இந்தியர்களுக்கு நிபந்தனையற்ற அனுமதியை வழங்கவில்லை அமைச்சர் ஓங்: இந்தியாவுடனான விரிவான பொருளியல் ஒத்துழைப்பு உடன்பாடு

3 mins read

சிங்­கப்­பூர் - இந்­தியா இடை­யே­யான விரிவான பொரு­ளி­யல் ஒத்து­ழைப்பு உடன்­பாடானது (சீக்கா), இந்­திய நாட்டு நிபு­ணர்­கள் எந்த நிபந்­த­னையும் இன்றி சிங்கப்­பூ­ருக்கு வர அனு­ம­தி­வழங்கவில்லை என்று அமைச்சர் ஓங் யி காங் தெரி­வித்­துள்­ளார்.

இந்த நாட்­டில் வசிக்­க­வும், வேலை செய்­ய­வும் நிரந்­த­ர­வா­சத் தகுதி அல்­லது குடி­யு­ரிமை பெற­வும் எவரை அனு­ம­திப்­பது என்­ப­தில் முழு உரி­மை­யும் அர­சாங்­கத்­தி­டம் உள்­ளது என்­றார் அவர்.

கடந்த 2005ல் கையெ­ழுத்­தான சீக்கா உடன்­பாடு குறித்து சமூக ஊட­கங்­க­ளி­லும் எதிர்க்­கட்­சி­களா­லும் பரப்­பப்­படும் பொய்­யு­ரை­களுக்கு திரு ஓங் பதி­ல­ளித்­தார்.

நிபு­ணர்­கள், மேலா­ளர்­கள், நிர்வா­கி­கள் (பிஎம்இ) போன்­ற­வர்­களை நிபந்­த­னை­யற்ற முறை­யில் இங்கு அனு­ம­திக்க வேண்டும் என்று இந்த உடன்­பாட்­டில் எங்கும் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை. சிங்­கப்­பூர் முன்­னேற்­றக் கட்சி சொல்­வ­தற்கு மாறாக, வேலை அனு­மதி வழங்­கவும் குடி­நு­ழைவு அனு­ம­தி­யி­லும் அர­சாங்­கத்­துக்கு உள்ள உரி­மையை சீக்கா எவ்­வி­தத்­தி­லும் பாதிக்­க­வில்லை என்­றார் அவர்.

சீக்கா குறித்து நாடா­ளு­மன்­றத்­தில் விவா­திக்க தீர்­மா­னம் முன்­வைக்­கு­மாறு அமைச்­சர் கா. சண்­மு­கம் முன்­னேற்­றக் கட்­சி­யிடம் மே மாதம் கூறி­யி­ருந்­தார்.

அதைத்­தொ­டர்ந்து, பொருட்­கள், சேவை­க­ளின் விநி­யோ­கத்தை எளி­தாக்க இரண்டு அல்­லது அதற்கு மேற்­பட்ட நாடு­களுக்கு இடை­யே­ செய்­யப்­படும் தடை­யற்ற வர்த்­தக ஒப்­பந்­தங்­கள் (எஃப்டிஏ) குறித்த அமைச்­சர்­நிலை அறிக்­கையை திரு ஓங் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் வெளி­யிட்­டார்.

குடி­நு­ழைவு தனி­யா­கப் பிரிக்­கப்­ப­ட­வில்லை என்­றாலோ, குடி­மக்­களை நடத்­து­வது தொடர்­பான கொள்கை சீக்கா உடன்­பாட்­டில் சேர்க்­கப்­பட்­டி­ருந்­தாலோ இந்­திய ஊழி­யர்­கள் சிங்­கப்­பூர் ஊழி­யர்­களைப்­போல் நடத்­தப்­ப­டு­வ­து­டன் அவர்­கள் தங்­கு­த­டை­யின்றி சிங் கப்­பூ­ரில் தங்கி வேலை பார்க்­கும் உரிமையைப் பெற்­றி­ருப்­பர் என்று அமைச்­சர் ஓங் விளக்­கி­னார்.

குடி­நு­ழைவு முக்­கி­ய­மான அம்­ச­மாக தனி­யா­கப் பிரிக்­கப்­பட்­டுள்­ள­து­டன், குடி­மக்­கள் கொள்கை சீக்­கா­விலோ சிங்­கப்­பூர் செய்­து­கொண்­டுள்ள வேறு எந்த தடை­யற்ற வர்த்­தக ஒப்­பந்­தங்­க­ளிலோ இல்லை. மாறாக, ஒப்­பந்­தத்­தின் 9ஆம் பிரிவு தற்­கா­லி­க­மாக நாட்­டுக்­குள் நுழைய அனு­ம­திக்­கும் விண்­ணப்­பங்­களை விரை­வாக, ஓர­ளவு வெளிப்­ப­டைத்­தன்­மை­யு­டன் பரி­சீ­லிக்க வகைசெய்­கிறது.

அத்­து­டன், சிங்­கப்­பூர் வழங்­கும் வேலை அனு­மதி, நடை­முறை­யில் இருக்­கும் வேலை அனு­மதி தொடர்­பான நிபந்­த­னை­களுக்கு உட்­பட்டு இருக்க வேண்­டும். இதே­போன்ற கடப்­பாடு மற்ற தடை­யற்ற வர்த்­கக ஒப்­பந்­தங்­க­ளி­லும் உள்­ளது. மேலும், இந்­தக் கடப்­பாடு உலக வர்த்­தக நிறு­வ­னம், சிங்­கப்­பூர் உட்­பட 164 நாடு­க­ளு­டன் செய்துகொண்ட ஒப்­பந்­தத்­தி­லும் உள்­ளது என்று திரு ஓங் தெளிவுபடுத்­தி­னார்.

