சட்டவிரோத கேளிக்கைக் கூடங்களில் 39 பேர் கைது

1 mins read

சட்­ட­வி­ரோ­த­மான கேளிக்­கைக் கூடங்­களில் மொத்­தம் 39 பேர் பிற­ரு­டன் பழகி வந்­தது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. கடந்த வாரம் புதி­தாக கேடிவி கிரு­மித்­தொற்­றுக் குழு­மம் உரு­வா­னதை அடுத்து மேற்­கொள்­ளப்­பட்ட போலிஸ் சோதனை நட­வ­டிக்­கை­யில் இந்த விவ­ரம் தெரிய வந்­துள்­ளது.

உரி­மம் இல்­லா­மல் மது­பா­னம் விநி­யோ­கம் செய்­த­தற்­காக 24 வய­துக்­கும் 37 வய­துக்கும் இடைப்­பட்ட மூவர் கைது செய்யப்­பட்­ட­தாக போலி­சார் கூறி­னர். இவர்­கள் சிலிகி ரோடு, தாகூர் லேனி­லுள்ள கடை­களின் உரி­மை­யா­ளர்­கள் என நம்­பப்­ப­டு­கிறது.

16 வய­துக்­கும் 20 வய­துக்­கும் இடைப்­பட்ட மேலும் 36 பேர், பாது­காப்பு தூர இடை­வெளி விதி­மு­றை­க­ளுக்கு உட்­பட்டு நடக்­கா­த­தற்­காக விசா­ரிக்­கப்­ப­டு­கின்­ற­னர். நேற்று முன்­தி­னம் நடத்­தப்­பட்ட சோதனை நட­வ­டிக்­கை­யின்­போது மது போத்­தல்­கள், 'கராவோக்கே' இயந்­தி­ரங்­கள் உள்­ளிட்­டவை பறி­மு­தல் செய்­யப்­பட்­டன. அந்த விற்­பனை நிலை­யங்­களில் செல்­லு­படி­யா­கும் உரி­மம் இல்­லா­மல் பொதுப் பொழு­து­போக்­கும் மது­பா­ன­மும் வழங்­கப்­பட்­ட­தாக நம்­பப்­ப­டு­கிறது.

"நடை­மு­றை­யில் உள்ள பாது­காப்­பு தூர இடை­வெ­ளியை தீவி­ர­மா­கப் பின்­பற்ற பொது­மக்­கள் அறி­வு­றுத்­தப்­ப­டு­கி­றார்­கள்," என்று போலிஸ் கூறி­யது.