வேற்றுமையில் ஒற்றுமையே பலம்

3 mins read

இன நல்லிணக்க நாளில் கல்வி அமைச்சர் சான் வலியுறுத்து

ரிவர் வேலி உயர்­நி­லைப் பள்­ளி­யில் கொலை செய்­யப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கின்ற 13 வயது மாண­வ­னின் இறு­திச்­சடங்­கில் பல சம­யக் குழு­வி­ன­ரும் கலந்து­கொண்டு அந்த மாண­வ­ருக்­காக பிரார்த்­தனை செய்­த­னர்.

மாண­வர்­க­ளின் நல்­வாழ்­விற்­கா­க­வும் அவர்­கள் வழி­பட்­ட­தாக கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் தெரி­வித்­தார். வேற்­று­மையில் ஒற்­றுமையைப் பலப்படுத்துவது என்ற நம்­பிக்­கை­யில்­தான் சிங்­கப்­பூர் நாடு உரு­வாக்­கப்­பட்­டது என்பதை சிங்­கப்­பூரர்கள் இந்த இன நல்­லி­ணக்க நாளில் நினைவு கூர­வேண்­டும் என்­றும் திரு சான் வலி­யு­றுத்­தி­னார்.

"இனம், சம­யம் பாரா­மல் எல்­லா­ரும் ஐக்­கி­ய­மாக மன­தைத் தொடும் அள­விற்குக் கலந்­து­கொண்டு வழி­பட்­டது சோகமான இருட்­டில் வெளிப்படும் வெளிச்­சமாக இருக்­கிறது.

"எல்­லா­வற்­றுக்­கும் மேலாக நாம் சக சிங்­கப்­பூ­ரர்­கள் என்ற புரிந்­து­ணர்வை அது புலப்­ப­டுத்­து­வ­தாக இருக்­கிறது," என்று இன நல்­லி­ணக்க நாளைக் குறிக்­கும் வகை­யில் ஃபேஸ்புக்­கில் அமைச்­சர் தெரி­வித்து இருக்­கி­றார்.

சிங்­கப்­பூ­ரில் 1964ல் நடந்த இனக் கல­வ­ரங்­கள் பற்­றி­யும் இன நல்­லி­ணக்­கத்­தின் முக்­கி­யத்­து­வம் குறித்­தும் மாண­வர்­க­ளுக்கு நினை­வூட்­டு­வ­தற்­காக 1998 முதல் கல்வி அமைச்சு ஜூலை 21ஆம் தேதியை இன நல்­லி­ணக்க நாளா­கக் கடைப்­பி­டித்து வரு­கிறது. அதை­யொட்டி பள்­ளிக்­கூ­டங்­களும் சமூக அமைப்­பு­களும் அர­சி­யல்­வா­தி­களும் சமூக ஊட­கங்­களில் அந்த நாளை நினை­வு­கூர்ந்­த­னர்.

"பொது­வான பல இன சிங்­கப்­பூ­ரர் என்ற அடை­யா­ளம் என்­பது, பெரும்­பான்மை கலா­சா­ரம், சிறு­பான்­மை­யி­னத்­த­வர்­க­ளின் கலா­சா­ரத்­தைக் கிர­கித்­துக் கொள்­வது அல்ல.

"நாம் நமது சொந்த அடை­யா­ளங்­களைக் கைவிட்­டு­வி­டு­வ­தும் அதன் பொரு­ளா­காது. பதி­லாக அது நம்­மு­டைய வள­மிக்க பன்­மய அடை­யா­ளங்­களில் பதிந்து இருக்­கும் அடிப்­ப­டை­ அம்சங்களு டன் கூடிய பொது­வான நன்­னெ­றி­க­ளைக் கொண்டு அனைவ­ரும் பகிர்ந்­து­கொள்­ளக்­கூ­டிய, எதிர்கால கண்ணோட்டத்துடன் கூடிய அடையாளத்தைப் பலப்­ப­டுத்­து­வதே ஆகும்," என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.

ஒரு­வர் மற்­றொ­ரு­வ­ருக்கு உறு­து­ணை­யாக இருக்­கும் வகை­யில் பள்­ளிக்­கூடங்­களும் சமூ­கங்­களும் ஐக்­கி­ய­மாக இருப்­ப­தற்கு ஓர் எடுத்­துக்­காட்­டாக செயின்ட் ஜோசஃப் கல்வி நிலை­யத்­தின் முதல்­வர் ரெவ­ரண்ட் ஃபாதர் டாக்­டர் அட்­ரி­யன் டான்­க­ரின் வழி­பாடு ஒன்றை இரண்­டாம் கல்வி அமைச்­சர் மாலிக்கி ஓஸ்­மான் சுட்­டிக்­காட்­டி­னார்.

"நாம் வெளிப்­ப­டுத்­தும் கரு­ணை­யும் ஆத­ர­வும் நாம் நம்­மு­டைய வேறு­பா­டு­களை எல்­லாம் கடந்து பொது­வில் அதிக அக்­க­றை­யு­டன் இருக்­கி­றோம். நம்மை பிரிப்­ப­தை­விட ஒன்று சேர்க்­கவே அதிக அம்­சங்­கள் இருக்­கின்­றன என்பதையே காட்டுகின்றன," என்று திரு மாலிக்கி குறிப்­பிட்­டார்.

இந்த ஆண்டு கடைப்­பிடிக்­கப்­படும் இன நல்­லி­ணக்க நாள் மேலும் முக்­கி­யத்­து­வம் பெறு­வ­தாக கல்வித் துணை அமைச்­சர் கான் சியாவ் ஹுவாங் தெரி­வித்­தார். தொற்று தொடங்­கி­யது முதல் பாதிக்­கப்­பட்டவர்­க­ளுக்கு உதவ வெவ்­வே­றான இன, சமய குழுக்­களும் முன்­வந்து இருப்­பதை அவர் சுட்­டி­னார்.

நம் முன்­னோ­டி­களும் முதி­ய­வர்­களும் பல ஆண்டு கால­மாக படா­த­பா­டு­பட்டு பல இன, பல கலா­சார சமூ­கத்தை எப்­படி பலப்­ப­டுத்தி வந்­தி­ருக்­கி­றார்­கள் என்­பதை அண்­மைய இன­வா­தச் சம்­ப­வங்­கள் நமக்கு நினை­வூட்­டு­வ­தாக அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

இன நல்­லி­ணக்­கத்­தைப் பலப்­ப­டுத்தும் வகை­யில் பள்­ளிக்­கூ­டங்­கள் பிணைப்பு ­மிக்க சிங்­கப்­பூரை வலுப்­ப­டுத்து­வ­தில் மாண­வர்­கள் ஆற்­றக்­கூ­டிய பணி­களில் ஒரு­மித்த கவ­னம் செலுத்­தின. பரஸ்­பர மரி­யாதை, நல்­லி­ணக்­கம் முதலான நன்­னெ­றி­க­ளை­யும் அவை வலி­யு­றுத்­தின.