இந்தியாவில் மீண்டும் தடுப்பூசிக்கு திண்டாட்டம்

இந்தியாவில் மீண்டும் தடுப்பூசிக்கு திண்டாட்டம்

3 mins read

புது­டெல்லி: இந்­தியா முழு­வ­தும் மீண்­டும் கொவிட்-19 தடுப்­பூ­சிக்கு கடும் தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது. கர்­நா­டகா, தெலுங்­கானா, ஆந்­தி­ரப் பிர­தே­சம், ஒடிசா உள்­ளிட்ட பல மாநி­லங்­கள் அவற்­றி­டம் தடுப்­பூ­சி­கள் இல்லை என்று கூறி­யுள்­ளன.

இதற்­கி­டையே இது­வரை நாடு முழு­வ­தும் 390 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட தடுப்­பூ­சி­கள் மாநி­லங் களுக்கு வழங்­கப்­பட்­டி­ருப்­ப­தாக இந்­திய அர­சாங்­கம் கூறி­யுள்­ளது.

எனி­னும் தின­மும் போடப்­படும் தடுப்­பூ­சி­க­ளின் எண்­ணிக்கை 8 மில்­லி­ய­னி­லி­ருந்து 4 மில்­லி­ய­னுக்கு குறைந்­துள்­ளது. தடுப்­பூசி மருந்து இல்­லா­த­தால் பெரும்­பா­லான மாநி­லங்­களில் தடுப்­பூசி நிலை­யங்­கள் மூடப்­பட்­டுள்­ளன.

தமிழ்­நாட்­டுக்கு சிறப்பு ஒதுக்­கீ­டாக 10 மில்­லி­யன் தடுப்­பூ­சி­களை வழங்­க­வேண்­டும் என்று முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டா­லின் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

கொரோனா பாதிப்பு அதி­கம் உள்ள மகா­ராஷ்­டிரா மாநி­லத்­தில் தின­மும் 1.5 மில்­லி­யன் தடுப்­பூசி களைப் போடும் திறன் இருந்த போதும் தடுப்­பூசி தட்­டுப்­பாட்­டால் அப்­பணி முடங்­கி­யுள்­ளது.

கர்­நா­ட­கா­வில் கடந்த 3 மாதங்­களில் இரண்­டா­வது தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை குறைந்­துள்­ளது.

தெலுங்­கானா தடுப்­பூசி நிலை­யங்­களில் சில நாளாக கோவேக்­சின் தடுப்­பூசி முற்­றி­லும் இல்லை. கேர­ளா­வி­லும் தடுப்­பூ­சித் தட்­டுப்­பாடு பெரும்­பி­ரச்­னை­யாக உள்ள தாக அதி­கா­ரி­கள் கூறி­னர். புது­டெல்­லி­யில் தடுப்­பூசி கையி­ருப்பு இன்­னும் 2 நாட்­க­ளுக்கு மட்­டுமே உள்­ளது என்­ற­னர் அதி­கா­ரி­கள். தெரி­வித்­த­னர்.

அதே போல் ஆந்­திரா, ஒடிசா உள்­ளிட்ட மாநி­லங்­களில் கொரோனா தடுப்­பூ­சிக்கு தட்­டுப்­பாடு நில­வு­கிறது. இந்த ஆண்டு இறு­திக்­குள் அனை­வ­ருக்­கும் தடுப்­பூசி போடு­வதை இலக்காக நிர்­ண­யித்தது மத்­திய அர­சாங்­கம். அதற்கு தின­மும் குறைந்­த­பட்­சம் 8 மில்­லி­யன் தடுப்­பூ­சி­கள் போடவேண்­டும். தற்­போது மீண்­டும் ஏற்­பட்­டுள்ள தடுப்­பூ­சி தட்டுப்பாடு அந்த முயற்­சிக்கு பின்­ன­டை­வாக கரு­தப்­ப­டு­கிறது.

தடுப்பூசி எங்கே? ராகுல் கேள்வி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி 'தடுப்பூசி எங்கே' என்ற ஹேஷ்டேக்குடன் டிவிட்டர் வெளியிட்டுள்ள பதிவில், ''டெல்லி உட்பட பல மாநிலங்கள் தடுப்பூசி பற்றாக்குறை எதிர்க்கொண்டு உள்ளது. ஆனால், ஒன்றிய அரசு மறுத்துள்ளது. சொல்லாட்சி மட்டும்தான். ஆனால் தடுப்பூசிகள் இல்லை'' என்று பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், டிசம்பர் இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதாக அளித்த வாக்குறுதி 'வெற்று பெருமை' மற்றும் 'தவறான வாக்குறுதி' என்றார்.

மக்களை பயமுறுத்துகிறார்கள்

பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக எழுந்து புகார் குறித்து ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டிவியா டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவியில், 'தடுப்பூசி இருப்பு நிலை குறித்து, பல்வேறு மாநில அரசுகள் மற்றும் தலைவர்களின் அறிக்கைகள் மற்றும் கடிதங்கள் மூலம் நான் அறிந்து கொண்டேன். மக்களிடையே பீதியை ஏற்படுத்த மட்டுமே பயனற்ற அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். ஜூன் மாதம் மட்டும் 11.46 கோடி டோஸ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது, ஜூலை மாதத்தில் 13.50 கோடியாக உயரும்' என பதிவிட்டுள்ளார்.

அமெரிக்கா தடுப்பூசி இந்தியா வருவதில் சிக்கல்

அமெரிக்க அதிபர் பைடன் தங்களது கையிருப்பில் உள்ள 8 கோடி டோஸ் தடுப்பூசிகளை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு வழங்குவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். அதன்படி, பாகிஸ்தான், நேபாள், பூட்டான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஒன்றிய அரசு சட்ட ரீதியாக அனுமதி கொடுக்காததால், அமெரிக்க தடுப்பூசிகள் இந்தியா வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.