மலேசிய துணைப் பிரதமர்: ஆதரவைத் திரும்பப் பெற மறுத்தோம்

2 mins read

மலே­சி­யப் பிர­த­மர் முகை­தீன் யாசி­னுக்கு அளித்து வரும் ஆத­ர­வைத் திரும்­பப் பெற வேண்­டும் என்ற அம்னோ தலை­வர் அக­மது ஸாஹிட் ஹமி­டி­யின் கட்­ட­ளைக்கு கட்­சி­யின் உச்­ச­மன்ற உறுப்­பி­னர்­களில் பெரும்­பான்­மை­யோர் இணங்­க­வில்லை என்று கட்­சி­யின் துணைத் தலை­வர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் தெரி­வித்­துள்­ளார்.

நாடு இப்­போ­துள்ள நிலை­மை­யில் ஆத­ர­வைத் திரும்­பப் பெறு­வது நியா­ய­மான முடி­வாக இராது என்று கூறி, தாம் உட்­பட உச்­ச­மன்ற உறுப்­பி­னர்­கள் பல­ரும் அம்­மு­டிவை எதிர்த்­த­தாக திரு இஸ்­மா­யில் சொன்­னார் என்று மலே­சியா­வின் பெரித்தா ஹரி­யான் ஊடகம் செய்தி வெளி­யிட்டுள்­ளது.

அர­சி­யல் செய்­வ­தற்­கான நேரம் இது­வல்ல என்­றும் கொவிட்-19 பர­வ­லால் சிர­மத்தை எதிர்­கொண்டு வரும் மக்­க­ளுக்கு உத­வும் நட­வடிக்­கை­களில் கவ­னம் செலுத்த வேண்­டும் என்­றும் மலே­சி­யத் துணைப் பிர­த­ம­ரு­மான திரு இஸ்­மா­யில் கூறி­னார்.

பிர­த­மர் முகை­தீன் தலை­மை­யி­லான பெரிக்­கத்­தான் கூட்­டணி அர­சுக்கு வழங்கி வரும் ஆத­ர­வைத் திரும்­பப் பெறு­வது என்று 2020 அம்னோ பொதுக்­கு­ழுக் கூட்­டத்­தில் முடிவு எடுக்­கப்­பட்­டதை உச்­ச­மன்ற உறுப்­பி­னர்­கள் அனை­வரும் ஒத்­துக்­கொண்­ட­தா­கக் குறிப்­பிட்ட அவர், ஆயி­னும் அதை இப்­போதே செய்ய வேண்­டும் எனக் கரு­தக்­கூ­டாது என்­றும் விளக்­கினார்.

"சரி­யான நேரத்­தில் நாம் செயல்­பட வேண்­டும். கொரோனா தொற்­றுக்கு எதி­ரான போரில் பிர­த­ம­ருக்கு முழு­மை­யான ஒத்­து­ழைப்பு தர விரும்­பு­கி­றோம் என்ற எங்­க­ளது நிலைப்­பாட்­டில் மாற்­ற­மில்லை," என்­றார் திரு இஸ்­மா­யில்.

பிர­த­ம­ருக்­கான ஆத­ரவு தொடர்­பில் ஒவ்­வொரு எம்.பி.க்கும் முடி­வெ­டுக்­கும் சுதந்­தி­ரம் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டார்.

பெரிக்­கத்­தான் கூட்­ட­ணி­யின் ஆகப் பெரிய கட்­சி­யான அம்னோ, அர­சாங்­கத்­திற்கு அளித்து வரும் ஆத­ரவை விலக்­கிக்­கொள்­வ­தாக கடந்த வியா­ழக்­கி­ழமை அறி­வித்­தது. அத­னால், பிர­த­மர் முகை­தீன் உட­ன­டி­யா­கப் பதவி விலக வேண்­டும் என்­றும் அக்­கட்சி வலி­யு­றுத்­தி­யது.