இன்னொரு பெருந்தொற்று ஏற்படாமல் தடுக்க ஜி7 நாடுகள் உறுதி

2 mins read

கொவிட்-19 போன்று இன்­னொரு பெருந்­தொற்று இவ்­வு­ல­கில் ஏற்­படா­மல் தடுக்க பணக்­கார 'ஜி7' நாடு­க­ளின் தலை­வர்­கள் உறு­தி­பூண்­டுள்­ள­னர்.

பிரிட்­டன், கனடா, பிரான்ஸ், ஜெர்­மனி, இத்­தாலி, ஜப்­பான், அமெ­ரிக்கா ஆகிய நாடு­க­ளின் தலை­வர்­கள் நேரில் பங்­கேற்று வரும் ஜி7 உச்­ச­நிலை மாநாடு பிரிட்­டனின் கார்ன்வால் நகரில் உள்ள காபிஸ் பே உல்லாச விடுதியில் நேற்று முன்­தி­னம் தொடங்­கி­யது.

மாநாட்­டில் பங்­கேற்க ஆஸ்­தி­ரே­லியா, தென்­னாப்­பி­ரிக்கா, தென்­கொ­ரியா, இந்­தியா ஆகிய நாடு­களின் தலை­வர்­க­ளுக்­கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டது.

தடுப்­பூசி உரு­வாக்­கம், உரி­மம் வழங்­கு­தல், சிகிச்சை, எதிர்­கா­லத்­தில் தோன்­றும் நோய்­களை அறி­தல் ஆகி­ய­வற்­றுக்­கான கால அவ­கா­சத்­தைக் குறைக்­க­வும் உல­க­ள­வில் கண்­கா­ணிப்­புக் கட்­ட­மைப்பை வலுப்­ப­டுத்­த­வும் கூட்டு முயற்­சி­கள் எடுக்­கப்­படும்.

முன்­ன­தாக, அடுத்த ஆண்டு இறு­திக்­குள் ஒரு பில்­லி­யன் கொவிட்-19 தடுப்பூசிகளை ஏழை நாடு­க­ளுக்கு நன்­கொ­டை­யாக வழங்க ஜி7 நாடு­கள் இணங்­கும் என எதிர்­பார்ப்­ப­தாக பிரிட்­டிஷ் பிர­த­மர் போரிஸ் ஜான்­சன் தெரி­வித்­தி­ருந்­தார்.

மர­பணு வரி­சையை அடை­யா­ளம் காண்­ப­தற்­கான கொள்­ள­ளவை அதி­க­ரிக்­க­வும் உலக சுகா­தார நிறு­வ­னத்தை வலுப்­ப­டுத்­தும் சீர்­தி­ருத்­தங்­க­ளுக்கு ஆத­ரவு ­தரவும் தலை­வர்­கள் உறு­தி­யளித்­துள்­ள­னர்.

தடுப்­பூசி தயா­ரிப்பை அதி­க­ரிக்க ஏது­வாக அவற்­றுக்­கான காப்­பு­ரி­மை­க­ளைத் தற்­கா­லி­க­மாக ரத்து செய்ய வேண்­டும் என எழுந்­துள்ள கோரிக்­கை­க­ளுக்கு அமெ­ரிக்­கா­வும் பிரான்­சும் ஆத­ரவு தெரி­வித்­துள்­ளன. ஆனால், ஜெர்­மனி அதற்கு எதிர்ப்பு தெரி­வித்து வரு­கிறது.

பரு­வ­நிலை மாற்­றத்தை எதிர்­கொள்­ளல், அனைத்­து­ல­கப் பல்­லு­யிர்­வ­ளத்­தைப் பாது­காத்­தல் ஆகி­யவை குறித்­தும் இந்த மாநாட்­டில் விவா­திக்­கப்­படும் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

ஜி7 நாடு­க­ளின் உச்­ச­நிலை மாநாடு தொடர்­பான இறு­திக் கூட்­ட­றிக்கை இன்று வெளி­யி­டப்­படும்.

அதில், கொரோனா பர­வ­ல் ஏற்­படுத்­திய பேர­ழிவு மீண்­டும் நிக­ழா­மல் தடுப்­ப­தற்­கான கடப்­பா­டு­கள் அடங்­கிய பிர­க­ட­னம் இடம்­பெ­றும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

"இன்­னொ­ரு­முறை இப்­படி எதிர்­பா­ராத சிக்­கல்­களில் மாட்­டிக்­கொள்­ளக்­கூ­டாது என்­பதை உறு­தி­செய்ய முதன்­மு­த­லாக உல­கின் முன்­னணி ஜன­நா­யக நாடு­கள் கைகோத்­துள்­ளன. அதா­வது, கடந்த 18 மாத நிகழ்­வு­களில் இருந்து பாடங்­கள் கற்­றுக்­கொள்வதும் அடுத்த முறை மாறு­பட்ட முறை­யில் பணி­யாற்­று­வதும் அதிலடங்கும்," என்­றார் திரு ஜான்­சன்.

ஆப்­பி­ரிக்கா, ஆசியா, லத்­தீன் அமெ­ரிக்கா ஆகிய வட்­டா­ரங்­களில் ஆதிக்­கம் செலுத்த முய­லும் சீனா­வைத் தடுத்து நிறுத்­தும் வித­மாக, உள்­கட்­ட­மைப்பை உரு­வாக்க வளர்ந்து வரும் நாடு­க­ளுக்கு அதிக உத­வி­களை ஜி7 தலை­வர்­கள் அறி­விக்­க­லாம் என்­றும் எதிர்­பார்க்­கப்­படு­கிறது.