தேசிய தின அணிவகுப்பு, ஆகஸ்ட் 21ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப் படும் என்று தற்காப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
மாறாக, ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று சடங்குபூர்வ அணிவகுப்பு இடம்பெறும். அந்தச் சடங்குபூர்வ அணிவகுப்பு கடந்த ஆண்டு பாடாங்கில் இடம்பெற்றதைப் போன்றதாக இருக்கும். ஆகஸ்ட் 9ஆம் தேதி தேசிய தினத்தன்று மரினா பே மிதக்கும் மேடையில் இடம்பெறவிருந்த அணிவகுப்பு, இம்முறை அது மரினா பே மிதக்கும் மேடையில் இடம்பெறும். அடுத்த மாதம் 7, 8ஆம் தேதிகளில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்த வாணவேடிக்கைகளும் செஞ்சிங்கங்களின் சாகச நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படும்.
இதனிடையே, பிரதமரின் தேசிய தினப் பேரணி உரை ஆகஸ்ட் 29ஆம் தேதி இடம்பெறும் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்து இருக்கிறது.