ஜுவல் சாங்கி விமான நிலையம் நாளை மறுநாள் மீண்டும் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் சாங்கி விமான நிலையத்தில் கொவிட்-19 குழுமம் உருவானதை அடுத்து, கடந்த மாதம் 13ஆம் தேதியன்று ஜுவலுடன் சேர்த்து அனைத்து முனையங்களும் மூடப்பட்டன.
இந்நிலையில், நாளை மறுநாள் ஜூவல் திறந்துவிடப்பட்டாலும் மற்ற முனையங்களுக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனு
மதியில்லை.
புதிய பாதுகாப்பு நடவடிக்கையாக விமான நிலைய ஊழியர்கள் 14,000 பேர் மூன்று பிரிவு களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.
அபாய நிலையை அடிப்படையாகக் கொண்டு இவர்கள் பிரிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமும் சாங்கி விமான நிலையக் குழுமமும் நேற்று தெரிவித்தன. ஜுவலிலும் பயணிகள் முனையங்களிலும் துப்புரவுப் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, விமான நிலைய ஊழியர்களுக்கு சுவாசப் பரிசோதனைமுறையை சாங்கி விமான நிலையம் அறிமுகப் படுத்தியுள்ளது.
திட்டத்தின் ஒரு பகுதியாக விமான நிலைய ஊழியர்கள் சிலருக்கு நேற்று சுவாசப் பரிசோதனை நடத்தப்பட்டது.
ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் சுவாசப் பரிசோதனைக் கருவிக்குள் ஊழியர்கள் ஊதுவர். சுவாசப் பரிசோதனைக் கருவிக்குள் உணர்கருவி பொருத்தப்பட்டிருக்கும். பிறகு அந்தக் கருவியைக் கொண்டு ஊழியருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதா என்று இரண்டு நிமிடங்களுக்குள் கண்டுபிடித்துவிடலாம். சுவாசப் பரிசோதனைமுறை மூலம் ஒருவருக்குக்
கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை விரைவில் கண்டுபிடித்து விடலாம் என்றும் வழக்கமான கொவிட்-19 மருத்துவப் பரிசோதனையைவிட அதை எளிதாக
செய்துவிடலாம் என்றும் பரிசோதனை செய்துகொள்வோருக்கு அசௌகரியத்தை அது ஏற்படுத்தாது என்றும் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் செய்தி யாளர்களிடம் தெரிவித்தார்.
முனையம் 3ல் விமான நிலைய ஊழியர்களுக்கு சுவாசப் பரிசோதனை செய்யப்படுவதை அவர் நேற்று நேரில் சென்று பார்த்தார்.
இந்நிலையில், முனையங்களில் நடைமுறைபடுத்தப்படும் மேம்
படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ஊழியர்களுக்கு பழக்கம் ஏற்பட, ஆறு மாதங்களுக்கு சிறப்பு மாதாந்திர படித்தொகை வழங்கப்படும் என்றும் அதற்காக $15 மில்லியன் ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

