மலேசியாவில் கொவிட்-19 தொற்று அன்றாடம் புதிய உச்சத்திற்குச் செல்கிறது. நேற்று புதிதாக 11,618 பேர் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப் பட்டது. அந்த நாட்டில் தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 867,567 என்று சுகாதார அமைச்சு டுவிட்டரில் தெரிவித்தது.
கொரோனா தொற்று அதிகரிப்பதற்கு உருமாறிய டெல்டா கிருமி ஒரு காரணம் என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
அடுத்த இரண்டு வாரங்களில் தொற்று மேலும் அதிகரிக்கும் என்றும் பிறகு அது நிலைப்படும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
மலேசியாவில் செவ்வாய்க் கிழமை புதிதாக 11,097 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப் படுத்தப்பட்டது. அதற்கு முன்பாக இம்மாதம் 10ஆம் தேதி 9,353 பேருக்கு தொற்று இருந்தது தெரியவந்தது.
ஜூன் முதல் தேதியில் இருந்து முடக்கநிலை நடப்பில் இருந்து வருகிறது என்றாலும் கிருமித்தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை.