நம்பிக்கை அளிக்கும் தளர்வுகள்

நம்பிக்கை அளிக்கும் தளர்வுகள்

3 mins read
262c4bc9-21f9-4cbb-af19-39a738700d1a
அமர்ந்து சாப்பிடுவதற்காக 'பனானா லீஃப் அப்போலோ' உணவகத்திற்கு நேற்று வந்திருந்த வாடிக்கையாளர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

உணவகங்களில் இருவர் கொண்ட குழுவாக அமர்ந்து சாப்பிட அனுமதி

எஸ். வெங்­க­டேஷ்­வ­ரன்

உண­வ­கங்­களில் அமர்ந்து சாப்­பிட முடி­யாது என்று கடந்த மாதம் 16ஆம் தேதி நடப்­புக்கு வந்த கொவிட்-19 கட்­டுப்­பாடு, நேற்­று­மு­தல் தளர்த்­தப்­பட்­டது. இரு­வர் கொண்ட குழுக்­க­ளாக மக்­கள் மீண்­டும் உண­வ­கங்­களில் அமர்ந்து சாப்­பி­டத் தொடங்­கி­யுள்­ள­னர்.

இருப்­பி­னும், உண­வ­கங்­களில் கூட்­டம் அலை­மோ­த­வில்லை. பலர் தொடர்ந்து உணவை வீட்­டுக்­குத்­தான் வாங்­கிச் செல்­கி­றார்­கள். விரை­வில் கட்­டுப்­பா­டு­கள் மேலும் தளர்த்­தப்­படும், கூட்­டம் திரும்­பும், என நம்­பு­கின்­ற­னர் லிட்­டில் இந்­தியா வட்­டார உண­வக உரி­மை­யா­ளர்­கள்.

"கடந்த எட்டு மாதங்­களில் புதி­தாக மூன்று கிளை­க­ளைத் திறந்­தோம். இந்­தக் குறிப்­பிட்ட காலத்­தில் மக்­க­ளால் நேர­டி­யாக வந்து சாப்­பிட முடி­யா­மல் போனது சங்­க­ட­மாக இருக்­கிறது. இப்­போது இரண்டு பேர் மட்­டுமே சாப்­பிட முடி­கிறது. நாள­டை­வில் கட்­டுப்­பா­டு­களை மேலும் தளர்த்­தி­னால்­தான் உண­வ­கங்­க­ளால் வியா­பாரத்­தைத் தக்­க­வைத்­துக்­கொள்ள முடி­யும்," என்­றார் 'பனானா லீஃப் அப்­போலா' உண­வக உரி­மை­யா­ளர் சங்­கர் நாதன், 49.

கிரு­மித்­தொற்று நிலை ஓர­ளவு முன்­னேற்­றம் கண்டு வியா­பா­ரம் தலை­தூக்­கும் என்ற நம்­பிக்­கை­யு­டன் இருந்­தார் 'மது­ராஸ் விலாஸ்' உண­வ­கத்­தின் உரி­மை­யா­ளர் திரு­மதி சாஃப்பியா. மே மாதம் கடு­மை­யாக்­கப்­பட்ட கட்­டுப்­பா­டு­கள், அவ­ருக்கு ஏமாற்­றத்­தைத் தந்­தன. சையத் அல்வி சாலை­யில் உள்ள இவ­ரது உண­வ­கக் கிளை, வீட்டு விநி­யோ­கச் சேவை வழங்கி­யும் வாடிக்­கை­யா­ளர் விகி­தம் 80% சரிந்­த­தாக தெரி­வித்­தார் சாஃப்பியா.

"பெரிய உண­வ­கங்­க­ளுக்­குச் செயல்­பாட்டு நிர்­வா­கச் செல­வு­கள், வாட­கைக் கட்­ட­ணச் செல­வு­கள், ஊதி­யச் செல­வு­கள் அதி­கம். வாடிக்­கை­யா­ளர்­கள் இல்­லா­த­தால் சிறிய உண­வ­கங்­கள் வரு­மா­னம் ஈட்­ட­மு­டி­யா­மல் தவிக்­கின்­றன. இப்­படி எல்லா தரப்­பி­ன­ருக்­கும் பாதிப்பு அதி­கம்," என்­றார் திரு­மதி சாஃப்பியா.

