சமூகத் தொற்று ஈரிலக்கப் பதிவு

சமூகத் தொற்று ஈரிலக்கப் பதிவு

1 mins read

கடந்த சில நாள்­க­ளாக சமூ­கத்­தில் புதி­தாக கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை ஒற்றை இலக்­கத்­தில் பதி­வான நிலை­யில், நேற்று அது மீண்­டும் இரட்டை இலக்­கத்தை எட்­டி­யது.

சமூ­கத்­தில் 12 பேர் உட்­பட மேலும் 21 பேர்க்கு கொரோனா தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கச் சுகா­தார அமைச்­சின் அறிக்கை தெரி­வித்­தது.

சமூ­கத்­தில் தொடர்­பு­க­ளின் மூலம் எழு­வ­ரைக் கிருமி தொற்­றி­யது. அவர்­களில் இரு­வர் ஏற்­கெ­னவே தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­கள்; ஐவர் கண்­கா­ணிப்பு நட­வடிக்­கை­க­ளின்­மூ­லம் கண்­ட­றி­யப்­பட்­ட­னர்.

சமூ­கத்­தில் தொற்று உறு­தி­யான மற்ற ஐவ­ரும் தொடர்­பின்றி பாதிக்­கப்­பட்­ட­தாக இப்­போ­தைக்கு வகைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

அத்­து­டன், வெளி­நா­டு­களில் இருந்து வந்த ஒன்­பது பேரை கிருமி தொற்­றி­விட்­டது. சிங்­கப்­பூர் வந்­தி­றங்­கி­ய­தும் அவர்­க­ளுக்கு இல்­லத் தனிமை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டு­விட்­டது. அந்த ஒன்­பது பேரும் சிங்­கப்­பூ­ரர்­கள் அல்­லது நிரந்­த­ர­வா­சி­கள். இதை அடுத்து, ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 62,266 ஆனது.