மலேசியா: புதிய உச்சத்தைத் தொட்ட கொரோனா தொற்று

மலேசியா: புதிய உச்சத்தைத் தொட்ட கொரோனா தொற்று

2 mins read
92f60f5c-a958-4b2b-8ae4-fe72c55162ab
மலேசியாவில் உடற்குறையுள்ளோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வசதியாக பேருந்துகள் தடுப்பூசி போடும் நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளன. பாகாங்கில் அத்தகைய நடமாடும் நிலையத்தில் தடுப்பூசிப் பணிகள் நடந்தன. படம்: பெர்னாமா -

கோலாலம்பூர்: மலேசியாவில் கொவிட்-19 தொற்று தொடர்ந்து மூன்றாவது நாளாக புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி அங்கு புதிய உச்சமாக 13,215 புதிய கிருமித் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.

கடந்த செவ்வாய்க்கிழமை பத்தாயிரத்தைத் தாண்டிய கொரோனா தொற்றுச் சம்பவங்கள் நேற்று 13,000ஐத் தொட்டன.

கொரோனா தொற்­றி­ய­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 880,782 என்று அந்­நாட்டு சுகா­தா­ரத் துறை­யின் தலைமை இயக்­கு­நர் நூர் ஹிஷாம் அப்­துல்லா டுவிட்­ட­ரில் பதி­விட்­டார்.

சிலாங்­கூ­ரில் ஆக அதி­க­மாக 6120 கிரு­மித்தொற்­று சம்­ப­வங்­கள் பதி­வா­யின. அடுத்த நிலைகளில் நெகிரி செம்­பி­லா­னில் 1,603 பேருக்கும் கோலா­லம்­பூ­ரில் 1,499 பேருக்கும் புதி­தா­கத் தொற்று கண்­டது.

சமூக ஊட­கங்­களில் பதி­வேற்­றப்­பட்ட காணொ­ளி­கள், கிள்­ளான் பள்­ளத்­தாக்­கில் உள்ள மருத்­து­வ ­ம­னை­கள், கிரு­மிப் பரி­சோ­தனை நிலை­யங்­கள், தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டோ­ருக்­கான நிலை­யங்­கள் ஆகி­யவை கூட்­ட­நெ­ரி­ச­லால் திண­று­ வ­தைக் காட்­டின.

தொழிற்­சா­லை­க­ளி­லும் வேலை­யி­டங்­க­ளி­லும் பரி­சோ­தனை நட­வ­டிக்­கை­கள் முடுக்­கி­வி­டப்­பட்­டதே தொற்று எண்­ணிக்கை கூடி­ய­தற்­குக் கார­ணம் என்று டாக்­டர் நூர் ஹிஷாம் கூறி­னார்.

இன்­ன­மும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத 60 வய­துக்­கும் மேற்­பட்­டோர் முன்­ப­திவு செய்­யா­மல் மருந்­த­கங்­களில் தடுப்­பூசி போட்­டுக் கொள்ள ஏற்­பாடு செய்­யப்­படும் என்று மலே­சிய சுகா­தார அமைச்­சர் டாக்­டர் ஆதாம் பாபா நேற்று கூறி­னார். தொற்று அதி­கம் உள்ள சிலாங்­கூ­ரில் அது முத­லில் நடப்­புக்கு வரும் என்­றார் அவர்.

இவ்­வே­ளை­யில் இரண்டு தடுப்­பூ­சி­க­ளை­யும் போட்­டுக் கொண்­ட­வர்­க­ளுக்கு கட்­டுப்­பாட்­டுத் தளர்­வு ­க­ளைப் பற்றி அர­ர­சாங்­கம் பரி சீலித்து வரு­வ­தாக பிர­த­மர் முஹை­தீன் யாசின் கூறி­யுள்­ளார்.

நீண்ட பொது முடக்­கத்­துக்­குப் பின்­னர் நாடு மீண்­டும் வழக்க நிலைக்­குத் திரும்­பு­வ­தற்­கான தேசிய மீட்­சித் திட்­டத்­தின் கீழ், தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் பய­ணம் மேற்­கொள்­ள­வும் உண­வ­கங்­களில் அமர்ந்து சாப்­பி­ட­வும் அனு­ம­திப்­பது உள்­ளிட்ட நட­வ­டிக்­கை­கள் ஆரா­யப்­பட்டு வரு­கின்­றன.

தேசிய மீட்­சித் திட்­டம் இவ்­வாண்டு இறு­தி­யில் வெளி­யி­டப்­படும் என்­றார் திரு முஹை­தீன்.

மலே­சி­யா­வின் தடுப்­பூ­சித் திட்­டம் மும்­மு­ர­மாக நடை­பெற்று வரு­வ­தைச் சுட்­டிக்­காட்டிய அவர், ஒரே நாளில் 421,000 பேருக்கு தடுப்­பூசி போடப்பட்டதை மீட்­சிக்கான நல்ல அறி­குறி எனக் கூறி­னார். கிள்­ளான் பள்­ளத்­தாக்­கில் தடுப்­பூசி போடுவதில் கவ­னம் செலுத்­தப்­பட்டு வரு­வ­தாக அவர் தெரி­வித்­தார்.