மலேசியாவில் மேலும் 8,868 பேருக்கு கொரோனா

2 mins read
729cd8a1-5cc2-44bf-b0dc-ee14676517dc
சிலாங்கூர் மாநிலம் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள தமது வீட்டிற்கு வெளியே வெள்ளைக் கொடியை அசைத்து உதவி கேட்கும் பெண்மணி. படம்: ராய்ட்டர்ஸ் -

மலே­சி­யா­வில் நேற்­றைய நில­வ­ரப்­படி மேலும் 8,868 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ள­தாக அந்­நாட்டு சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. இதுவே மலே­சி­யா­வில் பதி­வா­கி­யுள்ள இரண்­டா­வது ஆக அதி­க­மான பாதிப்பு.

இதற்கு முன்பு கடந்த மே மாதம் 29ஆம் தேதி­யன்று ஒரே நாளில் 9,020 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது.

புதி­தாக கிரு­மித்­தொற்று ஏற்­பட்­ட­வர்­களில் 4,152 பேர் சிலாங்­கூர் மாநி­லத்­தைச் சேர்ந்­த­வர்­கள். கொரோ­னா­வால் தலை­ந­கர் கோலா­லம்­பூ­ரில் 1,133 பேர் பாதிக்கப்பட்டதாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

மலே­சி­யா­வில் கொவிட்-19

கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்கை 808,658ஆக அதி­க­ரித்­துள்­ளது.

சிங்­கப்­பூ­ருக்கு மிக அரு­கில் இருக்­கும் மலே­சிய மாநி­ல­மான ஜோகூ­ரில் நேற்று மேலும் 336 பேருக்கு கொவிட்-19 பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது.

சிலாங்­கூர், கோலா­லம்­பூர் ஆகிய இடங்­களை அடுத்து, நெகிரி செம்­பி­லான் மாநி­லத்­தில் நேற்று அதி­க­மா­னோ­ருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது.

அங்கு நேற்று மேலும் 897 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­ட­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர். தாய்­லாந்து எல்லை அரு­கில் இருக்­கும் பெர்­லிஸ் மாநி­லத்­தில் நேற்று புதி­தாக ஒரு­வ­ருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது.

கொவிட்-19 சூழல் கார­ண­மாக மலே­சி­யா­வில் முடக்­க­நிலை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

முடக்­க­நி­லை­ தொடர்ந்து

நீட்­டிக்­கப்­படுவதால் மலே­சி­யர்­கள் பலர் பாதிப்­ப­டைந்­துள்­ள­தாகத்

தெரி­விக்­கப்­பட்­டது.

சிலர் பொரு­ளா­தார அடிப்­ப­டை­யில் அவ­தி­யுற்று வரு­கின்­ற­னர்.

இதன் விளை­வாக வெள்­ளைக் கொடி அணு­கு­மு­றையை இவர்­கள் கையாண்டு வரு­கின்­ற­னர்.

உதவி தேவைப்­ப­டும்­போ­தெல்­லாம் சன்­ன­லுக்கு வெளியே வெள்­ளைக் கொடியை அவர்­கள் தொங்­க­வி­டு­கின்­ற­னர்.

சன்­ன­லுக்கு வெளியே தொங்­கும் வெள்­ளைக் கொடி­யைப் பார்ப்­ப­வர்­கள் உட­ன­டி­யாக அந்­தந்த கிராம சபையினரிடம் தெரி­விப்­பர். பணம், உணவு போன்­ற­வற்­றைக் கொடுத்து இத்­த­கைய குழுக்­கள் கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யால் நலி­வுற்­றோ­ருக்கு உதவி செய்து வரு­கின்­றன.