நோய் எதிர்ப்­பாற்­றலை உறுதி செய்­துள்ள ஆயு­தப் படை

நோய் எதிர்ப்­பாற்­றலை உறுதி செய்­துள்ள ஆயு­தப் படை

1 mins read
d980f9cd-28a0-44fa-ae2b-6e8ccf46600f
தேசிய சேவையில் புதிதாக சேருவோருக்கு சிலாராங் முகாமில் நடத்தப்பட்ட கொவிட்-19 பரிசோதனை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 தடுப்­பூசி மூலம் பெரும்­பா­லான அதி­கா­ரி­க­ளுக்கு நோய் எதிர்ப்­பாற்­றல் ஏற்பட்டுள்ளதை

சிங்­கப்­பூர் ஆயு­தப் படை உறுதி செய்­துள்­ளது.

இதன் கார­ண­மாக கொவிட்-19 கிரு­மித்­தொற்று பாதிப்பு மோச­

ம­டை­யும்­போ­தெல்­லாம் ஆயு­தப் படை அதன் பயிற்சி இடங்­களை மூடத் தேவை­யில்லை என்று

தற்­காப்பு அமைச்­சர் இங் எங் ஹென் தெரி­வித்­தார்.

எனவே, தேசிய சேவை­யா­ளர்­கள் தொடர்­பான நட­வ­டிக்­கை­கள் தடைப­டு­வது குறைக்­கப்­படும் என்­றும் ஆயு­தப் படைப் பிரி­வு­கள் முழு­வீச்­சு­டன் செயல்­பட இது வழி­

வ­குக்­கும் என்­றும் அமைச்­சர் இங் கூறி­னார்.

90 விழுக்­காட்­டுக்­கும் மேற்­பட்ட ஆயு­தப் படை அதி­கா­ரி­களும் தற்­காப்பு அமைச்சு அதி­கா­ரி­களும் கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­தாக டாக்­டர் இங் தெரி­வித்­தார். இம்­மா­தம் இரண்­டா­வது வாரத்­துக்­குள் 92 விழுக்­காட்­டினர் இரண்டு தடுப்­பூ­சி­க­ளை­யும்

போட்­டி­ருப்­பர் என்­றார் அவர்.

"இது திருப்­தி­க­ர­மான நிலை. நோய் எதிர்ப்­பாற்­றல் ஏற்பட்டுள்ள நிலையை ஆயு­தப் படை சாதித்­துள்­ளது," என்று சிங்­கப்­பூர் ஆயு­தப் படைத் தினத்­துக்கு முன்பு மண்­டாய் ஹில் முகா­மில் அளித்த பேட்­டி­யில் அமைச்­சர் இங் கூறி­னார். நோய் எதிர்ப்­பாற்­றல் உறுதி செய்­யப்­பட்­டி­ருப்­ப­தால் தேசிய சேவை­யா­ள­ருக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டா­லும் அது கடு­மை­யா­ன­தாக இருக்­காது.