தொடக்கநிலை 1-3 மாணவர்கள் ஜூன் 28 முதல் ஒரு வாரம் வீட்டிலிருந்தபடி கற்பர்

இம்மாதம் 28ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், தொடக்கநிலை 1, 2, 3 மாணவர்கள் ஒரு வார காலத்திற்கு வீட்டிலிருந்தவாறு கற்பர் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மாணவர்கள், பணியாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஜூன் விடுமுறைக்குப் பின் மாணவர்களைப் படிப்படியாக பள்ளிக்குத் திரும்ப அனுமதிக்கும் வகையில் இந்நடவடிக்கை இடம்பெறுகிறது.

உயர்நிலை 1, 2 மாணவர்கள் இம்மாதம் 30ஆம் தேதிவரைக்கும் வீட்டில் இருந்தபடி கற்பர் என்றும் ஜூலை 1ஆம் தேதி வியாழக்கிழமை அவர்கள் பள்ளிக்குத் திரும்புவர் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.

தொடக்கநிலை 4 முதல் 6 வரையிலான மாணவர்கள், உயர்நிலை 3 முதல் 5 வரையிலான மாணவர்கள், தொடக்கக் கல்லூரி மாணவர்கள், மில்லெனியா கல்வி நிலைய மாணவர்கள் ஆகியோர் மட்டுமே இம்மாதம் 28ஆம் தேதி புதிய தவணைக்காலம் தொடங்கியதும் பள்ளிக்குத் திரும்புவர்.

ஜூலை 5ஆம் தேதி பொது விடுமுறை நாள் என்பதால் மறுநாள் 6ஆம் தேதியில் இருந்து எல்லா மாணவர்களும் பள்ளிக்குத் திரும்புவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!