'அரசு உதவிக்கு ஈடாக தனியாரும் வாடகை நிவாரணம் தரவேண்டும்'

'அரசு உதவிக்கு ஈடாக தனியாரும் வாடகை நிவாரணம் தரவேண்டும்'

1 mins read

அர­சாங்­கம் வழங்­கும் இரு வார வாடகை நிவா­ர­ணத்­துக்கு ஈடான உத­வியை கடை­க­ளுக்கு வழங்­கவேண் டுமென தனி­யார் வர்த்­த­கக் கட்­டட உரி­மை­யா­ளர்­களுக்கு அரசாங்கம் உத்தரவிட இருப்பதாக நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் கூறி­யுள்­ளார்.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று உரை­யாற்­றிய அவர், "மே, ஜூன் மாதங்­களில் இதே­போன்ற கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­ட­போது வாடகை நிவா­ர­ணத்தை நீட்­டிக்­கு­மாறு தனி­யார் கட்­டட உரி­மை­யாளர்­க­ளி­டம் அர­சாங்­கம் வேண்­டு­கோள் வைத்தது.

"ஆனால், அவ்வாறு உதவி செய்ய ஒருசிலரைத் தவிர எல்லாரும் முன்வர வில்லை என பல கடைக் கார்கள், குறிப்பாக, பாதிக்கப்பட்ட உணவு, பான வர்த்தகம் மற்றும் சில்லறை வர்த்தகத் துறைகளைச் சேர்ந்தவர்கள் தெரிவித் திருந்தார்கள். எனவே, இம்­முறை ஏரா­ள­மான வர்த்­த­கங்­கள் சிர­மங்­களை எதிர்­நோக்கு­வதால் அர­சாங்­கம் வழங்­கும் இரு வாரத்­திற்­கான வாடகை நிவா­ர­ணத்­தைப்­போல தனி­யார் கட்­டட உரி­மை­யா­ளர்­களும் இரு வார வாடகைக் கழிவை கடைகளுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட அரசாங்கம் எண்ணி உள்ளது," என்றார் திரு வோங். தற்போதைய கட்டுப்பாடுகள் நான்குவார காலம் நடப்பில் இருக்கும்.