மாணவர்கள் படிப்படியாகப் பள்ளிக்குத் திரும்ப ஏற்பாடு

மாணவர்கள் படிப்படியாகப் பள்ளிக்குத் திரும்ப ஏற்பாடு

3 mins read
11c4b2e7-5891-43a4-90a1-df79bec01749
'ஐடிஇ' மேற்குக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கல்வி அமைச்சின் கொவிட்-19 தடுப்பூசி மையத்திற்கு வருகைபுரிந்த பிரதமர் அலுவலக அமைச்சரும் கல்வி இரண்டாம் அமைச்சருமான டாக்டர் முகம்மது மாலிக்கி ஒஸ்மான், தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்திருந்த மாணவர்களுடன் உரையாடினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தொடக்கநிலை 1-3 மாணவர்கள் ஜூன் 28 முதல் ஒரு வாரம் வீட்டிலிருந்தபடி கற்பர்

இம்­மா­தம் 28ஆம் தேதி மீண்­டும் பள்­ளி­கள் திறக்­கப்­ப­ட­வுள்ள நிலை­யில், தொடக்­க­நிலை 1, 2, 3 மாண­வர்­கள் ஒரு வார காலத்­திற்கு வீட்­டி­லி­ருந்­த­வாறு கற்­பர் என்று கல்வி அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

மாண­வர்­கள், பணி­யா­ளர்­களின் பாது­காப்­பைக் கருத்­தில் கொண்டு, ஜூன் விடு­முறைக்­குப் பின் மாண­வர்­க­ளைப் படிப்­ப­டி­யாக பள்­ளிக்­குத் திரும்ப அனு­ம­திக்­கும் வகை­யில் இந்­ந­ட­வ­டிக்கை இடம்­பெ­று­கிறது.

உயர்­நிலை 1, 2 மாண­வர்­கள் இம்­மா­தம் 30ஆம் தேதி­வரைக்கும் வீட்­டி­ல் இ­ருந்­த­படி கற்­பர் என்­றும் ஜூலை 1ஆம் தேதி வியா­ழக்­கிழமை அவர்­கள் பள்­ளிக்­குத் திரும்­பு­வர் என்­றும் அமைச்சு அறி­வித்­துள்­ளது.

தொடக்­க­நிலை 4 முதல் 6 வரை­யி­லான மாண­வர்­கள், உயர்­நிலை 3 முதல் 5 வரை­யி­லான மாண­வர்­கள், தொடக்­கக் கல்­லூரி மாண­வர்­கள், மில்­லெ­னியா கல்வி நிலைய மாண­வர்­கள் ஆகி­யோர் மட்­டுமே இம்­மா­தம் 28ஆம் தேதி புதிய தவ­ணைக்­கா­லம் தொடங்­கி­ய­தும் பள்­ளிக்­குத் திரும்­பு­வர்.

ஜூலை 5ஆம் தேதி பொது விடு­முறை நாள் என்­ப­தால் மறு­நாள் 6ஆம் தேதி­யில் இருந்து எல்லா மாண­வர்­களும் பள்­ளிக்­குத் திரும்­பு­வர்.

மூன்­றா­வது மொழி அல்­லது கலை, இசை விருப்­பப்­பாட நட­வடிக்­கை­கள் போன்ற மையம் சார்ந்த வகுப்­பு­களில் பங்­கேற்­பவர்களும் தேர்­வெ­ழு­தும் மாண­வர்­களும் மூன்­றாம் தவ­ணைக் காலத்­தின் முதல் வாரத்­தி­லேயே நேரடி வகுப்­பு­களில் பங்­கேற்­க­லாம். தேர்­வெ­ழு­தாத மாண­வர்­கள் வீட்­டிலிருந்தவாறு கற்­பது தொட­ரும்.

மூன்­றாம் தவ­ணைக் காலத்­தின் இரண்­டா­வது வாரத்­தில் இருந்து மையம் சார்ந்த வகுப்­பு­களில் எல்லா மாண­வர்­களும் நேர­டி­யா­கப் பங்­கேற்­க­லாம்.

உயர்­கல்வி நிலை­யங்­களும் மாண­வர்­க­ளைப் படிப்­ப­டி­யா­கக் கல்விக்­கூ­டங்­க­ளுக்கு மீண்­டும் திரும்ப அனு­ம­திக்­கும் என்று அமைச்சு குறிப்­பிட்­டது.

