தடுப்பூசிக்கு இரண்டு மடங்கு முன்பதிவு

தடுப்பூசிக்கு இரண்டு மடங்கு முன்பதிவு

2 mins read
967edb5d-2f16-4e46-ba68-1913509b2ce3
பொத்தோங் பாசிர் சமூக மன்றத்தில் நேற்று தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அமர்ந்துள்ளனர். அரசாங்கம், நாளுக்கு 80,000 தடுப்பூசிகளைப் போட முயற்சி எடுத்துள்ளது. இதற்கு ஏற்ப முன்பதிவுகளும் கூடியுள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் தேசிய தடுப்­பூ­சித் திட்­டம் நேற்று முதல் வேகப்­ப­டுத்­தப்­பட்டு இருக்­கிறது. நாள் ஒன்­றுக்கு 47,000 தடுப்­பூ­சி­கள் போடப்­பட்­டன. ஆனால் சனிக்­கி­ழ­மை­யி­லி­ருந்து நாளுக்கு 80,000 தடுப்­பூ­சி­க­ளாக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

இந்த நிலை­யில் சில தடுப்பூசி நிலையங்களில் முன்பதிவு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

மூன்று தடுப்­பூசி நிலை­யங்­களை நிர்­வ­கிக்கும் ஒரு சுகா­தார பரா­ம­ரிப்பு நிறு­வ­னமும் இதனை உறுதி செய்துள்ளது.

அர­சாங்­கத்­தின் துரித தடுப்­பூசித் திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக இம்­மா­தம் 24ஆம் தேதி­யி­லி­ருந்து அடுத்த மாதம் நடுப்­ப­குதி வரை மேலும் 500,000 பேர் முதல் தடுப்­பூ­சிக்­காக முன்­ப­திவு செய்­வார்­கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. வரும் வாரங்­களில் அதிக தடுப்­பூ­சி­கள் போடு­வ­தற்­கான ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ள­தால் முன்­ப­தி­வும் கூடி வரு­கிறது.

தடுப்­பூசி மருந்து கொள்­மு­தல் திட்­டத்தை முன்­ன­தா­கவே நிறை­வேற்ற முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ள­தால் தடுப்­பூசி இயக்­கத்தை வேகப்­ ப­டுத்த முடிந்­துள்­ள­தாக பல அமைச்­சு­களை உள்­ள­டக்­கிய கொவிட்-19 சிறப்­புப் பணிக்­குழு வியா­ழன் அன்று தெரி­வித்­தது.

இத­னால் ஆகஸ்ட் 9ஆம் தேதி தேசிய தினத்திற்குள் மக்­கள் ­தொ­கை­யில் மூன்­றில் இரண்டு பங்­கி­ன­ருக்கு முழு­மை­யாக தடுப்­பூசி போட்­டு­விட வேண்­டும் என்ற புதிய இலக்கை நிறை­வேற்­றக்­கூ­டிய சாத்­தி­யம் ஏற்­பட்­டுள்­ளது.

இதற்கு தாங்­களும் ஆயத்­த­மாக இருப்­ப­தாக தடுப்­பூசி நிலை­யங்­களை நிர்­வ­கிக்­கும் பரா­ம­ரிப்பு நிலை­யங்­கள் தெரி­வித்­துள்­ள­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளேடு குறிப்­பிட்டு உள்­ளது.

இப்­போது தீவு முழு­வ­தும் 37 தடுப்­பூசி நிலை­யங்­கள் செயல் படு­கின்­றன.

தாம்­சன் மெடி­க்கல் சிறப்பு மருத்­துவ சிகிச்சை நிலை­யத்­தின் தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யான சான் வெய் லிங், தங்­க­ளு­டைய மூன்று தடுப்­பூசி நிலை­யங்­க­ளி­லும் இரண்டு மடங்­குக்கு முன்­ ப­திவு அதி­க­ரித்­துள்­ள­தா­கத் தெரி­வித்­தார். பொத்­தோங் பாசிர், பீஷான், செஞ்சா-கேஷ்யூ சமூக மன்­றம் ஆகிய மூன்று இடங்­களில் தடுப் பூசி நிலை­யங்­களை இது நிர்­வ­கிக்­கிறது.

ஃபுல்லர்ட்­டன் ஹெல்த் நடத்­தும் பத்து தடுப்­பூசி நிலை­யங் ­க­ளி­லும் ராஃபிள்ஸ் மெடிக்­கல் குழு­மத்­தின் 15 தடுப்­பூசி நிலை­யங்­களிலும் இதேபோன்று முன்­ப­தி­வு­கள் அதி­க­ரித்து காணப்­ப­டு­கின்­றன.

இத­னி­டையே பொத்­தோங் பாசிர் சமூக மன்­றத்­தில் செயல்­படும் தடுப்­பூசி நிலை­யத்­தில் நேற்று மழை­யை­யும் பொருட்­ப­டுத்­தா­மல் அதிக மக்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டதை நேரில் பார்த்­த­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்­பிட்­டது.

தாமான் ஜூரோங் சமூக மன்­றத்­தில் காலை­யில் கூட்­டம் குறை­வாக இருந்­தது. ஆனால் நண்­ப­கல் முதல் கூட்­டம் அதி­க­ரித்­தது.

மருத்­து­வப் பயி­ல­கத்­தின் தொற்று­நோய் மருத்­து­வர்­கள் துறைக்­குத் தலைமை வகிக்­கும் டாக்­டர் அசோக் கு­ருப் இது பற்றி கூறும்­போது, சிங்­கப்­பூ­ரின் தேசிய தடுப்­பூசி செயல்­திட்­டம் வேகப்­ படுத்­தப்­பட்டு இருப்­பது மகிழ்ச்சி யளிப்பதாக சொன்னார்.

இதை முன்பே செய்­தி­ருக்க வேண்­டும் என்று தான் கரு­வ­தா­க­வும் அவர் கூறினார்.