தனிமைப்படுத்தலின்றி நாடு திரும்ப வழிவகை

தனிமைப்படுத்தலின்றி நாடு திரும்ப வழிவகை

2 mins read

சிங்கப்பூரிலுள்ள மலேசியர்கள் கோரிக்கை

சிங்­கப்­பூ­ரி­லும் மலே­சி­யா­வி­லும் பல மில்­லி­யன் பேர் கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்ள நிலை­யில், இரு தடுப்­பூ­சி­க­ளை­யும் போட்­டுக்­கொண்­டோர்க்­குத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்­கான விதி­மு­றையை அகற்ற வேண்­டும் என்று சிங்­கப்­பூ­ரில் உள்ள மலே­சி­யர்­கள் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

கொவிட்-19 பர­வலை அடுத்து, கடந்த ஆண்டு மார்ச் 18ஆம் தேதி சிங்­கப்­பூ­ரும் மலே­சி­யா­வும் தங்­க­ளது எல்­லை­களை மூடின. இத­னால் சிங்­கப்­பூ­ரில் வசிக்­கும் பல நூறா­யி­ரம் மலே­சி­யர்­கள் தாய்­நாடு திரும்ப முடி­யா­மல், நெடு­நாள்­க­ளா­கத் தங்­க­ளது குடும்­பங்­க­ளை­விட்­டுப் பிரிந்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், சிங்­கப்­பூ­ரில் உள்ள மலே­சி­யர்­கள் தனி­மைப்­படுத்­திக்­கொள்­ளத் தேவை­யின்றி தாய்­நாடு திரும்ப அனு­ம­திக்க வேண்­டும் என்று இணை­யம் வழி­யாக ஒரு கோரிக்கை விடுக்­கப்­பட்­டது. நேற்­றுக் காலை பத்து மணி­வரை, அந்­தக் கோரிக்கை மனு­வில் 9,316 பேர் கையெ­ழுத்­திட்­டுள்­ள­னர்.

இரு வாரங்­க­ளுக்­கு­முன் அந்த இணை­ய­வ­ழிக் கோரிக்­கையை விடுத்த திரு டேனி டே, 43, குறு­கிய காலத்­தில் இத்­தனை பேர் அதில் கையெ­ழுத்­திட்­டி­ருப்­ப­து தமக்கு வியப்­ப­ளிக்­கிறது என்­றார்.

"இங்கு வேலை­செய்­து­வ­ரும் பல­ரு­டன், வேலை இழந்­த­வர்­களும் மலே­சி­யர்­களை மணம்­ முடித்த சிங்­கப்­பூ­ரர்­களும் தங்­கள் அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளை­விட்­டுப் பிரிந்து இருக்­கின்­ற­னர். இது மிகுந்த மன­அ­ழுத்­தத்­தைத் தரு­கிறது. இத்­த­கைய சூழ­லில், ஜோகூர் பாரு­வில் 14 நாள்­கள் ஹோட்­ட­லில் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள பணம் செலுத்­தும்­படி வேலை­யி­ழந்த மலே­சி­யர்­க­ளி­டம் கேட்­பது நியா­ய­மில்லை," என்­றார் திட்ட மேலா­ள­ரா­கப் பணி­யாற்­றும் திரு டேனி.

அத­னால், முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர்க்கு இரு­வார தனி­மைப்­ப­டுத்­தலை அகற்­று­வது குறித்­தும் அதற்­குப் பதி­லாக 'பிசி­ஆர்' பரி­சோ­தனை முடி­விற்­காக ஒரு­நாள் மட்­டும் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­வ­தை­யும் மலே­சிய அர­சாங்­கம் பரி­சீ­லிக்­கும் என்று அவர் நம்­பிக்கை தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் இரு­மு­றை­யும் கொரோனா தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட திரு டேனி, கோலா­லம்­பூ­ரில் வசித்­து­வ­ரும் தமது குடும்­பத்தை, குறிப்­பா­கத் தமது பத்து வயது மக­னைப் பிரிந்து உழல்­வ­தா­கக் கூறி­னார்.

இப்­போ­தைக்கு, மலே­சி­யா­விற்­குத் திரும்­பு­ப­வ­ரும் சிங்­கப்­பூர்க்கு வரு­ப­வ­ரும் மலே­சி­யா­வில் 14 நாள்­கள், சிங்­கப்­பூ­ரில் 14 நாள்­கள் என மொத்­தம் 28 நாள்­கள் அதற்­கு­ரிய இடங்­களில் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும்.

அதற்கு மலேசியாவில் கிட்டத்தட்ட 2,200 ரிங்கிட்டும் சிங்கப்பூரில் 2,200 வெள்ளியும் செலவாகும்.

இத­னி­டையே, எல்­லை­யைத் திறந்­த­பி­றகு ஊழி­யர்­கள் சிர­ம­ம் இல்லாமல் சென்­று­வ­ரு­வதை உறுதி­செய்­யும் வித­மாக, தத்­தம் நாடு­களில் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரும் கொரோனா தடுப்­பூ­சி­களை இரு நாடு­களும் அங்­கீ­க­ரிக்க வகை செய்­யும் உடன்­பாடு தொடர்­பில் சிங்­கப்­பூர், மலே­சிய அர­சாங்­கங்­கள் பணி­யாற்ற வேண்­டும் என்று ஜோகூர் இந்­தி­யர் வர்த்­தகச் சங்­கத்­தின் தலை­வர் பி.சிவ­கு­மார் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.