12 முதல் 39 வயது வரையுள்ளோர் இன்று முதல் தடுப்பூசி போட பதியலாம்

12 முதல் 39 வயது வரையுள்ளோர் இன்று முதல் தடுப்பூசி போட பதியலாம்

2 mins read

தேசிய தடுப்­பூ­சித் திட்­டத்­தின் அடுத்த கட்­ட­மாக 12 வய­தி­லிருந்து 39 வயது வரை­யுள்­ளோ­ருக்கு தடுப்­பூசி போடப்­பட உள்ளது. இந்த வய­துப் பிரி­வி­னர் இன்று முதல் vaccine.gov.sg என்ற இணை­யத்­த­ளத்­தில் தடுப்பூசி போட பெய­ரைப் பதிவு செய்­யலாம்.

தொற்று பாதிப்­பி­லி­ருந்து குண­ம­டைந்­தோ­ரும் ஒரு­முறை போட்­டுக்­கொள்­ளும் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்ள வேண்­டும் என ஆலோ­சனை கூறப்­ப­டு­கிறது. இத­னால் நோயெ­திர்ப்பு திறன் மேலும் அதி­க­ரிக்­கும் என்­ப­தற்கு சான்று உள்­ளது என்று சுகா­தார அமைச்சு நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

முதல் இரு வாரங்­கள் சிங்­கப்­பூ­ரர்­கள் பதிவு செய்ய முன்­னு­ரிமை அளிக்­கப்­படும் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் நேற்று நடை­பெற்ற அமைச்­சு­கள் நிலை பணிக்­கு­ழுக் கூட்­டத்­தில் கூறி­னார்.

"இந்த வய­து­களில் ஏறக்­குறைய 1.5 மில்­லி­யன் பேர் உள்­ள­னர். இதுவே தடுப்­பூசி போடப்­பட வேண்­டிய பெரிய வய­துப் பிரிவு," என்­றார் அமைச்­சர் ஓங்,

இவ்­வாண்டு 12 வய­தா­கும் பிள்­ளை­கள் தடுப்­பூ­சிக்­குப் பதிய தங்­கள் பிறந்­த­நாளை கடந்­தி­ருக்­க­வேண்­டும்.

பதிவு செய்த பின்­னர் குறுஞ்­செய்தி மூலம் தடுப்­பூ­சிக்­கான நாள் குறித்து அறி­விக்­கப்­படும்.

சிறார்­கள் அல்­லது 18 வய­துக்­குக் குறைந்­தோர் தடுப்­பூ­சிக்­குப் பதிவு செய்ய பெற்­றோர் அல்­லது பாது­கா­வ­ல­ரின் ஒப்­பு­தல் தேவை. தடுப்­பூசி நிலை­யத்­துக்கு 12 வய­தும் அதற்­கும் குறைந்த வய­து­டை­வர்­க­ளு­டன் பெற்­றோர் அல்­லது பாது­கா­வ­லர் உடன் செல்ல வேண்­டும். 13 வய­தும் அதற்­கும் மேற்­பட்ட வய­தும் உடை­ய­வர்­க­ளுக்கு இது கட்­டா­ய­மில்லை.

இது­வ­ரை­யில் 4.4 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான தடுப்­பூசி மருந்­து­கள் போடப்­பட்­டுள்­ள­தாக அமைச்­சர் ஓங் குறிப்­பிட்­டார்.

மக்­கள்தொகை­யில் 44 விழுக்­காடு, அதா­வது 2.2 மில்­லி­யன் பேர் முதல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டுள்­ள­னர் என்­றார் அவர்.

60 வய­துக்கு மேற்­பட்ட மூத்த குடி­மக்­களில் முக்­கால்­வா­சிப் பேர், 45 முதல் 59 வயது வரை­யுள்­ளோ­ரில் 74%, 40 முதல் 44 வயது வரை­யுள்­ளோர் 65% முதல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டுள்­ள­னர் என்று அவர் கூறி­னார்.

மாண­வர்­களில் 85 விழுக்­காட்­டி­னர் முதல் தடுப்­பூ­சி­யைப் பெற்­றி­ருக்­கி­றார்­கள் அல்­லது தடுப்­பூசி போட பதிவு செய்­துள்­ள­னர்.

"தற்­போது அன்­றா­டம் ஏறக்­கு­றைய 49,000 அள­வு­ தடுப்­பூசி போடப்­ப­டு­கிறது. அன்­றாட தடுப்­பூசி செலுத்­தும் எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­ரிக்­கும் ஆற்றல் சிங்­கப்­பூ­ரி­டம் உள்­ளது. எனி­னும், தடுப்­பூ­சி­கள் சீரா­க­வும் தொடர்ந்து வந்­து­கொண்டே இருப்­ப­தும் முக்­கி­யம்," என்று அவர் கூறி­னார்.