ஊரடங்கு நீட்டிக்கப்படும்: மலேசிய பிரதமர் அறிவிப்பு

ஊரடங்கு நீட்டிக்கப்படும்: மலேசிய பிரதமர் அறிவிப்பு

2 mins read

மலே­சி­யா­வில் ஒரு­நாள் கொவிட்-19 பாதிப்பு 4,000க்கும் குறை­வா­கப் பதி­வா­கும் வரை­யி­லும் தடுப்­பூசி, தீவிர சிகிச்­சைப் பிரிவு படுக்­கைப் பயன்­பாடு தொடர்­பான இலக்­கு­கள் எட்­டப்­படும் வரை­யி­லும் முழு ஊர­டங்கு நீட்­டிக்­கப்­படும் என்று மலே­சி­யப் பிர­த­மர் முகை­தீன் யாசின் தெரி­வித்து இருக்­கி­றார்.

முன்­னர் அறி­வித்­த­படி இன்­று­டன் முழு ஊட­ரங்கு முடி­வ­டைய வேண்­டும். ஆனா­லும், கிட்­டத்­தட்ட நான்கு வாரங்­க­ளாக ஒரு­நாள் சரா­சரி கொரோனா பாதிப்பு 5,000க்கும் மேல் இருந்து வரு­கிறது.

இந்­நி­லை­யில், மேலும் எத்­தனை நாள்­களுக்கு ஊர­டங்கு நீட்­டிக்­கப்­படும் என்று பிர­த­மர் முகை­தீன் குறிப்­பி­ட­வில்லை.

ஆயி­னும், ஊர­டங்கு நீட்­டிப்­பு­டன் புதிய நிதி­யு­த­வித் தொகுப்­பை­யும் அர­சாங்­கம் அறி­விக்­கும் என்று அவர் கூறி­யுள்­ளார்.

முன்­ன­தாக, கடந்த மாதம் 30ஆம் தேதி 40 பில்­லி­யன் ரிங்­கிட் (S$12.9 பில்­லி­யன்) மதிப்­பி­லான நிதி­யு­த­வித் திட்­டம் அறி­விக்­கப்­பட்­டது.

"இப்­போது நாம் கொண்­டுள்ள நிவா­ரணத் திட்­டத்­தைக் காட்­டி­லும் புதிய உத­வித் திட்­டம் விரி­வா­ன­தாக இருக்­கும்," என்­றார் திரு முகை­தீன்.

ஆக மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­டுள்ள சிலாங்­கூர் மாநி­லத்­தில் அமைக்­கப்­பட்­டு உள்ள பெரும் தடுப்­பூசி மையத்தை நேற்று பார்­வை­யிட்ட பின்­னர் ஊட­கத்­தி­ன­ரைச் சந்­தித்­த­போது அவர் இந்த விவ­ரங்­க­ளைத் தெரி­வித்­தார்.

புதிய உதவி நட­வ­டிக்­கை­கள் குறித்த அறி­விப்பு இன்றோ நாளையோ வெளி­யாகும்.

பெருந்­தொற்­றிலிருந்து விடு­ப­டு­வ­தற்கு நான்கு கட்ட வெளி­யேற்­றத் திட்­டத்தை பிர­த­மர் முகை­தீன் அண்­மை­யில் அறி­வித்­தி­ருந்­தார். மூன்று காரணிக­ளின் அடிப்­படை­யில் ஒரு கட்­டத்­தில் இருந்து அடுத்த கட்­டத்­திற்கு மாறும் நட­வ­டிக்கை நெறிப்­படுத்­தப்­படும்.

அதில் முதற்­கட்­டம்­தான் நடப்­பி­லி­ருக்­கும் ஊர­டங்கு. அதி­க­மான பொரு­ளி­யல் துறை­க­ளைச் செயல்­பட அனு­ம­திக்­கும் அதே வேளை­யில் பல கட்­டுப்­பா­டு­க­ளை­யும் தொட­ரச் செய்­வது இரண்­டாம் கட்டம்.

இரண்­டாம் கட்­டத்­திற்கு நகர, மக்­கள்­தொ­கை­யில் பத்து விழுக்­காட்­டி­னர்க்கு இரு தடுப்­பூ­சி­க­ளை­யும் போட்­டி­ருக்க வேண்­டும். நேற்று முன்­தின நில­வ­ரப்­படி, இப்­போ­தைக்கு 6.2 விழுக்­காட்­டி­னரே இரண்டு தடுப்­பூ­சி­க­ளை­யும் போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

ஜூலை மாத நடுப்­ப­கு­தி­யில் 10% என்ற இலக்கு எட்­டப்­படும் என எதிர்­பார்ப்­ப­தாக தடுப்­பூசி ஒருங்­கி­ணைப்பு அமைச்­சர் கைரி ஜமா­லு­தீன் முன்­ன­தா­கத் தெரி­வித்­தி­ருந்­தார்.

தீவிர சிகிச்­சைப் பிரிவு படுக்­கைப் பயன்­பாட்­டைப் பொறுத்­த­மட்­டில், குறிப்­பாக எந்த இலக்­கும் வகுக்­கப்­ப­ட­வில்லை. இப்­போ­தைக்கு, நாடு முழு­தும் தீவிர சிகிச்­சைப் பிரி­வு­களில் 90% அதி­க­மான படுக்­கை­களில் நோயா­ளி­கள் இருப்­பதை அண்­மைய புள்­ளி­வி­வ­ரங்­கள் காட்­டு­கின்­றன.

இத­னி­டையே, ஊர­டங்கு நீட்­டிப்பு குறித்த தக­வ­லால் அதி­ருப்தியடைந்­துள்ள­ மலே­சி­யர்­கள், டுவிட்டர் வழியாக தங்­களின் மனக்­கு­றை­க­ளைக் கொட்­டித் தீர்த்து வருகின்றனர்.