நான்கு புளோக்வாசிகளுக்கு கட்டாய கிருமிப் பரிசோதனை

நான்கு புளோக்வாசிகளுக்கு கட்டாய கிருமிப் பரிசோதனை

3 mins read

சிம்ஸ் அவென்­யூ­வில் உள்ள நான்கு புளோக்­கு­களில் வசிக்­கும் குடி­யி­ருப்­பா­ளர்­கள் அனை­வ­ரும் கட்­டாய கொவிட்-19 பரி­சோ­த­னைக்கு உட்­பட வேண்­டும். அந்த புளோக்­கு­களில் இருந்து சேக­ரிக்­கப்­பட்ட கழி­வு­நீர் மாதி­ரி­களில் கொரோனா கிரு­மிக்­கூ­று­கள் கண்டு­பி­டிக்­கப்­பட்­டதை அடுத்து, இந்­ந­ட­வ­டிக்கை இடம்­பெ­று­கிறது.

கேலாங் சிராய் சந்­தைக்கு அருகே அமைந்­துள்ள புளோக் 842, 844, 846, 848 ஆகிய நான்கு புளோக்­கு­களில் கொரோனா பர­வலுக்­கான சாத்­தி­யம் குறித்து ஆராய்ந்து வரு­வ­தா­கச் சுகா­தார அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

அத்­து­டன், எந்த வழி­யில் அது பரவி இருக்­க­லாம் என்­பது குறித்­தும் ஆரா­யப்­பட்டு வரு­கிறது.

கடந்த சனிக்­கி­ழ­மை முதல் கொரோனா பரி­சோ­தனை செய்­து­கொண்டு, 'தொற்று இல்லை' எனச் சான்று பெற்­ற­வர்­கள், விருப்­பப்­பட்­டால் மீண்­டும் பரி­சோ­தனை செய்­து­கொள்­ள­லாம்.

இந்­தக் கட்­டா­யப் பரி­சோ­தனை நட­வ­டிக்கை, 3, கேலாங் சிராய் எனும் முக­வ­ரி­யில் அமைந்­துள்ள கூடா­ரத்­தில் நேற்று தொடங்­கி­யது. இன்­றும் காலை 9 மணி­யிலிருந்து மாலை 4 மணி­வரை அங்கு பரி­சோ­தனை செய்­து­கொள்­ள­லாம்.

"எவர்க்­கே­னும் கிரு­மித்­தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டால், அமைச்சு அவ­ரைத் தனி­மைப்­ப­டுத்­தும். சமூ­கத்­தில் கொரோனா மேலும் பரவு­வ­தைத் தடுக்க, அவ­ரு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­த­வர்­கள் அடை­யா­ளம் காணப்­பட்டு, பரி­சோ­திக்­கப்­பட்டு, தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வர்," என்று அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இம்­மா­தம் 6ஆம் தேதி­ முதல் கடந்த செவ்­வாய்க்­கி­ழ­மை­வரை அந்த புளோக்­கு­க­ளுக்­குச் சென்­று­ வந்­தோ­ரும் அவற்­றில் குடி­யி­ருப்­போ­ரு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­தோ­ரும் விருப்­பப்­பட்­டால் கொரோனா பரி­சோ­தனை செய்­து­கொள்­ள­லாம். சமூ­கத்­தில் அறி­குறி­ இல்­லாத் தொற்­று­க­ளைக் கண்­ட­றிய இது உத­வும் என்று அமைச்சு குறிப்­பிட்­டது.

"அவர்­கள் தாங்­க­ளாக முன்­வந்து பரி­சோ­தனை செய்து­கொள்ள ஊக்­கு­விக்­கி­றோம்," என்று அமைச்சு கூறி­யுள்­ளது.

அப்­படி விருப்­பத்­து­டன் முன்­வந்து பரி­சோ­தனை செய்­து­கொள்ள முன்­ப­திவு செய்­வது அவசி­யம். அவர்­கள் குறிப்­பிட்ட வட்­டா­ரப் பரிசோ­தனை மையங்­க­ளி­லும் 3, கேலாங் சிரா­யில் அமைந்­துள்ள கூடா­ரத்­தி­லும் இன்­றும் நாளை­யும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி­வரை பரி­சோ­தனை செய்­து­கொள்ள முடி­யும்.

பரி­சோ­த­னைக்­குச் செல்­லும்­போது குடி­யி­ருப்­பா­ளர்­கள் தங்­க­ளது அடை­யாள அட்­டையை எடுத்­துச் செல்ல வேண்­டும்.

கூடுதல் தக­வல்­களுக்காக துண்­டுப் பிர­சு­ரங்­கள் விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்­ளன என்­றும் பாதிக்­கப்­பட்ட குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்­குக் குறுஞ்­செய்­தி­கள் அனுப்­பப்­பட்­டுள்­ளன என்­றும் அமைச்சு கூறி­யது.

பரி­சோ­தனை முடி­வு­க­ளுக்­காகக் காத்­தி­ருப்­ப­வர்­கள் முடிந்த அள­விற்கு சமூ­கத்­தில் ஒன்­று­கூடு­வ­தைக் குறைத்­துக்­கொள்­ளும்­படி அமைச்சு அறி­வு­றுத்தி இருக்­கிறது.

பரி­சோ­த­னைக்கு முன்­ப­திவு செய்­து­கொள்ளவும் அல்­லது மாற்­றுப் பரி­சோ­தனை மையங்­கள் குறித்­துக் கூடு­தல் தக­வல்­ தேவைப்­ப­ட்டாலும் https://go.gov.sg/sims-ave-appt என்ற இணை­யப் பக்­கத்தை நாட­லாம் அல்­லது 1800-333-9999 என்ற எண்­ணில் அழைக்­க­லாம்.

சமூகத்தில் மேலும் 162 பேர் பாதிப்பு

உள்ளூரில் மேலும் 162 பேரை கொவிட்-19 கிருமி தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் 87 பேர் ஜூரோங் மீன்பிடித் துறைமுகக் குழுமத்துடன் தொடர்பு உடையவர்கள். இதையடுத்து, அந்தக் குழுமத்தில் கிருமி தொற்றியோர் எண்ணிக்கை 541ஆக உயர்ந்துவிட்டது. கேடிவி குழுமத்தில் மேலும் ஐவரை கொரோனா தொற்ற, அந்தக் குழுமத்தில் இதுவரை மொத்தம் 220 பேர் பாதிக்கப்பட்டு விட்டனர். உள்ளூரில் புதிதாக பாதிக்கப்பட்ட 162 பேரில்

59 பேர் ஏற்கெனவே கிருமி தொற்றியோருடன் தொடர்பு உடையவர்கள். அவர்கள் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டு விட்டனர். தொடர்பிருந்த வகையில் மேலும் 51 பேர் பாதிக்கப் பட்டிருப்பது கண்காணிப்புப் பரிசோதனைகள்மூலம் கண்டு பிடிக்கப்பட்டது. தொடர்பில்லாத வகையில் 52 பேரை கொரோனா தொற்றிவிட்டதாக சுகாதார அமைச்சு நேற்றுப் பிற்பகல் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. பாதிக்கப் பட்டவர்களில் அறுவர் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள். அவர்கள் இருமுறை அல்லது ஒருமுறை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள். வெளிநாட்டில் இருந்து வந்தோரில் எண்மரை கொரோனா தொற்றியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. நேற்று தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 170 பேருடன் சேர்த்து, சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு 63,791 பேராக உயர்ந்துவிட்டது.