மலேசியாவில் மிகப்பெரிய அளவில் தொற்று

மலேசியாவில் கொவிட்-19 தொற்று அன்றாடம் புதிய உச்சத்திற்குச் செல்கிறது. நேற்று புதிதாக 11,618 பேர் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப் பட்டது. அந்த நாட்டில் தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 867,567 என்று சுகாதார அமைச்சு டுவிட்டரில் தெரிவித்தது.

கொரோனா தொற்று அதிகரிப்பதற்கு உருமாறிய டெல்டா கிருமி ஒரு காரணம் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

அடுத்த இரண்டு வாரங்களில் தொற்று மேலும் அதிகரிக்கும் என்றும் பிறகு அது நிலைப்படும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

மலேசியாவில் செவ்வாய்க் கிழமை புதிதாக 11,097 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப் படுத்தப்பட்டது. அதற்கு முன்பாக இம்மாதம் 10ஆம் தேதி 9,353 பேருக்கு தொற்று இருந்தது தெரியவந்தது.

ஜூன் முதல் தேதியில் இருந்து முடக்கநிலை நடப்பில் இருந்து வருகிறது என்றாலும் கிருமித்தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!