இந்தியா: 75 நாட்களுக்குப் பிறகு சற்று தணிந்த தொற்று எண்ணிக்கை

இந்தியா: 75 நாட்களுக்குப் பிறகு சற்று தணிந்த தொற்று எண்ணிக்கை

2 mins read

இந்­தி­யாவை மூன்­றா­வது கொரோனா அலை அச்­சு­றுத்தி வரும் வேளை­யில், 75 நாட்­க­ளுக்­குப் பிறகு ஆகக் குறைந்த எண்­ணிக்­கை­யில் புதிய கொவிட்-19 சம்­ப­வங்­கள் பதி­வா­கி­ய­தால் நாடு சற்று நிம்­மதி பெரு­மூச்சு விட முடிந்­தது. கடந்த 24 மணி­நே­ரத்­தில் கிரு­மி­யால் புதி­தா­கப் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை 60,471. அத்­து­டன் மேலும் 2,726 பேர் கிருமி பாதிப்­பால் உயி­ரி­ழந்­தி­ருந்­தனர்.

இந்­தி­யா­வில் இது­வரை பதி­வாகி­யுள்ள மொத்­தம் 29,570,881 கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­களில் மீண்டு வந்­தோ­ரின் எண்­ணிக்கை 28,280,472 ஆகும்.

இதற்­கி­டையே மூன்­றா­வது கிருமி அலைக்கு மாநி­லங்­கள் தயார்­நி­லை­யில் இருக்க வேண்­டும் என்ற அறி­வு­றுத்­தல் தொடர்­கிறது. மூன்­றா­வது அலை தொடர்­பான வழி­காட்டு நெறி­மு­றை­களும் வெளி­ இ­டப்­பட்­டுள்­ளன.

குழந்தை மருத்­து­வ­ம­னை­கள் ஒவ்­வொன்­றி­லும் 100 படுக்­கை­களாவது தயார் நிலை­யில் இருக்க வேண்­டும். குழந்­தை­நல மருத்­து­வர்­களும் அதே­போல் தயா­ராக இருக்க வேண்­டும் என உத்­த­ர­வு இடப்­பட்­டுள்­ளது. இத­னால் கொரோனா கிருமி அலை­யைக் கடந்­து­வர குழந்­தை­நல மருத்­து­வர்­களை நிய­மித்­தல் வேண்­டும் என்று கூறப்­பட்­டது.

தமிழ்­நாட்­டில் மட்­டும் கடந்த 24 மணி நேரத்­தில் 12,772 பேருக்கு கொரோனா தொற்று உறு­தி­செய்­யப்­பட்­டுள்­ளது. அங்கு ஒரே நாளில் 254 பேர் கிரு­மித்­தொற்­றால் உயிர் இழந்­து­விட்­ட­னர்.

புதிய 'டெல்டா பிளஸ்'

உரு­மா­றிய கிருமி கண்­டு­பி­டிப்பு

இதற்­கி­டையே புதிய 'டெல்டா பிளஸ்' உரு­மா­றிய கிருமி கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. இந்­தி­யா­வில் இரண்­டா­வது கொரோனா கிருமி அலைக்­குக் கார­ண­மா­கக் கூறப்­பட்ட 'டெல்டா' வகை கிருமி, தற்­போது மேலும் உரு­மா­றி­யி­ருப்­ப­தாக விஞ்­ஞா­னி­கள் கண்­டு­பி­டித்­துள்­ள­னர்.

'டெல்டா பிளஸ்' கிருமி, சார்ஸ்-கொரோனா கிருமி 2ன் புர­தம் அதி­க­ரித்­த­தன் விளைவு என்­றும் இதே புரத அதி­க­ரிப்­பால் மனித செல்­களில் கிருமி நுழைந்து தொற்றை ஏற்­ப­டுத்­தக்­கூ­டும் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

இருப்­பி­னும் 'டெல்டா பிளஸ்' கிருமி வகை குறித்து தற்­போ­தைக்­குக் கவ­லைப்­ப­டத் தேவை­யில்லை என்­றும் இந்­தி­யா­வில் இவ்­வகை கிருமி அதி­கம் காணப்­ப­ட­வில்லை என்­றும் விஞ்­ஞா­னி­கள் கூறி­யுள்­ள­னர்.

தடுப்­பூசி தொடர்­பில்

நேர்ந்த முதல் மர­ணம்

கொரோனா கிரு­மிக்கு எதி­ரான தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்ட 68 வயது ஆட­வர் ஒரு­வர், மர­ணம் அடைந்­துள்­ளதை அர­சாங்­கக் குழு­வான 'ஏஇ­எ­ஃப்ஐ' உறுதி­செய்­துள்­ளது. தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பிறகு, இவ்­வாண்டு மார்ச் 8ஆம் தேதி­யன்று 'அனா­ஃபி­லேக்­சிஸ்' கார­ண­மாக அவர் உயி­ரி­ழந்­த­தாக குழு­வின் ஆய்­வ­றிக்கை தெரி­வித்­துள்­ளது.

தடுப்­பூ­சிக்­குப் பிறகு ஏற்­பட்ட பாதிப்­பு­கள் தொடர்­பில் 31 சம்­ப­வங்­கள் ஆரா­யப்­பட்­டன.

இவற்­றில் தடுப்­பூ­சி­யால் அல்­லா­மல் தற்­செ­ய­லாக நேர்ந்த பாதிப்பு என நம்­பப்­படும் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை 18. நிச்­ச­ய­மற்ற கார­ணத்­தால் நேர்ந்த பாதிப்பு என்று மூன்று சம்­ப­வங்­கள் அடை­யா­ளம் காணப்­பட்­டன.

தடுப்­பூசி தொடர்­பில் ஏற்­பட்ட பாதிப்­புச் சம்­ப­வங்­கள் மூன்று. பதற்­றத்­தால் ஏற்­பட்ட பாதிப்­பாக ஒரு சம்­ப­வம் நிகழ்ந்­த­தா­கக் கூறப்­பட்­டது. போதிய ஆதா­ரம் இல்­லாத கார­ணத்­தால் எஞ்­சிய இரண்டு சம்­ப­வங்­களை வகைப்­படுத்த முடி­ய­வில்லை என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.