மலேசியாவில் 5.5 மில்லியன் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்

2 mins read

எண்ணிக்கையை அதிகரிக்க கூடுதல் தடுப்பூசி நிலையங்கள்

மலே­சி­யா­வில் வெள்­ளிக்­கி­ழமை மாலை நில­வ­ரப்­படி 5.5 மில்­லி­யன் பேருக்கு தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ள­தாக மலே­சிய சுகா­தார அமைச்­சர் டாக்­டர் ஆதம் பாபா தெரி­வித்­துள்­ளார்.

இவர்­களில் 3.96 மில்­லி­யன் பேர் தங்­க­ளுக்­கான முதல் தடுப்­பூ­சி­யை­யும் 1.55 மில்­லி­யன் பேர் இரு தடுப்­பூ­சி­க­ளை­யும் போட்­டுக்­கொண்­டுள்­ள­தாக நேற்று அவர் தமது டுவிட்­டர் பதி­வில் குறிப்­பிட்­டார்.

வெள்­ளிக்­கி­ழமை ஒரு நாளில் மட்­டும் 147,616 பேருக்கு முதல் தடுப்­பூசி போடப்­பட்­ட­தா­க­வும் 32,540 பேருக்கு இரண்­டா­வது தடுப்­பூசி போடப்­பட்­ட­தா­க­வும் அவர் கூறி­னார்.

இதற்­கி­டையே, புக்­கிட் ஜாலில் தேசிய விளை­யாட்­டுத் திடல் மாபெ­ரும் தடுப்­பூசி நிலை­ய­மாக உரு­வெ­டுத்­துள்­ளது.

நாளை முதல் இங்கு தடுப்­பூசி போடும் பணி தொடங்­கும்.

இந்தப் புதிய தடுப்பூசி நி­லை­யத்­தில் நாள் ஒன்­றுக்கு 10,000 தடுப்­பூ­சி­கள் வரை போடும் அள­வுக்கு வச­தி­கள் செய்­யப்­பட்டு உள்­ள­தாக இளை­யர், விளை­யாட்டு அமைச்­சர் ரீஸல் மரிக்­கான் நைனா மரிக்­கான் தெரி­வித்­துள்­ளார்.

குறிப்பாக, கிள்­ளான் பள்­ளத்­தாக்கு வட்­டா­ரத்­தில் உள்ள மேலும் அதி­க­மான மக்­கள் பய­னு­றும் வகை­யில் இந்­தப் பெரிய தடுப்­பூசி நிலை­யம் விளங்­கும் என்­றார் அவர்.

இங்கு 40 வய­தி­னர் மற்­றும் அதற்­குக் குறைந்த வய­தி­ன­ருக்கு முன்­னு­ரிமை தரப்­படும் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

பிர­த­மர் முகை­தீன் யாசின் அறி­வித்த தேசிய மீட்­புத் திட்­டத்­திற்­கேற்ப விளை­யாட்­டுத் திடல் முழு­வ­தும் தடுப்­பூசி நிலை­ய­மாக மாற்றி அமைக்­கப்­பட்டு உள்­ளது என்­று திரு ரீஸல் கூறி­ய­தாக பெர்­னாமா செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

இவ்­வாறு மாபெ­ரும் தடுப்­பூசி நிலை­யம் அமைக்­கப்­ப­டு­வ­தன் மூலம் நாட்­டி­லுள்ள மக்­க­ளுக்­குத் தடுப்­பூசி போடும் விகி­தம் அதி­க­ரிக்கும் என்று வெள்­ளிக்­கி­ழமை இரவு திரு ரீஸல் தமது ஃபேஸ்புக் பதி­வில் குறிப்­பிட்­டார்.

புதிய புக்­கிட் ஜாலில் தடுப்­பூசி நிலை­யத்­தில் ஆரம்­ப­கட்­ட­மாக தமது அமைச்­சைச் சேர்ந்த 60 மலே­சிய தடுப்­பூசி ஆத­ர­வுத் தொண்­டூ­ழி­யர்­கள் பணி­யாற்­று­வார்­கள் என்­றும் தேவைப்­பட்­டால் இந்த எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­படும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

இந்­நி­லை­யில், பொது­மக்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள உட­ன­டி­யா­கப் பதிவு செய்­து­கொள்ள வேண்­டும் என்­றும் ஏற்­கெ­னவே பதிவு செய்­த­வர்­கள் அதன் நில­வ­ரத்தை அடிக்­கடி சரி­பார்க்க வேண்­டும் என்­றும் அமைச்­சர் ரீஸல் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்­கி­டையே, தடுப்­பூசி போடு­வோர் விகி­தத்தை அதி­க­ரிக்க வீட­மைப்பு மற்­றும் உள்­ளாட்­சித் துறை அமைச்சு மூன்­று­கட்ட உத்­தியை செயல்­ப­டுத்த இருப்­ப­தாக அமைச்­சர் ஸுரைதா கம­ரு­தீன் தெரி­வித்­துள்­ளார்.

பொது­மக்­க­ளின் அழைப்­பு­களை ஏற்று தடுப்­பூ­சிக்­குப் பதிவு செய்­வது, நட­மா­டும் தடுப்­பூசி நிலை­யங்­களை அதி­கப்­ப­டுத்­து­வது, மக்­களை நாடிச் சென்று தடுப்­பூசி போடு­வது ஆகி­யன அந்த மூன்று உத்தி என்ற அவர் கூறி­னார்.

பாலிக் புலாவ் கொவிட்-19 தடுப்­பூசி நிலை­யத்­திற்கு ேநற்று வருகை புரிந்த அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசும்­போது, தடுப்­பூ­சித் திட்­டத்­தைத் தீவி­ரப்­ப­டுத்த அர­சாங்­கம் வகுத்­தி­ருக்­கும் இரண்­டா­வது அம்­சம் இந்த புதிய உத்தி என்­றார்.