இந்தியாவில் 71 நாட்களுக்குப் பிறகு குறைந்த மரண எண்ணிக்கை

இந்தியாவில் 71 நாட்களுக்குப் பிறகு குறைந்த மரண எண்ணிக்கை

2 mins read
4499eb25-347c-4422-a21a-b8289550a82f
கொவிட்-19 மரணங்கள் உச்ச கட்டத்தில் இருந்தபோது கங்கை கரையோரமாக இறந்தவர்கள் புதைக்கப்பட்டனர். ஆனால் பருவ மழையால் புதைக்கப்பட்ட சடலங்கள் வெளியே வந்து கங்கையில் அடித்துச் செல்லப்பட்டன. இவற்றை மீட்டுவரும் உள்ளூர் நகராட்சி அதிகாரிகள், கங்கை கரையோரமாக குவியல் குவியலாக எரித்து வருகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ் -

இந்­தி­யா­வில் முதல் முறை­யாக ஒரு நாள் சரா­சரி கொவிட்-19 மரண எண்­ணிக்கை ஆயி­ரத்­துக்­கும் கீழ் குைறந்­துள்­ளது. 71 நாட்­க­ளுக்­குப் பிறகு வெள்­ளிக்­கி­ழமை அன்று ஆயி­ரத்­துக்­கும் குறை­வாக 983 கிருமித் தொற்று மரணங்கள் பதி வாகியுள்ளன.

இதற்கு முந்­தைய நாளான வியாழக்கிழமை அன்று இந்த எண்­ணிக்கை 1,036ஆக இருந்­தது என்று 'த டைம்ஸ் ஆஃப் இந்­தியா' வெளி­யிட்ட தக­வல் தெரி­வித்­தது.

இருந்­தா­லும் ஏற்­கெ­னவே இறந்­த­வர்­க­ளைப் பற்­றிய தக­வல்­கள், குறிப்­பாக மகா­ராஷ்­டிரா மாநி­லத்­தி­லி­ருந்து தற்­போது வெளி­யாகி வரு­வ­தால் ஒரு­நாள் மரண எண்­ணிக்கை ஆயி­ரத்­துக்கு மேல் இருக் கும் என்று நம்பப்படுகிறது.

இவ்வேளையில் ஒரு நாள் சரா­சரி மரண எண்­ணிக்கை நேற்று மீண்­டும் ஆயி­ரத்­துக்­கும் மேல் அதி கரித்தது. நேற்று 1,183 பேர் கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்டு உயி­ரி­ழந்­த­னர் என்று நேற்று இந்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

இவர்­க­ளு­டன் சேர்த்து கொரோ­னா­வுக்­குப் பலி­யா­ன­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 394,493ஐ தொட்­டுள்­ளது.

கிரு­மி­யால் பாதிக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்­கை­யும் 50,000க்கும் கீழ் குறைந்­துள்­ளது.

நேற்று ஒரு நாள் மட்­டும் 48,698 பேருக்­குத் தொற்று இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டது. இவர்­க­ளு­டன் சேர்த்து கிரு­மித்தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 30,183,143 ஆனது. அதே சம­யத்­தில் குண­ம­டைந்து வீடு திரும்­பி­யோ­ரின் எண்­ணிக்கையும் 29,193,085ஆக அதி­க­ரித்து உள்­ளது.

இதற்­கி­டையே சென்னை, காஞ்­சி­பு­ரம், மதுரை ஆகிய மூன்று மாவட்­டங்­களில் உரு­மா­றிய டெல்டா-பிளஸ் கிருமி கண்டறியப்பட்­டுள்­ள­தால் தேவை­யான முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டும் என்று தமி­ழக தலை­மைச் செய­லா­ளர் இறை­யன்­புக்கு எழு­திய கடி­தத்­தில் மத்­திய சுகா­தா­ரத் துறை செய­லா­ளர் ராஜேஷ் பூஷன் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

பரி­சோ­தனை, தனி­மைப்­ப­டுத்­தல் உள்­ளிட்ட நட­வ­டிக்­கை­களைத் தீவி­ரப்­ப­டுத்த வேண்­டும் என்­று கடி­தத்­தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதி­வே­மா­கப் பர­வும் தன்மை கொண்ட டெல்டா-பிளஸ் கிருமி, நுரை­யீ­ர­லைக் கடு­மை­யா­கப் பாதித்து உட­லில் உள்ள நோய் எதிர்ப்பு சக்­தி­யைக் குறைத்­து­விடும்.

தமி­ழ­கத்­தில் இது­வரை ஒன்­பது பேர் டெல்டா-பிளஸ் கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

இது குறித்­து பேசிய தமிழக மருத்­துவ மற்­றும் மக்­கள் நல்வாழ்வுத் ­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன், தற்­போ­துள்ள தடுப்­பூ­சியே டெல்டா-பிளஸ் கிரு­மியை கட்­டுக்­குள் வைத்­தி­ருக்­கும் என்­றார்.

"இதன் பாதிப்பு பெரி­தாக இல்லை. இந்­தத் தொற்று இருந்­த­வர்­க­ளி­டம் தொடர்­பில் இருந்­த­வர்­களை பரி­சோ­தித்­த­தில் அவர்­க­ளுக்கு இந்தத் தொற்று ஏற்­ப­ட­வில்ைல. பொது­மக்­கள் இந்­தப் புதிய உரு­மா­றிய கிருமி குறித்து அச்சமடைவோ பதற்­ற­ம­டை­யவோ தேவை­யில்லை," என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.