மாது மரணத்துக்கு தடுப்பூசி காரணமல்ல: அமைச்சு

மாது மரணத்துக்கு தடுப்பூசி காரணமல்ல: அமைச்சு

1 mins read

தமது முதல் கொவிட்-19 தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்ட மறு­நாள் 72 வயது மூதாட்டி மர­ண­முற்­ற­தன் தொடர்­பில் சுகா­தார அமைச்சு விளக்­கம் தெரி­வித்­துள்­ளது. தடுப்­பூ­சி­யின் கார­ண­மாக தமது தாயார் மரண­முற்­றாரா என்று திரு ஆண்ட்ரு டான் என்­ப­வர் ஃபேஸ்புக் வழி­யாக எழுப்­பிய கேள்வி பற்றி அமைச்­சி­டம் ஊட­கங்­கள் கேட்­டன.

திரு­வாட்டி டோரீன் சான் என்­னும் அந்த மாது இம்­மா­தம் 3ஆம் தேதி ஃபைசர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டார். மறு­நாள் ஜூன் 4ஆம் தேதி இரவு 7.15 மணி­ய­ள­வில் அந்த மாது நிலை­கு­லைந்­தார். உட­ன­டி­யாக ஆம்­பு­லன்ஸ் மூலம் செங்­காங் பொது மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்ட அவர், அன்­றி­ரவு 9 மணி­ய­ள­வில் உயி­ரி­ழந்­தார்.

இவ­ரது மர­ணத்­திற்­கான கார­ணம் உறுதி செய்­யப்­ப­டா­த­தால் மரண விசா­ரணை அதி­கா­ரி­யி­டம் இவ்­வி­வ­கா­ரம் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­தா­க­வும் ஒரு வகை­யான இதய நோயால் மர­ணம் ஏற்­பட்­ட­தாக அந்த அதி­காரி கூறி­ய­தா­க­வும் சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. மேலும் இத­யத்­திற்­கான ரத்­தக் குழாய்­களில் நீண்­ட­கா­ல­மாக அடைப்பு இருந்­தது உடற்­கூ­ராய்­வில் தெரியவந்­த­தா­க­வும் தடுப்­பூ­சிக்­கும் மர­ணத்­துக்­கும் தொடர்­பில்லை என்­றும் அமைச்சு கூறியது.