சித்திரவதையில் பணிப்பெண் மரணம்: மாதுக்கு 30 ஆண்டு சிறை

சித்திரவதையில் பணிப்பெண் மரணம்: மாதுக்கு 30 ஆண்டு சிறை

2 mins read
d726828b-37f5-4473-82c2-6dac3488fe15
சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட காயத்திரி முருகையன், 41. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

தமது இல்­லப் பணிப்­பெண்ணை பட்­டினி போட்டு, சித்­தி­ர­வதை செய்து, கொலை செய்த காயத்­திரி முரு­கை­யன், 41, என்­னும் மாதுக்கு நேற்று சிங்கப்பூர் உயர் நீதி­மன்­றம் 30 ஆண்டு சிறைத் தண்­டனை விதித்­தது.

"குற்­றம் சாட்­டப்­பட்­ட­வ­ரின் கொடூ­ரச் செய­லை­யும் பயங்­க­ர­மான நடத்­தை­யை­யும் விவ­ரிக்க வார்த்தை இல்லை," என்று நீதி­பதி சீ கீ ஊன் தமது தீர்ப்­பில் குறிப்­பிட்­டார்.

உயிர் பிரி­வ­தற்கு முன்­னர் கொடு­மை­யான வேத­னையை நீண்ட காலத்­திற்கு பணிப்­பெண் அனு­ப­விக்­கும் நிலையை குற்­ற­வாளி ஏற்­

ப­டுத்­தி­யதை மேற்­கோள் காட்­டிய நீதி­பதி, "மர­ணம் விளை­விக்­கக்­கூ­டிய மோச­மான குற்­றங்­களில் இது­வும் அடங்­கும்," என்­றார்.

தம் மீது சுமத்­தப்­பட்­டி­ருந்த 28 குற்­றச்­சாட்டு ­களை பிப்­ர­வ­ரி­யில் காயத்­திரி ஒப்­புக்­கொண்­டார். அவற்­றில், வேண்­டு­மென்றே மர­ணம் விளை­வித்த குற்­றம் ஆகக் கடு­மை­யா­னது. இதர 87 குற்­றச்­சாட்­டு­கள் தீர்ப்பின்போது

கவ­னத்­தில் கொள்­ளப்­பட்­டன.

கொடு­மைக்கு ஆளான பியாங் இங்கை டோன் எனும் பெயர் கொண்ட பணிப்­பெண் மியன்­மா­ரைச் சேர்ந்­த­வர். 2016 ஜூலை 26ஆம் தேதி உயி­ரி­ழக்­கும்­போது அவ­ரது வயது 24. தொடர்ந்து பட்­டினி போட்­ட­தால் 24 கிலோ­வுக்கு உடல் எடை வற்­றிய நிலை­யில் அப்­பெண் மாண்டார். 2015 மே 28ஆம் தேதி காயத்­தி­ரி­யின் வீட்­டில் வேலைக்­குச் சேர்ந்த பணிப்­பெண் ஒவ்­வொரு நாளும் கொடு­மைக்கு ஆளா­ன­தா­க­வும் இக்­கொ­டுமை மாதக் கணக்­கில் நீடித்­த­தா­க­வும் நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

அறை­வது, தள்­ளு­வது, கிள்­ளு­வது, உதைப்­பது, மிதிப்­பது, குளிர் நீரை மேலே ஊற்­று­வது என பல்­வேறு விதத்­தில் பணிப்­பெண் கொடுமை செய்யப்பட்டது வீட்­டில் இருந்த கண்­கா­ணிப்பு கரு­விகளில் பதி­வா­னது.

கொடு­மை­யின் உச்­ச­மாக, சூடான இஸ்­திரி பெட்­டி­யால் அப்­பெண்­ணுக்கு சூடு வைத்­த­தும் கழுத்­தைப் பிடித்து நெரித்­த­தும் பதி­வான காட்­சி­க­ளுள் அடங்­கும்.