ஈரச்சந்தைகளுக்கும் உணவங்காடி நிலையங்களுக்கும் செல்வோர் டிரேஸ்டுகெதர் செயலி அல்லது சாதனம் வழி வருகைப் பதிவு செய்வது கட்டாயமாகிறது. 28 ஈரச்சந்தைகள் மற்றும் உணவங்காடி நிலையங்களில் கொவிட்-19 கிருமித்தொற்று பரவியதைத் தொடர்ந்து அங்கு செல்வோருக்கான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட உள்ளன. வரும் வாரங்களில் தீவு முழுவதும் உள்ள ஈரச் சந்தைகளுக்கும் உணவங்காடி நிலையங்களுக்கும் புதிய
வருகைப் பதிவு முறை விரிவுபடுத்தப்படும் எனவும் பொதுமக்கள் இதனைக் கடைப்பிடிக்குமாறும் சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.