லீ: அனைவரும் தடுப்பூசி போட வேண்டியது அவசியம்

லீ: அனைவரும் தடுப்பூசி போட வேண்டியது அவசியம்

2 mins read
2cba9837-773e-429c-9595-966521829c96
கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்படும் சோங் பூன் ஈரச்­சந்தை, உணவு மையம். இது ஆகஸ்ட் 1 வரை மூடப்பட்டிருக்கும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கேடிவி கேளிக்கை இசைக்­கூ­டம், ஜூரோங் மீன்­பி­டித் துறை­மு­கம் ஆகி­ய­வற்­றில் உரு­வா­கி­யுள்ள புதிய கிரு­மித்­தொற்­றுக் குழு­மங்­கள் அனை­வ­ரும் தடுப்­பூசி போட்­டுக் கொள்ள வேண்­டி­ய­தன் அவ சியத்தை நினை­வூட்டுகிறது என்று பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்­துள்­ளார்.

குறிப்பாக, தொற்று ஏற்­பட்­டால் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­ப­டக்­கூ­டி­ய­ முதி­ய­வர்­கள் தடுப்­பூசி போடுவது அவ­சி­யம் என்று தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் அவர் நேற்று கூறினார்.

தொற்று மேலும் பர­வு­வ­தைத் தடுக்­கும் வகை­யில், அங் மோ கியோ­வி­லுள்ள சோங் பூன் ஈரச்­சந்தை, உணவு மையத்­தில் வேலை பார்க்­கும் அனை­வ­ருக்­கும் கிரு­மி பரி­சோ­தனை செய்­யப்­பட்டு அவர்­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள் என்று பிர­த­மர் தெரிவித்தார்.

ஜூலை 3ஆம் தேதி முதல் அந்த ஈரச்­சந்தை, உணவு மையத்­துக்­குச் சென்­ற­வர்­கள் உடல்­ந­லக் குறைவு ஏற்­பட்­டால் உட­ன­டி­யாக மருத்­து­வ­ரைச் சென்று பார்க்­கு­மாறு அவர் கேட்­டுக்­கொண்­டார்.

கொவிட்-19 தொற்று சம்­ப­வங்­கள் உள்ள 12 ஈரச்­சந்­தை­களில் அங் மோ கியோ அவென்யூ 10, புளோக் 453Aல் உள்ள அந்த ஈரச்­சந்­தை­யும் ஒன்று. இது ஜூரோங் மீன்­பி­டித் துறை­முக தொற்­றுக் குழு­மத்­து­டன் தொடர்­பு­டை­யது என்று நம்­பப்­ப­டு­கிறது.

"நம்மை பாது­காக்க மிக முக்­கி­ய­மான வழி அனை­வ­ரும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­து­தான்," என்­றார் பிர­த­மர் லீ. வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி தேசிய தினத்­துக்­குள் மக்­கள்தொகை­யில் மூன்­றில் இரண்டு பங்­கி­ன­ருக்கு முழு­மை­யா­கத் தடுப்­பூசி போடும் இலக்கை எட்­டும் வகை­யில் சிங்­கப்­பூர் செயல்­ப­டு­கிறது என்­றார் அவர்.

"அதே­நே­ரத்­தில், முகக்­க­வ­சம் அணி­வது, கைக­ளைக் கழு­வு­வது, பாது­காப்பு தூர இடை­வெ­ளி­யைப் பின்­பற்­று­வது போன்­ற நடைமுறை களைக் கடைப்பிடியுங்­கள். இது கிருமிப் பர­வலை மெது­வாக்­கும். கேடிவி, ஜூரோங் மீன்­பி­டித் துறை­மு­கம் போன்ற தொற்­றுக் குழு­மங்­க­ளைக் கட்­டுக்­குள் கொண்­டு­வ­ரும்," என்­றார் திரு லீ.

இந்த இடங்­க­ளுக்­கும் பாதிக்­கப்­பட்ட ஏனைய ஈரச்­சந்­தை­க­ளுக்­கும் அண்­மை­யில் சென்­ற­வர்­களை கிருமி பரி­சோ­தனை செய்­து­கொள்­ளு­மாறு அவர் கேட்­டுக்­கொண்­டார்.பாதிக்­கப்­பட்ட ஈரச்­சந்தை, உணவு மையங்­க­ளின் பட்­டி­யலை சுகா­தார அமைச்­சின் இணை­யப் பக்­கத்­தில் பார்க்­க­லாம்.