தொற்று இல்லாதோருக்கே மீன் வியாபாரம் செய்ய அனுமதி சமூகத்தில் புதிதாக 88 பேருக்கு கிருமித்தொற்று

தொற்று இல்லாதோருக்கே மீன் வியாபாரம் செய்ய அனுமதி சமூகத்தில் புதிதாக 88 பேருக்கு கிருமித்தொற்று

3 mins read

சிங்­கப்­பூ­ரில் புதி­தாக 88 பேருக்கு கிரு­மித்­தொற்று நேற்று உறு­திப்­படுத்­தப்­பட்­டது. இதில் 23 பேர் கேடிவி கிரு­மித்­தொற்­றுக் குழு­மத்­து­ட­னும் 37 பேர் ஜூரோங் மீன்­பி­டித் துறை­மு­கம் கிரு­மித்­தொற்­றுக் குழு­மத்­து­ட­னும் தொடர்பு உடை­ய­வர்­கள் என்று சுகா­தார அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரி­வித்­துள்­ளது.

சமூ­கத்­தில் பாதிக்­கப்­பட்ட 88 பேரில் 30 பேர் கிருமி தொற்றி­யோ­ரு­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள். அவர்­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர். 41 சம்­ப­வங்­கள் மற்ற சம்­ப­வங்­க­ளு­டன் தொடர்புடை யவை. 17 மற்ற தொற்­று­க­ளு­டன் தொடர்­பில்­லா­தவை.

சமூ­கத்­தில் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் தடுப்­பூசி போடாத 70 வய­துக்­கும் மேற்­பட்ட மூத்­தோர் நால்­வர் அடங்­கு­வ­தா­க­வும் அவர்­கள் கடு­மை­யான உடல் உபா­தைக்கு உட்­ப­டக்­கூ­டிய அபா­யத்­தில் இருப்­ப­தா­க­வும் சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

வெளி­நாட்­டில் இருந்து வந்­தோ­ரில் நால்­வ­ருக்கு கொரோனா பாதிப்பு உறு­தி­செய்­யப்­பட்­டுள்­ளது. அவர்­கள் சிங்­கப்­பூர் வந்­த­தும் இல்­லத் தனி­மை­யில் வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

மொத்­தத்­தில், நேற்று 92 புதிய கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் சிங்­கப்­பூ­ரில் பதி­வாகி உள்­ளன. இதை­ய­டுத்து, சிங்­கப்­பூ­ரில் ஒட்­டு­மொத்த கொரோனா பாதிப்பு 63,073 ஆனது.

இதற்­கி­டையே, கிரு­மித்­தொற்று கட்­டுப்­பாட்டு நட­வ­டிக்­கை­யாக தேசிய சுற்­றுப்­புற வாரி­யத்­தால் நிர்­வ­கிக்­கப்­படும் அல்­லது நிய­மிக்­கப்­பட்ட சந்­தை­களில் செயல்­படும் அனைத்து மீன், கட­லு­ணவு கடைக்­கா­ரர்­களும் நேற்று கடை திறக்க அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.

கிரு­மித்­தொற்று இல்லை என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட பின்­னர் அவர்­கள் மீண்­டும் வர்த்­த­கத்­தைத் தொடங்­க­லாம்.

குறிப்­பிட்ட பரி­சோ­தனை நிலை­யங்­களில் பிசி­ஆர் பரி­சோ­தனை செய்­து­கொள்ள கடைக்­கா­ரர்­களுக்கு சுகா­தார அமைச்­சி­டம் இருந்து குறுந்­த­க­வல் அனுப்­பப்­படும். தொற்று இல்லை என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­ப­டும்­வ­ரை­ அவர்­கள் தங்­க­ளைத் தனி­மைப்­படுத்­திக்­கொள்ள வேண்­டும்.

வீட்டைவிட்டு வெளியே செல்­லக்­கூ­டாது என்று தேசிய சுற்­றுப்­புற வாரி­ய­மும் சுகா­தார அமைச்­சும் இணைந்து நேற்று வெளி­யிட்ட அறிக்கை தெரி­வித்­துள்­ளது.

