660 மி. தடுப்பூசிகளை வாங்கும் இந்தியா

660 மி. தடுப்பூசிகளை வாங்கும் இந்தியா

2 mins read

இந்­திய அரசு இதுவரை இல்லாத வகையில் ரூ.14,505 கோடி (S$2.36 பில்லியன்) மதிப்பில் 660 மில்­லி­யன் கொவி­ஷீல்டு, கொவேக்­சின் தடுப்­பூ­சி­களை வாங்கவிருக்­கிறது.

அத்­து­டன், ஹைத­ரா­பாத்­தைச் சேர்ந்த 'பயோ­லா­ஜிக்­கல் இ' நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்து 300 மில்­லி­யன் 'கொர்­பே­வேக்ஸ்' தடுப்­பூ­சி­களைப் பெற­வும் முன்­ப­ணம் தரப்­பட்­டுள்­ளது.

கொரோனா பர­வல் மேலும் அதி­க­ரித்து, தடுப்­பூ­சிப் பற்­றாக்­குறை நில­வி­னால் பல மில்­லி­யன் பேர் எளி­தில் பாதிக்­கப்­படும் வாய்ப்­புள்­ளது என்று அர­சாங்க அதி­கா­ரி­களும் சுகா­தார வல்­லு­நர்­களும் எச்­ச­ரித்­ததை அடுத்து, இந்­ந­ட­வ­டிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன.

ஆகஸ்ட்-டிசம்­பர் கால­கட்­டத்­தில் 135 மில்­லி­யன் தடுப்­பூ­சி­கள் கிடைக்­கும் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­கக் கடந்த மாதம் 26ஆம் தேதி உச்ச நீதி­மன்­றத்­தில் இந்­திய அரசு உறு­தி­மொ­ழிப் பத்­தி­ரம் தாக்­கல் செய்தி­ருந்­தது.

இவ்வாண்டு இறுதிக்குள் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவர்க்கும் கொரோனா தடுப்பூசி போட இந்தியா இலக்கு கொண்டு இருக்கிறது.

இவ்வேளையில், கொரோனா பாதிப்பு மிகுதியாக இருக்கும் மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

"கடந்த வாரம் புதிய பாதிப்­பு­களில் 80 விழுக்­கா­டும் உயி­ரி­ழப்­பில் 84 விழுக்­கா­டும் இந்த ஆறு மாநி­லங்­க­ளில்­தான் பதி­வா­யின," என்று குறிப்­பிட்ட பிர­த­மர் மோடி, 'பரி­சோ­தனை, தட­ம­றி­தல், மருத்­து­வம், தடுப்­பூசி' என்ற உத்­தி­யைக் கையா­ளு­மாறு அம்­மாநில முதல்­வர்­க­ளி­டம் வலி­யு­றுத்­தி­னார்.

இத­னி­டையே, கடந்த 24 மணி நேரத்­தில் புதி­தாக 38,949 பேரை கொரோனா தொற்­றி­விட்­ட­தா­க­வும் 542 பேர் இறந்­து­விட்டதா­க­வும் இந்­திய சுகா­தார அமைச்சு நேற்­றுக் காலை வெளி­யிட்ட புள்­ளி­வி­வ­ரம் தெரி­வித்­தது.