முன்­னர் இணை­யம் மூலம் இடம்­பெற்ற சிறிய குழுக்­கள் பங்­கேற்­கும் வகுப்­பு­களை அல்­லது ஆலோ­சனை நட­வ­டிக்­கை­களை வரும் 21ஆம் தேதி­யில் இருந்து வளா­கத்­தில் மீண்­டும் தொடங்­க­லாம்.

ஆய்­வ­கங்­கள், செய்­மு­றைப் பயிற்­சி­கள் போன்ற அத்­தி­யா­வசி­ய­மான நேரடி அமர்­வு­க­ளுக்­காக மாண­வர்­கள் கல்வி நிலை­யங்­களுக்கு நேரில் செல்­ல­லாம். அரங்­கிற்கு 50 பேருக்கு மிகா­த­படி நேரடித் தேர்வு நட­வ­டிக்­கை­க­ளைத் தொட­ர­லாம்.

தங்­க­ளது இளம்­பிள்­ளை­க­ளுக்­கான பரா­ம­ரிப்பு ஏற்­பா­டு­கள் தேவைப்­ப­டு­வோர்க்­காக, கல்வி அமைச்­சின் பாலர் பள்­ளி­களும் பள்ளி சார்ந்த மாண­வர் பரா­ம­ரிப்பு மையங்­களும் இம்­மா­தம் 28ஆம் தேதி முதல் மீண்­டும் முழு­வ­து­மாகத் திறக்­கப்­படும்.

சிறப்­புக் கல்வி பள்ளி மாண­வர்­களும், தங்களின் தேவை­களின் அடிப்படையில், வரும் 28ஆம் தேதி ­முதல் படிப்­ப­டி­யா­கப் பள்­ளிக்­குத் திரும்­பு­வர். ஜூலை 6 முதல் எல்லா மாண­வர்­களும் பள்­ளிக்­குத் திரும்­பு­வர்.

மாண­வர்­கள் நேரில் பங்­கேற்க வேண்­டிய இணைப்­பாட நட­வ­டிக்­கை­களை அடுத்த தவ­ணைக் காலத்­தின் இரண்­டா­ம் வாரத்­தில் இருந்து படிப்­ப­டி­யா­கத் தொடங்க அமைச்சு திட்­ட­மிட்டு வரு­கிறது. கிரு­மித்­தொற்று அபா­யம் குறை­வாக உள்ள நட­வ­டிக்­கை­கள் முத­லில் தொடங்­கப்­படும்.

வெவ்­வேறு பள்ளி­க­ளைச் சேர்ந்த மாண­வர்­கள் ஒன்­று­க­லப்­பதைக் குறைக்கும் நோக்கில், இள­நிலை, 'சி' பிரிவு ஆகி­யோர்க்­கான தேசிய பள்ளி விளை­யாட்­டுப் போட்­டி­களும் 'ஏ' பிரி­வில் எஞ்­சி­ உள்ள போட்­டி­களும் ரத்து செய்­யப்­படும் என்று அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

18 வய­தும் அதற்­கும் குறைந்­த­வர்­க­ளுக்­கு­மான நேரடி துணைப்­பாட, செறி­வூட்­டல் வகுப்­பு­களை இம்­மா­தம் 21ஆம் தேதி­யில் இருந்து மீண்­டும் தொடங்­க­லாம்.

பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­கள் நடை­முறைப்­ப­டுத்­தப்­பட்டு இருப்­பதைக் கல்விக்கூடங்கள் உறுதி­செய்ய வேண்­டு­ம்.

இத­னி­டையே, மாண­வர்­க­ளுக்­கான தடுப்­பூசி திட்­டம் நல்ல முன்­னேற்­றம் கண்டு வரு­வ­தா­க­வும் கிட்­டத்­தட்ட 90% மாண­வர்­கள் தடுப்­பூ­சிக்கு முன்­ப­திவு செய்­துள்­ள­தா­க­வும் மூவ­ரில் ஒரு­வர் முதல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­ட­தா­க­வும் கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் ஃபேஸ்புக் வழி­யா­கத் தெரி­வித்­துள்­ளார்.

மாண­வர்­க­ளின் நல்­வாழ்­விற்­கும் இடை­ய­றாக் கற்­ற­லுக்­கும் கல்வி அமைச்சு முன்­னு­ரிமை அளித்து வரு­வ­தா­கக் குறிப்­பிட்ட திரு சான், தொடர்ந்து நிலைமை அணுக்­க­மா­கக் கண்­கா­ணிக்­கப்­படும் என்­றும் அதற்­கேற்­ற­படி மாற்­றங்­கள் செய்­யப்­படும் என்­றும் கூறி­யி­ருக்­கி­றார்.