ஜூரோங் மீன்­பி­டித் துறை­முகத்­துக்­குச் சென்ற மீன் விற்­ப­னை­யா­ளர்­க­ளி­டையே கிரு­மித்­தொற்று பர­வியதை அடுத்து இக்­கட்­டுப்­பாடு விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அறிக்கை விளக்­கி­யது.

புதிய மீன்­கள் அல்­லது கடலு­ ண­வு­களை விற்­காத மற்ற கடைக்­கா­ரர்­கள் தொழி­லைத் தொடரலாம்.

அத்­து­டன், சந்தைகள், உணவு மையங்­களில் உள்ள அனைத்து கடைக்­கா­ரர்­களையும், உத­வி­யாளர்­க­ளை­யும் கிரு­மி பரி­சோ­தனை செய்­து­கொள்ள வாரி­ய­மும் அமைச்­சும் ஊக்­கு­விக்­கின்­றன.

சந்­தை­க­ளி­லும் உணவு மையங்­ க­ளி­லும் கூட்­டத்­தைத் தவிர்க்­குமாறு வரு­கை­யா­ளர்­கள் கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கின்­ற­னர்.

பாதிக்­கப்­பட்ட புதிய மீன், கடல் உண­வுக் கடைக்­கா­ரர்­கள் அங் மோ கியோ­வில் உள்ள முன்­னாள் டா சியாவ் தொடக்­கப்­பள்ளி, பாசிர் ரிஸ் முன்­னாள் கோரல் தொடக்­கப்­பள்ளி, முன்­னாள் பிடோக் நார்த் உயர்­நி­லைப் பள்ளி, முன்­னாள் பீஷான் பார்க் உயர்­நி­லைப் பள்ளி, முன்­னாள் ஷூகுன் உயர்­நி­லைப் பள்ளி ஆகிய பரி­சோ­தனை நிலை­யங்­க­ளுக்­கும் செல்­ல­லாம்.

எதிர்­ம­றை­யான பிசி­ஆர் சோதனை முடி­வைப் பெற்­ற­தும், அவர்­கள் உட­ன­டி­யாக வர்த்­த­கத்தை தொடங்கலாம்.

புதிய மீன், கடல் உண­வுக் கடைக்­கா­ரர்­க­ளுக்­கு சுய பரி­சோ­தனை செய்­து­கொள்ள ஆன்­டி­ஜன் விரைவு சோதனை (ஏஆர்டி) கரு­வி­களும் வழங்­கப்­படும்,

கிரு­மித்­தொற்று சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­கொண்ட ஏழாம் நாளில் அவர்­கள் சுய­மாக ஏஆர்டி பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டும். 14வது நாளில் அவர்­கள் நிய­மிக்­கப்­பட்ட பரி­சோ­தனை நிலை­யங்­களில் மற்­றொரு பிசி­ஆர் சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்­படு­வார்­கள்.

தேசிய சுற்­றுப்­புற வாரி­யத்­தால் நிர்­வ­கிக்­கப்­படும் அல்­லது நிய­மிக்­கப்­பட்ட அனைத்து உண­வங்­காடி நிலை­யங்­க­ளி­லும் சந்­தை­களி­லும் உள்ள கடைக்­கா­ரர்­களுக்­கும் உத­வி­யா­ளர்­க­ளுக்­கும் கொவிட்-19 பரி­சோனை நடத்த தேசிய சுற்­றுப்­புற வாரி­யத்­து­டன் இணைந்து சுகா­தார அமைச்சு ஏற்­பாடு செய்­துள்­ளது. பரி­சோ­தனை விவ­ரங்­க­ள் குறித்து இந்தக் கடைக்காரர்­க­ளுக்கு குறுந்­த­க­வல் அனுப்­பப்­படும் என்று தெரிவிக்கப்­பட்­டுள்­ளது.