கிட்­டத்­தட்ட மூன்­றாண்­டு­க­ளாக வர்­டுன் ரோட்­டில் இயங்­கும் நாகர்­கோ­யில் ஆரி­ய­ப­வன் உண­வக வியா­பா­ரத்­தில் 90%, நேர­டி­யாக வந்து சாப்­பி­டும் வாடிக்­கை­யாளர்­களை நம்­பி­யுள்­ளது. ஒரு மாத­மாக வியா­பா­ரத்தை நிறுத்­தி­யது வரு­மா­னத்­திற்­குப் பலத்த அடி என்­றும் இரு­வர் கொண்ட குழுக்­க­ளாக சாப்­பிட அனு­ம­தித்­தது ஒரு நல்ல தொடக்­கம் என்­றும் கூறி­னார் ஆரி­ய­ப­வன் இயக்­கு­நர் திரு தாமரை செல்­வன், 45. ஆனால் அனைத்து உண­வ­கங்­களும் நேற்று திறக்­க­வில்லை.

"மனி­த­வ­ளம், மின்­சா­ரம் போன்ற நிர்­வா­கச் செல­வு­களை ஈடு­கட்ட முடி­யாது. குடும்­ப­மாக வந்­தா­லும் இரண்டு, இரண்டு பேரா­கப் பிரிந்­த­படி சாப்­பி­ட­வேண்­டும். கலந்­து­ரை­யாடி மகிழ்ச்­சி­யாக உண்ண முடி­யாது. அத­னால் திறக்க வேண்­டாம் என முடி­வெ­டுத்­தோம்," என்­றார் 'முத்­துஸ் கறி' உண­வக நிர்­வா­கி­களில் ஒரு­வ­ரான திரு­மதி விஷாலி விஸ்­வ­னாத், 43.

இது ஒரு பக்­கம் இருக்க உண­வ­கங்­களுக்கு மளி­கைப் பொருட்­களை விநி­யோ­கம் செய்­யும் மளி­கைக் கடை­களுக்­கும் இந்­தக் கட்­டுப்­பாட்­டுத் தளர்வு உத­வு­கிறது.

"வாடிக்­கை­யா­ளர்­கள் மீண்­டும் சாப்­பிட வரு­வ­தால் வியா­பா­ரத்­தில் சிறி­தளவு முன்­னேற்­றத்தை எதிர்­பார்க்­க­லாம். இருந்­தா­லும் ந‌ட்­டத்தை ஈடு­கட்டு­வது கடி­னம். கொவிட் தொடங்­கியது முதல் கிட்­டத்­தட்ட 70% வியா­பா­ரம் குறைந்­துள்­ளது. மக்­கள் மேலும் அதி­க­மான எண்­ணிக்­கை­யில் வந்து கடை­களில் பொருட்­கள் வாங்கி வியா­பா­ரத்­திற்கு ஆத­ர­வ­ளிக்­க­வேண்­டும்," என்­றார் 'செல்வி ஸ்ட்­டோர்ஸ்' ஊழி­யர் திரு செல்­வம் பழ­னி­வேல், 67.

லிட்­டில் இந்­தி­யா­வில் பொருள் வாங்கி­விட்டு ரேஸ் கோர்ஸ் சாலை­யில் இருக்­கும் அரு­ணாச்­ச­ல­ப­வ­னில் மாலை உணவு உண்ண மகள், இரண்டு பேரப்­பிள்­ளை­க­ளு­டன் வந்­தி­ருந்­தார் திரு பால­கி­ருஷ்­ணன்,67. நான்கு பேராக வந்த குடும்­பம் இரண்டு இரண்டு பேரா­கப் பிரிந்து அமர்ந்­தி­ருந்­த­னர். நீண்ட நாட்களுக்குப் பிறகு உணவகத்தில் அமர்ந்து சாப்பிடுவது ஒரு நல்ல மாற்றத்தைத் தருகிறது என்றார் அவர்.

ஆனந்த பவன் உண­வ­கத்­திற்­கு வேலை முடிந்து கண­வ­ரு­டன் வந்­திருந்­தார் நிர்­வாக உத­வி­யா­ள­ராகப் பணி­புரி­யும் திரு­மதி அஸ்­மத் பானு, 36. தம்­மைப் போல் வேலை நேரத்­தின்­போது மாலை உணவை எங்கே அமர்ந்து சாப்­பி­டு­வது எனத் திண்­டா­டி­ய­வர்­க­ளுக்கு இந்­தக் கட்­டுப்­பா­டு தளர்வு நல்ல செய்தி என்­றார்.

கூடுதல் செய்தி: இந்து இளங்கோவன்