மலேசியப் பிரதமர்: பாதிப் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்

மலேசியப் பிரதமர்: பாதிப் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்

1 mins read

மலே­சி­யா­வில் பெரி­ய­வர்­களில் கிட்­டத்­தட்ட பாதிப் பேர் குறைந்­தது ஒரு­மு­றை­யே­னும் கொவிட்-19 தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டுள்­ள­தாக அந்­நாட்­டின் பிர­த­மர் முகை­தீன் யாசின் தெரி­வித்­துள்­ளார்.

இது­கு­றித்து தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­விட்­டுள்ள பிர­த­மர், பெரி­ய­வர்­களில் 46.7 விழுக்­காட்­டி­னர் குறைந்­தது ஒரு­மு­றை­யும் 21.8 விழுக்­காட்­டி­னர் இரு­மு­றை­யும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டி­ருப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

இம்­மா­தம் 14ஆம் தேதி முதல் நாளொன்­றுக்கு 400,000 பேர்க்­கு­மேல் தடுப்­பூசி போடப்­ப­டு­வ­தாக அவர் சொன்­னார். சாதனை அள­வாக நேற்று முன்­தி­னம் மட்­டும் 507,050 தடுப்­பூசி போடப்­பட்­ட­தாக அவர் குறிப்­பிட்­டார்.

மலே­சி­யா­வில் இது­வரை 10,920,862 பேர் முதல் தடுப்­பூ­சி­யை­யும் 5,104,054 பேர் இரண்டு தடுப்­பூ­சி­க­ளை­யும் போட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

"தடுப்­பூசி போடு­வ­தன்­மூ­லம், மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்­கை­யை­யும் தீவிர நோய்த்­தொற்­றை­யும் குறைக்க முடி­யும்," என்­றார் திரு முகை­தீன்.

ஒரே நாளில் 15,573 பேர் பாதிப்பு

இதற்­கி­டையே, மலே­சி­யா­வில் புதிய உச்­ச­மாக ஒரே நாளில் 15,573 பேர்க்கு கொரோனா தொற்று உறு­தி­செய்­யப்­பட்­ட­தாக சுகா­தா­ரத் தலைமை இயக்­கு­நர் நூர் ஹிஷாம் அப்­துல்லா நேற்று டுவிட்­டர் வழி­யா­கத் தெரி­வித்­தார். ஆக அதி­க­மாக, சிலாங்­கூரில் 7,672 பேர் பாதிக்­கப்­பட்­ட­னர். கோலா­லம்­பூர் (2,063), கெடா (937), ஜோகூர் (722) ஆகி­யவை அடுத்த இடங்­க­ளைப் பிடித்­தன. அவர்­களில் 'டெல்டா' கிரு­மி­யால் 106 பேர் உட்­பட கவலை தரக்­கூடிய உரு­மா­றிய கிரு­மி­க­ளால் 199 பேர் பாதிக்­கப்பட்­டுள்­ள­தாக டாக்­டர் ஹிஷாம் குறிப்­பிட்­டார்.