இந்தியாவில் மின்னல் தாக்கி 68 பேர் பலி

இந்தியாவில் மின்னல் தாக்கி 68 பேர் பலி

2 mins read

இந்­தி­யா­வில் தென்­கி­ழக்­குப் பரு­வ­மழை பெய்­து­வ­ரும் நிலை­யில், உத்­த­ரப் பிர­தே­சம், ராஜஸ்­தான், மத்­தி­யப் பிர­தே­சம் ஆகிய மூன்று மாநி­லங்­களில் மின்­னல் தாக்கி நேற்று முன்­தினம் ஒரே நாளில் 68 பேர் இறந்­து­விட்­ட­னர்.

ராஜஸ்­தான் மாநி­லத்­தில் மட்டும் மின்­னல் தாக்கி 20 பேர் மாண்­டு­விட்­ட­னர். அவர்­களில் கோட்டா, தோல்­பூர் மாவட்­டங்­களைச் சேர்ந்த ஏழு குழந்­தை­களும் அடங்­கு­வர். அத்­து­டன், மின்­னல் தாக்­கி­ய­தில் 21 பேர் கடு­மை­யான காய­முற்­ற­னர்.

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டதை அடுத்து, மழை பெய்­த­போ­தும் அதைப் பொருட்­படுத்­தாது ஜெய்ப்­பூ­ரில் உள்ள வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க ஆம்­பர் கோட்­டைக்கு அருகே அமைந்­து உள்ள பார்வைக் கோபு­ரத்­தில் சுற்­றுப்­ப­ய­ணி­கள், உள்­ளூர்­வா­சி­கள் எனப் பலர் திரண்­டி­ருந்­த­னர்.

ஆர்­வத்­து­டன் தங்களின் கைபேசியில் படம் எடுத்­துக்­கொண்­டி­ருந்­த­போது மின்­னல் தாக்­கி­ய­தில் 11 பேர் உடல் கருகி மாண்­டு­போ­யி­னர். இதை­ய­டுத்து, பீதி­யில் கோபு­ரத்­தி­லி­ருந்து குதித்­த­தில் பலர் காய­ம­டைந்­த­னர்.

தக­வ­ல­றிந்து நிகழ்­வி­டத்­திற்கு விரைந்த மாநி­லப் பேரி­டர் மீட்­புப் படை­யி­னர், காய­ம­டைந்து சுய­நினை­வின்­றிக் கிடந்­த­வர்­களை மீட்டு, சவாய் மான் சிங் அரசு மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு சென்­ற­னர்.

கிட்­டத்­தட்ட அரை­மணி நேர இடை­வெ­ளி­யில், அக்­கோ­பு­ரத்­தின்­மீது இரு­முறை மின்­னல் தாக்­கி­ய­தா­கக் கூறப்­பட்­டது.

மாண்­டவர்களின் குடும்­பத்­தார்க்கு இரங்­கல் தெரி­வித்த ராஜஸ்­தான் முதல்­வர் அசோக் கெலாட், அவர்­க­ளுக்­குத் தலா ஐந்து லட்ச ரூபாய் நிதி­யு­தவி வழங்­கப்­படும் என்று அறி­வித்­து உள்­ளார்.

இத­னி­டையே, பிர­யாக்­ரா­ஜில் 14 பேர் உட்­பட உத்­த­ரப் பிர­தேச மாநி­லத்­தின் பல மாவட்­டங்­களில் மின்­னல் தாக்கி 41 பேர் உயி­ர் இ­ழந்­த­னர். அவர்­களில் பல­ரும் பெண்­கள், குழந்­தை­கள் எனக் கூறப்­பட்­டது.

இதைத் தொடர்ந்து, இறந்­தவர்களின் குடும்­பத்­தி­னர்க்­குத் தலா ஐந்து லட்ச ரூபாய் வழங்­கப்­படும் என்­றும் மழைக்­கும் மின்­ன­லுக்­கும் கால்­ந­டை­க­ளைப் பறி­கொ­டுத்­த­வர்­க­ளுக்கு நிதி­ உதவி வழங்கப்­படும் என்­றும் உ.பி. முதல்­வர் யோகி ஆதித்­ய­நாத் அறி­வித்து இருக்­கி­றார்.

மத்­தி­யப் பிர­தேச மாநி­லத்­திலும் நேற்று முன்தினம் மின்­னல் தாக்­கி­ எழு­வர் மாண்­டு­விட்­ட­னர்.

பிர­த­ம­ர் மோடி இரங்­கல், உதவி

இப்­படி ஒரே நாளில் 68 பேர் மின்­னல் தாக்கி இறந்தது வருத்­த­ம் அளிப்பதாகக் குறிப்பிட்ட பிர­த­மர் நரேந்­திர மோடி, குடும்ப உறுப்­பினர்­களை இழந்து வாடும் குடும்­பத்­தி­னர்க்கு ஆழ்ந்த இரங்­க­லை­யும் டுவிட்­டர் வழி­யா­கத் தெரி­வித்­துள்­ளார்.

மேலும், மாண்­டோ­ரின் குடும்­பத்­தார்க்­குத் தலா இரண்டு லட்ச ரூபா­யும் காய­ம­டைந்­தோர்க்­குத் தலா 50,000 ரூபா­யும் பிர­த­ம­ரின் தேசிய நிவா­ரண நிதி­யில் இருந்து வழங்­கப்­படும் என்­றும் பிர­த­மர் மோடி அறி­வித்து இருக்­கி­றார்.

இத­னி­டையே, வட­இந்­தி­யா­வின் பல பகு­தி­களில் நேற்று இடி, மின்­ன­லு­டன் கன அல்லது மிகக் கன­மழை பெய்­யக்­கூ­டும் என்­றும் 30-40 கிலோ மீட்­டர் வேகத்­தில் காற்று வீச­லாம் என்­றும் இந்­திய வானிலை மையம் கணித்­தி­ருந்­தது.

மகா­ராஷ்­டிர மாநி­லத்­தின் சில பகு­தி­க­ளுக்­குச் சிவப்பு எச்­ச­ரிக்­கை­யும் விடுக்­கப்­பட்­டது.