கொரோனா: இந்தியாவில் 4.9 மில்லியன் பேர் பலி என்கிறது ஆய்வு

கொரோனா: இந்தியாவில் 4.9 மில்லியன் பேர் பலி என்கிறது ஆய்வு

2 mins read

இந்­தி­யா­வில் 2020 ஜன­வ­ரிக்­கும் 2021 ஜூன் மாதத்­திற்­கும் இடை­யில் கொவிட்-19 கார­ண­மாக ஏறத்­தாழ 4.9 மில்­லி­யன் பேர் (ஏறத்­தாழ அரை கோடி) மர­ண­ம­டைந்­தி­ருக்­கக்­கூ­டும் என்று அமெ­ரிக்­காவை சேர்ந்த புதிய ஆய்வு ஒன்று தெரி­விக்­கிறது.

இந்­தியா சுதந்­தி­ரம் அடைந்­த­தற்­குப் பிறகு இப்­ப­டிப்­பட்ட ஒரு பேரி­டர் சம்­ப­வம் அங்கு இது­வரை நிகழ்ந்­ததே இல்லை என்று அந்த ஆய்வு குறிப்­பிட்டு உள்­ளது.

இந்­தி­யா­வில் கொவிட்-19 கார­ண­மாக 414,000க்கும் மேற்­பட்­ட­வர்­கள் மாண்டு இருப்­ப­தாக அதி­கா­ர­பூர்­வ­மான தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

கொரோனா தொடங்­கி­யது முதல் இந்த ஆண்டு ஜூன் வரை பல கார­ணங்­க­ளா­லும் மர­ண­மடைந்­த­வர்­களை அந்த ஆய்வு உள்­ள­டக்கி இருக்­கிறது.

வாஷிங்­டனை தள­மா­கக் கொண்டு செயல்­படும் 'உலக நில­வ­ரங்­க­ளுக்­கான மையம்' என்ற அமைப்பு அந்த ஆய்வை வெளி­யிட்டு உள்­ளது.

உரு­மா­றிய கொவிட்-19 டெல்டா கிருமி வேக­மாக பர­வி­ய­தால் மே மாதம் மட்­டும் குறைந்­த­பட்­சம் 170,000 பேர் மாண்­டு­விட்­ட­தாக அதி­கா­ர­பூர்வ தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

ஆனால் மரண எண்­ணிக்கை மில்­லி­யன் கணக்­கில் இருக்­க­லாம் என்று அந்த ஆய்வு மதிப்­பி­டு­கிறது.

இத­னி­டையே, அந்த அறிக்கை பற்றி இந்­தி­யா­வின் சுகா­தார அமைச்சு கருத்து எதை­யும் தெரி­விக்­க­வில்லை.

இந்­நி­லை­யில், இந்­தி­யா­வில் மூன்­றில் இரண்டு பங்கு மக்­களுக்கு கொவிட்-19 எதிர்ப்பு சக்தி உரு­வாகி இருப்­ப­தா­க­வும் இருந்­தா­லும் இன்­ன­மும் 400 மில்­லி­யன் பேர் அந்­தக் கிரு­மி­யால் பாதிக்­கப்­படும் நிலை­யில் இருப்­ப­தா­க­வும் இந்­திய மருத்­துவ ஆய்­வுக் கழ­கம் எச்­ச­ரித்து உள்­ளது.

இந்­தக் கழ­கம் ஜூன், ஜூலை மாதத்­தில் தேசிய கொவிட்-19 எதிர்ப்பு ஆய்வை நடத்­தி­யது. அந்த நான்­கா­வது ஆய்வு முடி­வில் இந்த விவ­ரங்­கள் வெளி­யி­டப்­பட்­டன.

21 மாநி­லங்­களில் 70 மவாட்­டங்­களில் பொது­மக்­கள் 28,975 பேரை­யும் 7,252 சுகா­தார ஊழி­யர்­க­ளை­யும் உள்­ள­டக்கி அந்த ஆய்வு நடத்­தப்­பட்­ட­தா­க­வும் சுகா­தார ஊழி­யர்­களில் 10ல் ஒரு­வர் இன்­ன­மும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­வில்லை என்­பது தெரி­ய­வரு­வ­தா­க­வும் அந்த ஆய்வு குறிப்­பிட்டு உள்­ளது.

இந்­நி­லை­யில், இந்­தி­யா­வில் கிடு­கி­டு­வென குறைந்­து­வந்த கொவிட்-19 தொற்று மெல்ல அதி­க­ரிப்­ப­தா­கத் தெரி­கிறது. கடந்த 24 மணி நேரத்­தில் புதி­தாக 42,000 பேருக்கு கொவிட்-19 தொற்று உறு­தி­யா­ன­தா­க­வும் 3,998 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­தா­க­வும் மத்­திய சுகாதார அமைச்சு நேற்­றுக் காலை தெரி­வித்­தது. நாட்­டில் 407,170 பேர் சிகிச்சை பெற்று வரு­கி­றார்­கள்.