சிங்கப்பூரில் உள்ள 140,000க்கும் மேற்பட்ட முதலாளிகள் இம்மாதம் 30ஆம் தேதி முதல் $2.2 பில்லியன் பெறுமான வேலை ஆதரவுத் திட்ட வழங்குதொகையைப் பெறுவர். இதன் மூலம் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட உள்ளூர் ஊழியர்கள் பலனடைவார்கள் என்று நிதி அமைச்சும் உள்நாட்டு வருவாய் ஆணையமும் கூட்டாக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளன.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவுத் திட்ட அறிக்கையில் சம்பள ஆதரவுத் திட்ட அறிமுகம் இடம்பெற்றிருந்தது. இப்போது வழங்கப்படும் தொகையையும் சேர்த்து இத்திட்டம் மூலம் $26.7 பில்லியன் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான மாதங்களுக்கு தங்களது உள்ளூர் ஊழியர்களுக்கு மத்திய சேம நிதி பங்களிப்பைச் செலுத்திய முதலாளிகள் இப்புதிய வழங்கு தொகைக்குத் தகுதிபெறுவர்.
விமானப் போக்குவரத்து, ஆகாயவெளி மற்றும் சுற்றுப்பயணம் ஆகிய துறைகளைச் சேர்ந்த முதலாளிகள் ஜனவரி முதல் மார்ச் வரை வழங்கிய சம்பளத்தின் முதல் $4,600 தொகையில் 50 விழுக்காடு வரையிலான ஆதரவை இந்த மாதத்தில் பெறுவர். அதேபோல உணவுச் சேவைகள், சில்லறை வர்த்தகம், கலைகள் மற்றும் பொழுதுபோக்கு, நிலப் போக்குவரத்து, கட்டுமானம் மற்றும் கடல் துறையினர் 30 விழுக்காடு வரையிலான சம்பள ஆதரவுத் தொகையைப் பெறுவர்.
இவை தவிர, உயிர்மருத்துவ அறிவியல், துல்லிய பொறியியல், மின்னணு, நிதிச் சேவைகள், தகவல் தொடர்பு தொழில்நுட்பம், ஊடகம், அஞ்சல் மற்றும் தூதஞ்சல் (கூரியர்), இணைய சில்லறை வர்த்தகம், பேரங்காடிகள் மற்றும் அக்கம்பக்கக் கடைகள் போன்றவை உள்ளிட்ட இதர எல்லாத் துறை முதலாளிகளும் 10 விழுக்காடு சம்பள ஆதரவு வழங்கு தொகையைப் பெறுவர்.
ஒவ்வொருவருக்கும் எவ்வளவு வழங்கப்படும் என்ற விவரம் அடங்கிய கடிதம் தகுதியுள்ள முதலாளிகளுக்கு இம்மாத இறுதி வாக்கில் அனுப்பப்படும். 'மை டேக்ஸ்' இணையவாசலில் உள்நுழைந்து கடிதத்தின் மின்னியல் வடிவத்தை அவர்கள் காணமுடியும்.
இம்மாதம் 25ஆம் தேதிக்குள் 'பேநவ் கார்ப்பரேட்' வசதிக்குப் பதிவு செய்துள்ளவர்களும் உள்நாட்டு வருவாய் ஆணையத்துடன் 'ஜைரோ' ஏற்பாட்டைச் செய்துள்ளவர்களும் இம்மாதம் 30ஆம் தேதி முதல் தங்களுக்கான வழங்குதொகையைப் பெறுவர். இவற்றில் இடம்பெறாத முதலாளிகள் ஜூலை 5ஆம் தேதி முதல் இத்தொகையைப் பெறுவர்.
மே 16 முதல் ஜூலை 11 வரை நடப்பில் இருக்கும் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளால் கணி சமாகப் பாதிக்கப்பட்ட துறையினருக்கும் ஆதரவளிக்கும் வகையில் வேலை ஆதரவுத் திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் காலப் பகுதியில் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பாதிப்
படைந்த துறையினர் 50 விழுக்காட்டு ஆதரவையும் மற்ற துறையினர் கட்டுப்பாடுகள் நடப்பில் உள்ள காலம் வரை 30 விழுக்காடும் ஜூலை 12 முதல் ஜூலை 25 வரை 10 விழுக்காடும் வேலை ஆதரவு வழங்குதொகையைப் பெறுவர்.
முதலாளிகள் தங்களது ஊழி யர்களுக்கான மத்திய சேம நிதி யில் சரியான தொகையைச் செலுத்துமாறு கூட்டறிக்கை
கேட்டுக்கொண்டுள்ளது.
இரு மில்லியனுக்கும் மேற்பட்ட உள்ளூர் ஊழியர்கள் பலனடைவர்

