புதிய துறை, புதிய வேலை: அதிகமானோர் விருப்பம்

புதிய துறை, புதிய வேலை: அதிகமானோர் விருப்பம்

2 mins read

புதிய திறன்­க­ளைக் கற்­றுக்­கொண்டு, வேறு வேலை­யில் சேர விரும்பி கடந்த ஆண்டு அதி­க­மான சிங்­கப்­பூ­ரர்­கள் வாழ்க்­கைத்­தொ­ழில் மாற்­றும் திட்­டங்­களில் இணைந்­த­னர்.

சென்ற ஆண்டு மட்­டும் ஏறத்­தாழ 6,270 நிபு­ணர்­கள், மேலா­ளர்­கள், நிர்­வாகி­கள், தொழில்­நுட்­பர்­கள் (பிஎம்­இடி) வாழ்க்­கைத்­தொ­ழில் மாற்­றும் திட்­டங்­களில் சேர்ந்­த­தாக அமைப்பு தெரி­வித்தது. இது, 2019ஆம் ஆண்டைக் காட்டிலும் 41% அதிகம்.

இந்த இடைப்­ப­ருவ வாழ்க்­கைத் தொழி­லர்­களுக்குக் கட்­ட­மைக்­கப்­பட்ட பயிற்சி­யும் துறை மாறும் வகை­யில் அல்­லது தங்­க­ளது நிறு­வ­னங்­க­ளி­லேயே வேறு பொறுப்­பு­களை ஏற்­கும் வகை­யில் வேலைப் பயிற்சியும் அளிக்கப்பட்டதாக அந்த அரசாங்க அமைப்பு குறிப்பிட்டது.

முப்­ப­துக்­கும் மேற்­பட்ட துறை­களில் கிட்­டத்­தட்ட நூறு வாழ்க்­கைத்­தொ­ழில் மாற்­றும் திட்­டங்­கள் வழங்­கப்­ப­டு­கின்­றன. அறை­க­லன் வடி­வ­மைப்­பா­ளர்­கள், நவீன உயிர்­ம­ருந்து தயா­ரிப்பு நிபு­ணர்­கள் உட்­பட புதி­தாக 20 திட்­டங்­கள் அறி­முகப்­ப­டுத்­தப்­பட்­டன.

கடந்த ஆண்டு, பொதுத் தயாரிப்பு, கல்வி, தளவாடம் ஆகிய துறைகளில் உள்ள வாழ்க்கைத்தொழில் மாற்றும் திட்டங்கள் அதிகம் நாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கொவிட்-19 நோய்ப் பர­வல் தொழில் துறை­களில் பெரும் தாக்­கத்தை ஏற்­படுத்­தி­யதே சென்ற ஆண்­டில் வாழ்க்­கைத்­தொ­ழில் மாற்­றும் திட்­டங்­களில் அதி­க­மா­னோர் சேர்ந்­த­தற்கு முக்­கிய கார­ண­மா­கக் கூறப்­ப­டு­கிறது. அத்­து­டன், பல தொழில் நிறு­வ­னங்­களும் தங்­களை உரு­மாற்­றிக்­கொள்ள இந்­தக் கால­கட்­டத்­தைப் பயன்­ப­டுத்தி வரு­கின்­றன.

கொரோனா நெருக்­கடி கார­ண­மாக ஊழி­யர்­கள் பல­ரும் வேலை­யி­ழந்­த­தா­கக் குறிப்­பிட்­டார் 'மேன்­ப­வர் குரூப் சிங்­கப்­பூர்' எனும் ஆட்­சேர்ப்பு நிறு­வ­னத்­தின் மேலா­ளர் லிண்டா டியோ.

"வாய்ப்­பு­கள் ஒரு வரம்­பிற்­குள் இருக்­கும் இந்தக் காலகட்டத்தில், துறை மாற அல்­லது புதிய திறன்­க­ளைக் கற்­றுக்­கொள்ள பலரும் தயாராக உள்ளனர்," என்­றார் திருவாட்டி டியோ.