க­ளைத் தொடங்­க­லாம் என ஆணை­யம் தெரி­வித்து உள்­ளது.

கட்­டு­மான ஊழி­ய­ர­ணி­யில் கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைக் குறைக்­கும் பணி­யில் கட்­டு­மான நிறு­வ­னங்­கள் தங்­க­ளது பங்கை ஆற்­று­கின்­ற­னவா என்­பதை உறுதி செய்ய வேலைத்­த­ளங்­களில் ஆணை­யம் சோத­னை­களை மேற்­கொண்டு வரு­கிறது. இது­போன்ற நட­வ­டிக்­கை­கள் கட்­டு­மா­னத் தளங்­களில் வேலை­கள் எப்­போ­தும்­போல நடை­பெற வழி­வ­குக்­கும்.

சோதனை செய்­யும் இடங்­க­ளின் எண்­ணிக்­கையை ஆணை­யம் அதி­க­ரித்­துள்­ளது. கட்­டு­மா­னத் தளங்­களில் வாரத்­திற்கு 900 சோத­னை­களை அது மேற்­கொண்டு வரு­கிறது. இது கடந்த ஆண்­டை­கக் காட்­டி­லும் மும்­ம­டங்கு அதி­கம். 2020 ஜூன் மாதத்­தில் வாரத்­திற்கு சரா­ச­ரி­யாக 300 சோத­னை­கள் கட்டு­மா­னத்­த­ளங்­களில் நடத்­தப்­பட்­டன.

வேலைத்­த­ளங்­க­ளின் நுழை­வுப் பகு­தி­யில் 'சேஃப்என்ட்ரி' வரு­கைப் பதிவை உறுதி செய்­வது அல்­லது 'டிரேஸ்­டு­கெ­தர்' மூலம் மட்­டுமே சேஃப்என்ட்ரி பதிவை மேற்­கொள்­வது போன்­ற­வற்­றின் மீது அதிக அக்கறை செலுத்தாதது இச்­சோ­த­னை­கள் வழி கண்­ட­றி­யப்­பட்­ட­தா­க­வும் இது கவ­லைக்­கு­ரிய அம்­சம் என்­றும் ஆணை­யம் குறிப்­பிட்­டது.

ஊழி­யர்­க­ளை­யும் வரு­கை­யா­ளர்­க­ளை­யும் கண்­கா­ணிக்க பாது­காப்பு நிர்­வாக அதி­கா­ரி­களை நிய­மிக்­காத கட்­டு­மான நிறு­வ­னங்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான அம­லாக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று ஆணை­யம் எச்­ச­ரித்து உள்­ளது.

பல­த­ரப்­பட்ட கட்­டு­மா­னத் தளங்­களில் வேலைக்­கா­க­வும் சேவைக்­கா­க­வும் வந்து செல்­லும் துணைக் குத்­த­கை­யா­ளர்­கள், விநி­யோ­கப் பணி­யா­ளர்­கள், இதர சேவை வழங்­கு­நர்­கள் போன்­றோர் பாது­காப்பு நிர்­வாக விதி­க­மு­றை­களை பின்­பற்­று­கி­றார்­களா என்­ப­தைக் கண்­கா­ணிப்­பது அவ­சி­யம்.

மேலும் இவர்­கள் கட்­டு­மா­னத் தளங்­களில் ஒரு­வ­ரோடு மற்­ற­வர் ஒன்­று­சே­ரா­மல் இருப்­ப­தை­யும் பாது­காப்பு நிர்­வாக அதி­கா­ரி­கள் கவ­னிக்க வேண்­டும் என ஆணை­யம் தெரி­வித்து உள்­ளது.

கட்டுமானத்தளத்தில் 'சேஃப்என்ட்ரி' விதிமீறல்