சாப்பிட்ட பின் தட்டை உரிய இடத்தில் வைக்க 4,500 பேருக்கு நினைவூட்டு

சாப்பிட்ட பின் தட்டை உரிய இடத்தில் வைக்க 4,500 பேருக்கு நினைவூட்டு

2 mins read

உண­வுக்­க­டை­களில் சாப்­பிட்­டோர் தாங்­கள் பயன்­ப­டுத்­திய சாப்­பாட்­டுத் தட்­டு­களை அதற்­கென ஏற்­

ப­டுத்­தப்­பட்டுள்ள அடுக்கு நிறுத்­தங்­களில் வைக்­கு­மாறு நினை­வூட்­டப்­பட்டு உள்­ள­னர். திங்­கட்­கி­ழமை புதிய உத்­த­ரவு நடப்­புக்கு வந்த பின்­னர் சுமார் 4,500 பேருக்கு இச்­செ­யலை தேசிய சுற்­றுப்­புற வாரிய அதி­கா­ரி­கள் நினை­வூட்­டி­ய­தாக நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற மூத்த துணை அமைச்­சர் ஏமி கோர் கூறி­னார்.

பொது இடங்­களில் உள்ள உண­வுக்­க­டை­களில் சாப்­பி­டு­வோர் தாங்­கள் பயன்­ப­டுத்­திய தட்­டு­க­ளை­யும் கரண்­டி­கள் போன்ற பொருட்­க­ளை­யும் அடுக்கு நிறுத்­தங்­களில் கொண்­டு­போய் வைக்க வேண்­டும் என்­பது ஜூன் 1 முதல் கட்­டா­ய­மாக்­கப்­பட்டு உள்­ளது.

ஆயி­னும், கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக அந்­தத் தேதி­யி­லி­ருந்து கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை வரை உண­வுக்­க­டை­களில் அமர்ந்து சாப்­பிட அனு­மதி இல்லை. திங்­கட்­கி­ழமை (நேற்று முன்­தி­னம்) கட்­டுப்­பாடு தளர்த்­தப்­பட்ட பின்­னர் புதிய உத்­த­ரவு அம­லுக்கு வந்­தது. அப்­படி ஓர் உத்­த­ரவு நடப்­புக்கு வந்­தி­ருப்­பதை சாப்­பிட வரு­வோ­ருக்கு நினை­வூட்­டும் பணி­களில் வாரிய அதி­கா­ரி­கள் ஈடு­பட்­ட­னர்.

ஆகஸ்ட் 31 வரை இவ்­வாறு அதி­கா­ரி­கள் நினை­வூட்­டு­வார்­கள். அந்­தக் காலப் பகு­தி­களில் உண­வுத் தட்­டு­களை அதற்­கென உள்ள அடுக்கு நிறுத்­தத்­தில் கொண்டு போய் வைக்­கா­த­வர்­கள் மீது சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படமாட்­டாது. பொது­மக்­கள் புதிய உத்­த­ர­வுக்­குத் தங்­க­ளைத் தயார்ப்­ப­டுத்­தும் வகை­யில் இந்த விதி­வி­லக்கு காலம் அறி­விக்­கப்­பட்­டது.

ஆனால் செப்­டம்­பர் 1ஆம் தேதி முதல், உத்­த­ரவை மீறு­வோர் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என மே 14ஆம் தேதி வாரி­யம் அறி­வித்­தி­ருந்­தது. முதல் தடவை மீறு­வோ­ருக்கு எழுத்து மூல­மான எச்­ச­ரிக்கை விடுக்­கப்­படும். இரண்­டா­வது முறை மீறு­வோ­ருக்கு $300 அப­ரா­தம் விதிக்­கப்­படும். அதன் பின்­ன­ரும் தொடர்ந்து உத்­த­ரவை மீறு­வோ­ருக்கு எதி­ரான அப­ரா­தத் தொகை $2,000 வரை கூடிக்­கொண்டே போகும்.

தற்­போ­தைய கொவிட்-19 கொள்ளை­நோய், பொது சுகா­தா­ரம், சுத்­த­மான தர­நி­லை­கள் போன்­ற­வற்­றின் அவ­சி­யத்தை உணர்த்தி உள்­ளது. பொது இடங்­களில் உள்ள உண­வுக் கடை­களில் சாப்­பி­டு­வோ­ரின் மனப்­போக்­கை­யும் நடத்­தை­யை­யும் மாற்ற விரி­வான முயற்­சி­கள் மூலம் காலம் கால­மாக போதிக்­கப்­பட்டு வரு­கிறது.

இருந்­த­போ­தி­லும், 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்­தி­யாளர் சென்ற இரு உணவு நிலை­யங்­களில் உள்ள கடை­களில் சாப்­பிட்­டோ­ரில் சிலர் இன்­னும் தங்­க­ளது தட்­டு­களை அடுக்கு நிறுத்­தங்­களில் கொண்டு சென்று வைக்­கா­த­தைக் கவ­னிக்க நேர்ந்­தது. கிளமெண்டி 448 சந்தை மற்றும் உணவுநிலையத்தில் சிலர் அவ்வாறு அலட்சியம் காட்டினர்.

அதே நேரம், நார்த் பிரிட்ஜ் ரோடு சந்தை மற்­றும் உணவு நிலை­யத்­திற்­கு நேற்­றுக் காலை 9.45 மணி­ய­ள­வில் செய்­தி­யா­ளர்­கள் சென்­ற­போது, பத்­துக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் தங்­க­ளது தட்­டு­க­ளை­யும் கரண்­டி­க­ளை­யும் அடுக்கு நிறுத்­தங்­களில் கொண்டு போய் வைத்­ததை அவர்­கள் கண்­ட­னர். இங்கும் சிராங்கூன் கார்டன் சந்தை மற்றும் உணவு நிலையத்திலும் வாரியத்தின் அதிகாரிகள் காணப்பட்டனர்.

உண­வுக் கடை­களில் நடப்­புக்கு வந்­துள்ள புதிய உத்­த­ரவை காப்­பிக் கடை­க­ளுக்­கும் பெரிய உணவு நிலை­யங்­க­ளுக்­கும் இவ்­வாண்­டின் நான்­காம் காலாண்­டில் கட்­டம் கட்­ட­மாக விரி­வு­ப­டுத்­தும் பணி­களில் வாரி­யத்­து­டன் இணைந்து சிங்­கப்­பூர் உணவு அமைப்பு செயல்­பட உள்ளது.