இவற்­று­டன், பல தடை­யற்ற வர்த்­தக ஒப்­பந்­தங்­களில் நாடு­கள், வெளி­நாட்­டி­னர் ஒரு­வரை வேலைக்கு அமர்த்­தும்­முன், தகுந்த உள்­ளூர்­வா­சி­கள் கிடைக்­க­வில்லை என்­பதை நிரூ­பிக்க சிர­ம­மான நடை­மு­றை­களை அமல் செய்­வ­தில்லை என்­றும் உறுதி கூறு­கின்­றன. இது சிங்­கப்­பூர், ஆஸ்­தி­ரே­லியா, இந்­தியா, சீனா போன்ற பல நாடு­க­ளு­டன் ஏற்­படுத்­திக்­கொண்­டுள்ள பல தடை­யற்ற வர்த்­தக ஒப்­பந்­தங்­களில் காணப்­படும் ஒரு பொது­வான கடப்­பாடு என்று விளக்­கிய அமைச்­சர் ஓங், சீக்கா குறித்த முன்­னேற்­றக் கட்­சி­யின் இரு குற்­றச்­சாட்­டு­களை மறு­த­லித்­தார்.

முத­லா­வது, இணைப்பு 9Aஇன் கீழ் பட்­டி­ய­லி­டப்­பட்­டுள்ள 127 தொழில்­து­றை­யைச் சேர்ந்த இந்­தி­யர்­கள் தாராள அனு­ம­தி­யின்­கீழ் ஓராண்­டுக்கு இங்கு வேலைக்கு வர­லாம் என்­பது. இந்த பட்­டி­யல் எந்­த­வொரு இந்­திய நாட்­டி­ன­ருக்­கும் தடை­யற்ற அனு­ம­தியை வழங்­க­வில்லை என்­றார் அவர்.

"இங்கு பணி­பு­ரிய அனைத்து வெளி­நாட்டு நிபு­ணர்­களும் வேலை அனு­மதி நிபந்­த­னை­களை பூர்த்தி செய்ய வேண்­டும். இந்­தியா உரு­வாக்­கிய இப்­பட்­டி­யலை சிங்­கப்­பூர் அங்­கீ­க­ரிக்க வேண்­டும் என்ப தில்லை. மேலும், பட்­டி­ய­லில் தொழில்­க­ள் இடம்பெற்­றி­ருந்­தாலும் இல்­லா­விட்­டா­லும் சிங்­கப்­பூரு­டன் தடை­யற்ற வர்த்தக உடன்­பாட்­டைச் செய்து­ள்ள நாடு­க­ளைச் சேர்ந்­த­ நிபுணர்கள் இங்கு வேலை அனு­ம­திக்கு விண்­ணப்­பிக்­க­லாம். அவர்­க­ளின் விண்­ணப்­பங்­கள் தற்­போ­துள்ள அள­வு­கோல்­க­ளின் அடிப்­ப­டை­யில் பரி­சீ­லிக்­கப்­படும் என்­றார் திரு ஓங்.

நிறு­வ­னத்­துக்­குள் இட­மாற்­றம் (ஐசிடி) பெறு­ப­வர்­கள் இந்­தி­யா விலிருந்து சிங்­கப்­பூ­ருக்கு எவ்­வி­தக் கட்­டுப்­பா­டு­க­ளு­மின்றி பணி­பு­ரிய வர­லாம் என்­பது இரண்­டா­வது குற்­றச்­சாட்டு. இதில் உண்மை இல்லை. இவ்­வாறு நிறு­வ­னத்­திற்­குள் இட­மாற்­றம் பெறு­ப­வர்­க­ளுக் இஙகு வேலை செய்ய அனு­மதி பெற வேண்­டும்.

இந்­தியா மட்­டு­மின்றி, உல­கம் முழு­வ­தி­லு­மி­ருந்து இவ்­வாறு நிறு­வ­னத்­துக்­குள் இட­மாற்­றம் பெற்று சிங்­கப்­பூ­ருக்கு வேலை செய்ய வந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை மிகக் குறைவு. கடந்த ஆண்டு, இந்­தி­யா­வில் இருந்து இவ்­வாறு வந்­த­வர்­கள் 500 பேர் வரை­தான் இருப்­பார்­கள். எம்­பி­ளாய்­மென்ட் பாஸ் பெற்­ற­வர்­களில் இவர்­கள் 0.3 விழுக்­காட்­டுக்­கும் குறை­வா­ன­வர்­கள் என்­றார் அவர்.

"பொது­வாக சிங்­கப்­பூ­ரின் தடை­யற்ற வர்த்­தக உடன்­பா­டு­கள், குறிப்­பாக சீக்கா பற்­றிய பொய்­யு­ரை­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைக்க முடி­யும் என நம்­பு­கி­றேன்," என்று தமது உரை­யில் அமைச்­சர் ஓங் குறிப்­பிட்­டார்.

மேலும் நாடாளுமன்றச் செய்திகள்: பக்கம் 2 & 3