உள்ளூரில் புதிதாக 42 பேருக்கு கிருமித்தொற்று

உள்ளூரில் இன்று (ஜூலை 15) புதிதாக 42 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கேடிவி மற்றும் இரவுநேர கேளிக்கை விடுதிகளுடன் தொடர்புடைய 33 பேரும் அவர்களில் அடங்குவர்.

உள்ளூரில் தொற்று உறுதியான அந்த 42 பேரில் 17 பேர், முன்னதாக கிருமி தொற்றியவர்களுடன் தொடர்புடையவர்கள். அவர்கள் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டுவிட்டனர். எஞ்சிய 20 பேருக்கு கண்காணிப்புப் பரிசோதனை மூலம் தொற்று உறுதியானது. அவர்களும் முன்னதாக கிருமி தொற்றியவர்களுடன் தொடர்புடையவர்கள்.

தற்போது ஐந்துப் பேருக்கு எப்படி கிருமி தொற்றியது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த ஆறு பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் இருக்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த அறுவரில் நால்வருக்கு சிங்கப்பூர் வந்திறங்கியவுடன் தொற்று உறுதியானது. இங்கு வந்த பிறகு தங்குமிடத்தில் இருக்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வந்தபோது எஞ்சிய இருவருக்குத் தொற்று கண்டறியப்பட்டது.
சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 62,852ஆக உள்ளது.

கேடிவி கிருமித்தொற்றுக் குழுமம் 87ஆக உயர்ந்துள்ளது. சிங்கப்பூரின் ஆகப்பெரிய தொற்றுக் குழுமங்களில் ஒன்றாக அது விளங்குகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!