ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளிக்கு நேற்று மாணவர்கள் சென்றபோது அங்கு நிலைமை கொஞ்சம் அமைதியாகக் காணப்பட்டது. ஒரு டஸனுக்கும் அதிக ஊழியர்களும் பாதுகாப்பு அதிகாரிகளும் வாயில் கதவு அருகே அதிகாலை 6.30 மணி முதல் இருந்தனர். குறைந்தபட்ச வாழ்த்துகளே பரிமாறிக் கொள்ளப்பட்டன.
பூன் லேயில் அமைந்திருக்கும் அந்தப் பள்ளியில் 13 வயது மாணவன் ஒருவன் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படு கிறது. அது, ஹஜ் பெருநாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மூடப்பட்டு இருந்தது.
நேற்று பல மாணவர்களும் பூங்கொத்துகளுடன் வந்து மாண்டுவிட்ட தங்கள் சக மாணவருக்கு அஞ்சலி செலுத்தினர்.