உள்ளூரில் புதிதாக 42 பேருக்குத் தொற்று

உள்ளூரில் புதிதாக 42 பேருக்குத் தொற்று

1 mins read

சிங்கப்பூரில் நேற்று புதி­தாக 42 பேருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று உறு­தி­செய்­யப்­பட்­டுள்­ளது. கேடிவி மற்­றும் இர­வு­நேர கேளிக்கை விடு­தி­க­ளு­டன் தொடர்­பு­டைய 33 பேரும் அவர்­களில் அடங்­கு­வர். இவர்களையும் சேர்த்து கேடிவி தொற்றுக் குழுமத்தில் 87 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

உள்­ளூ­ரில் தொற்று உறு­தி­யான 42 பேரில் 17 பேர் முன்­ன­தாக கிருமி தொற்­றி­ய­வர்­க­ளு­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள்.

எஞ்­சிய 20 பேருக்கு கண்­கா­ணிப்­புப் பரி­சோ­தனை மூலம் தொற்று உறு­தி­யா­னது. தற்போது ஐவருக்கு எப்படி கிருமி தொற்றியது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.