வருகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை

வருகையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை

2 mins read

சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் இன்று முதல் நடப்புக்கு வருகிறது

சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­ம­னை­யில் உள்­நோ­யா­ளி­க­ளாக அனு­ம­திக்­கப்­பட்டு இருப்­ப­வர்­களை நேரில் பார்க்­கச் செல்­வோர், 20 நிமி­டங்­க­ளுக்­கு­மேல் அங்கு இருப்­ப­தாக இருந்­தால், கொவிட்-19 ஆன்­டி­ஜன் விரை­வுப் பரி­சோ­த­னைக்கு (ஏஆர்டி) உட்­பட வேண்­டும். இந்த நடை­முறை இன்று முதல் நடப்­புக்கு வரு­கிறது.

உள்­நோ­யா­ளி­க­ளின் பதிவு செய்­யப்­பட்ட பரா­ம­ரிப்பு வழங்­கு­நர்­க­ளுக்­கும் இவ்விதிமுறை பொருந்­தும்.

தங்­க­ளின் கொரோனா பரி­சோ­தனை முடி­வைக் காட்டி, தொற்று இல்லை என உறு­திப்­ப­டுத்­திய பின்­னரே வரு­கை­யாளர்­கள், உள்­நோ­யாளி மருத்­து­வப் பிரி­வு­க­ளுக்கு அனு­ம­திக்­கப்­ப­டு­வர் என்று ஒரு ஃபேஸ்புக் பதிவு மூல­மாக சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­மனை தெரி­வித்து இருக்­கிறது.

சுய­ப­ரி­சோ­த­னைக் கரு­வி­கள் கொண்டு செய்­யப்­பட்ட பரி­சோ­தனை முடி­வு­கள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட மாட்டா. அதே நேரத்­தில், கடந்த 24 மணி நேரத்­திற்­குள் செய்­து­கொண்ட பல்­ப­டி­யத் தொடர்வினை (பிசி­ஆர்) பரி­சோ­தனை முடி­வு­களை வரு­கை­யா­ளர்­கள் காட்­ட­லாம்.

சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­ம­னை­யின் வரு­கை­யா­ளர்­கள் இல­வ­ச­மாக கொரோனா பரி­சோ­தனை செய்­து­கொள்­ள­லாம். வரு­கை­பு­ரி­யும் நாளன்று மட்­டுமே பரி­சோ­தனை முடிவு செல்­லு­படி­யா­கும்.

அம்­ம­ருத்­து­வ­ம­னை­யின் 'போயர் புளோக்'கில் உள்ள 'ஏஆர்டி' மையத்­தில் கிரு­மித்­தொற்­றுப் பரி­சோ­தனை செய்­து­கொள்­ள­லாம் என்­றும் அடுத்த 20 நிமி­டங்­களில் முடிவு கிடைத்­து­வி­டும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

நாடு முழு­வ­தும் இன்று முதல் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­படு­வதை ஒட்டி, இந்த விரைவுப் பரி­சோதனை நடை­முறை இடம்­பெ­று­வ­தாக சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­மனை குறிப்­பிட்­டது.

"கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­படும் நிலை­யில், எங்­க­ளின் பணி­யா­ளர்­களும் நோயா­ளி­களும் பாது­காப்­பாக இருப்­பதை உறு­திப்­ப­டுத்த, முன்­னெச்­ச­ரிக்­கை­யாக வரு­கை­யா­ளர்­க­ளைப் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­து­வது முக்­கி­யம்," என்று அம்­ம­ருத்­து­வ­மனை கூறி­யுள்ளது.

இப்­போ­தைய உள்­நோ­யா­ளி­க­ளைப் பொறுத்­த­மட்­டில், 'ஏஆர்டி' பரி­சோ­த­னைக்கு உட்­பட வேண்­டி­யது குறித்து அவர்­க­ளின் பிரத்­தி­யேக பரா­ம­ரிப்பு வழங்­கு­நர்­க­ளுக்­குக் குறுஞ்­செய்தி அனுப்­பப்­படும்.

புதிய நோயா­ளி­க­ளுக்­கும் அவர்­களின் பரா­ம­ரிப்பு வழங்­கு­நர்­க­ளுக்­கும் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­ப­டும்­போது தக­வல் தெரி­விக்­கப்­படும்.